ஆன்மீகம்

Gowri Panchangam Today

கௌரி பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி? இன்றைய நல்ல நேரம் – Gowri Panchangam Today | இன்றைய பஞ்சாங்கம் 2023 : Indraya Nalla Neram

கௌரி பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?இன்றைய நல்ல நேரம் – Gowri Panchangam Today | இன்றைய பஞ்சாங்கம் 2023 : Indraya Nalla Neram

Gowri Panchangam Today

Gowri Panchangam Today : கௌரி பஞ்சாங்கம் தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் கொண்டு பார்க்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு ஒவ்வொரு நாளும் சுப நாளா அல்லது அசுப நாளா என்பதைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு நாளையும் நன்மை தரும் நாள் தீமை தரும் நாள் என்று பிரிப்பர். நன்மை தரும் நேரத்தில் எந்த ஒரு செயலைச் செய்தாலும், அது நன்மையாக முடியும். தீமை தரும் நேரத்தில் ஒரு செயலை ஆரம்பித்தால் பல வகையான இடையூறு வரும். ஒரு நாளை பதினாறு மூகூர்த்தமாகப் பிரிப்பர். ஒவ்வொரு மூகூர்த்தமும் ஒன்றரை மணி நேரம் நடக்கும்.சூரிய உதய ஆரம்பித்தத்தில் இருந்து மூகூர்த்தம் கணக்கிடப்படுகிறது.

சுப மூகூர்த்தம்

இலாபம், அமிர்தம், சுகம், தனம், உத்தியோகம் ஆகியவை சுப மூகூர்த்தம் ஆகும். இந்த நேரத்தில் நல்ல செயல்களைச் செய்யலாம். இந்நேரத்தில் எந்த செயல் தொடங்கினாலும் வெற்றியில் முடியும்.

அசுப மூகூர்த்தம்

விஷம், ரோகம், சோரம் ஆகியவை அசுப மூகூர்த்தம் ஆகும். இந்நேரத்தில் நல்ல செயல்களைச் செய்வதைத் தவிர்த்தல் வேண்டும்.

சுப மூகூர்த்தங்கள்

இன்றைய பஞ்சாங்கம்

இலாபம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி லாபம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! இந்த சுப முகூர்த்த நேரத்தில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். அதாவது எல்லாம் வெற்றியாக முடியும். இலாப மூகூர்த்தத்தில் சுப காரியம் மற்றும் முக்கியமான காரியம் செய்தால் இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே – கிரக ஓரையும், அதன் பயனும்-Kiraga orai

அமிர்தம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி அமிர்தம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! இந்த சுப முகூர்த்த நேரத்தில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான தகவல்கள் இல்லம் தேடி வரும். அமிர்த மூகூர்த்தத்தில் சுப காரியம் மற்றும் முக்கியமான காரியம் செய்தால் அந்த செயல் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக முடியும். பெரிய அளவில் நன்மை கிடைக்கும்.

சுகம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி சுகம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! சுக மூகூர்த்தத்தில் சுப காரியம் மற்றும் முக்கியமான காரியம் செய்தால் நன்மையில் முடியும். இந்த நேரத்தில் நோய்க்கான மருந்து சாப்பிட வேண்டும். அவ்வாறு, இந்நேரத்தில், நோய்க்கான மருந்து எடுத்துக்கொண்டால் நோய் விரைவில் குணமாகும்.

தனம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் (Gowri panchangam) படி தனம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! தன மூகூர்த்தத்தில் சுப காரியம் மற்றும் முக்கியமான காரியம் செய்தால் அந்த செயலில் வெற்றி கிடைக்கும். லாபம் பெருகும். நன்மதிப்பு பெருகும். பேரும் புகழும் கிடைக்கும்.

உத்தியோகம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி உத்தியோகம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! உத்தியோகம் மூகூர்த்தத்தில் சுப காரியம் மற்றும் முக்கியமான காரியம் செய்தால் வெற்றி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும்.சம்பள உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் மிகுந்த மரியாதை உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும். காரியத்தடை அனைத்தும் விலகும். எடுத்த காரியம் கைகூடும்.

அசுப மூகூர்த்தங்கள்

விஷம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி விஷம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! விஷ மூகூர்த்தத்தில் ஒரு செயலைத் தொடங்கினால், தோல்வி மற்றும் வீண் விவாதம் ஏற்படும். இந்நேரத்தில் நல்ல செயல்களைத் தவிர்த்தல் வேண்டும்.

சோரம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி சோரம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! சோர மூகூர்த்தத்தில் ஒரு செயலைத் தொடங்கினால், தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பொருட்கள் மற்றும் பணம் பாத்திரமாக இருக்காது. வீண் மன உளைச்சல் ஏற்படும். இந்நேரத்தில் நல்ல செயல்களைத் தவிர்த்தல் வேண்டும்.

ரோகம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி ரோகம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! ரோக மூகூர்த்தத்தில் ஒரு செயலைத் தொடங்கினால், தீமை உண்டாகும். இந்நேரத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது. இந்நேரத்தில் மருந்து சாப்பிட்டால், நோயின் தீவிரம் அதிகமாகும்.

கௌரி பஞ்சாங்க அட்டவணைb – Gowri Panchangam for Today

indraya nalla neram

      ஞாயிற்று கிழமை

 பகல்இரவு
6 – 7.30உத்தியோகம்தனம்
7.30 – 9அமிர்தம்சுகம்
9 – 10.30ரோகம்சோரம்
10.30 -12லாபம்விஷம்
12 – 1.30தனம்உத்தியோகம்
1.30 – 3சுகம்அமிர்தம்
3 – 4.30விஷம்ரோகம்
4.30 – 6சோரம்லாபம்

      திங்கள் கிழமை

 பகல்இரவு
6 – 7.30அமிர்தம்சுகம்
7.30 – 9விஷம்சோரம்
9 – 10.30ரோகம்உத்தியோகம்
10.30 -12லாபம்அமிர்தம்
12 – 1.30தனம்ரோகம்
1.30 – 3சுகம்விஷம்
3 – 4.30சோரம்தனம்
4.30 – 6உத்தியோகம்லாபம்

      செவ்வாய் கிழமை

 பகல்இரவு
6 – 7.30ரோகம்சோரம்
7.30 – 9லாபம்உத்தியோகம்
9 – 10.30தனம்சோரம்
10.30 -12சுகம்அமிர்தம்
12 – 1.30விஷம்ரோகம்
1.30 – 3உத்தியோகம்லாபம்
3 – 4.30சோரம்சுகம்
4.30 – 6அமிர்தம்தனம்

      புதன் கிழமை

 பகல்இரவு
6 – 7.30லாபம்உத்தியோகம்
7.30 – 9தனம்அமிர்தம்
9 – 10.30சுகம்ரோகம்
10.30 -12விஷம்லாபம்
12 – 1.30சோரம்சுகம்
1.30 – 3அமிர்தம்தனம்
3 – 4.30உத்தியோகம்விஷம்
4.30 – 6ரோகம்சோரம்

      வியாழன் கிழமை

 பகல்இரவு
6 – 7.30தனம்அமிர்தம்
7.30 – 9சுகம்ரோகம்
9 – 10.30சோரம்விஷம்
10.30 -12அமிர்தம்தனம்
12 – 1.30உத்தியோகம்லாபம்
1.30 – 3விஷம்சுகம்
3 – 4.30ரோகம்சோரம்
4.30 – 6லாபம்உத்தியோகம்

      வெள்ளிக்கிழமை

 பகல்இரவு
6 – 7.30சுகம்ரோகம்
7.30 – 9சோரம்லாபம்
9 – 10.30உத்தியோகம்தனம்
10.30 -12விஷம்சுகம்
12 – 1.30அமிர்தம்சோரம்
1.30 – 3தனம்உத்தியோகம்
3 – 4.30லாபம்விஷம்
4.30 – 6சுகம்அமிர்தம்

      சனிக்கிழமை

 பகல்இரவு
6 – 7.30சோரம்லாபம்
7.30 – 9உத்தியோகம்தனம்
9 – 10.30விஷம்சுகம்
10.30 -12அமிர்தம்விஷம்
12 – 1.30ரோகம்உத்தியோகம்
1.30 – 3லாபம்சோரம்
3 – 4.30சுகம்அமிர்தம்
4.30 – 6தனம்ரோகம்

Questions on Gowri Panchangam:

  1. What is Gowri Panchangam used for? Answer: Gowri Panchangam Is primarily used to calculate the auspicious Date and Time for the Subha Muhurtha Time. Generally, Tamil Panchangam helped to find Hindu Festivals based on Stars and Planets.
  2. What is the good time for today? Answer: Nalla Neram (Good Time) is the time of subha Muhurtham.

இதையும் படிக்கலாமே

ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றக்கூடிய இந்த பொருளை உச்சந்தலையில் இப்படி வைத்தால் போதும், வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்

பஞ்சாங்கம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள – Click here

கௌரி பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி? இன்றைய நல்ல நேரம் – Gowri Panchangam Today | இன்றைய பஞ்சாங்கம் 2023 : Indraya Nalla Neram Read More »

பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham

பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham

பிரதோஷம்

பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிப்பட்டால், குடும்பத்தில் ஒற்றுமையும், தொழிலில் லாபமும், படிப்பில் வெற்றியும் உண்டாகும். மாதம் இருமுறை பிரதோஷம் வரும். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என இரண்டு பிரதோஷம் வரும். மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோஷ வழிபாட்டின் காலமாகும். இந்நேரத்தில் சிவபெருமானுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு அபிஷேகம் நடைபெறும்.

சிவனின் வாகனம்

பிரதோஷம்

சிவனின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடக்கும். மூலவருக்கு நடக்கும் ஆராதனை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே பார்த்தால் தோஷம் அனைத்தும் விலகும்.

24 பிரதோஷத்திற்கு சிவன் கோவிலுக்குப் போக முடியாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை பிரதோஷத்திற்குச் சென்றால், வருடம் முழுக்க சென்ற பலன் கிடைக்கும். பிரதோஷ நாளில் காலையில் நீராடி, உண்ணா நோம்பு இருந்து, மாலை கோவிலுக்குச் சென்று வழிபட்டால் நன்மை பெருகும்.

ஞாயிறு பிரதோஷம்

ஞாயிறு பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். கவலைகள் பறந்தோடும். மகிழ்ச்சி பெருகும்.

திங்கள் பிரதோஷம்

திங்கள் பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், மனதில் ஆனந்தம், அமைதி, மன வலிமை உண்டாகும்.

செவ்வாய் பிரதோஷம்

செவ்வாய் பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், தீமை அனைத்தும் விலகும். கடன் தொல்லை தீரும்.

புதன் பிரதோஷம்

புதன் பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், அறிவு ஆற்றல் பெருகும். தீமை அனைத்தும் விலகும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

வியாழன் பிரதோஷம்

வியாழன் பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், தோஷம், ஊழ்வினை, சாபம் அனைத்தும் நீங்கும்.

வெள்ளி பிரதோஷம்

வெள்ளி பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், மங்கலம் மற்றும் செல்வம் பெருகும்.

சனி பிரதோஷம்

சனி பிரதோஷம் அன்று இறைவனை வழிப்பட்டால், துன்பங்கள் அனைத்தும் விலகும். பாவம் விலகும். நல்வாழ்வு அமையும்.

இதையும் படிக்கலாமே –

ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு-Chitra pournami 2023

பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham Read More »

கிரக ஓரையும், அதன் பயனும்-Kiraga orai

கிரக ஓரையும், அதன் பயனும்-Kiraga orai

கிரக ஓரை

கதிரவன் உதிக்கும் நேரம் தொடங்கி ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்க நேரத்தை ஓரை என்பர். ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரை கிடையாது.

சூரிய ஓரை

சூரிய ஓரை நேரத்தில் வேலைக்கு முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். பாக பிரிவினை, பாத்திரப் பதிவு செய்தால் நன்மையில் முடியும். மேல் அதிகாரிகளைச் சந்தித்தால் நன்மை உண்டாகும். வேலைக்கானப் பதவி பொறுப்பை ஏற்கலாம். நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்டால் நோய் குணமாகும். வேலை மற்றும் உயர் படிப்புக்கு விண்ணப்பித்தால் முன்னேற்றம் கிடைக்கும். உயர் அதிகாரியைச் சந்தித்தால் உதவி மற்றும் ஆலோசனைக் கிடைக்கும்.

சந்திர ஓரை

சந்திர ஓரை நேரத்தில் மாடு, ஆடு முதலிய கால்நடைகளை வாங்கலாம். கல்வி கற்கத் தொடங்கலாம். நகைகள் வாங்கினால், மேலும், நகை வாங்ககூடிய வாய்ப்பு கிடைக்கும். துணி, மணி வாங்கலாம். கல்யாணத்திற்கு நாள் குறிக்கலாம். பெண் பார்க்கலாம்.

செவ்வாய் ஓரை

செவ்வாய் ஓரை நேரத்தில் தெய்வ வழிப்பாட்டை மேற்கொள்ளலாம். சுப காரியங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

புதன் ஓரை

புதன் ஓரையில் படிப்பு சார்ந்த முயற்சிளைத் தொடங்கலாம். சுப காரியங்கள் குறித்து பேசலாம். போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தால் வெற்றி நிச்சயம்.

குரு ஓரை

குரு ஓரையில் அனைத்து சுபகாரியங்களையும் செய்யலாம். திருமணத்திற்கு நகை, ஆடை வாங்கலாம். தொழில் தொடங்கினால், லாபம் நிச்சயம். விவசாயம் இந்நேரத்தில் செய்தால் விளைச்சல் பன்மடங்கு பெருகும்.

சுக்கிர ஓரை

சுக்கிர ஓரை நேரத்தில் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம். ஆடை மற்றும் நகைகள் எடுக்கலாம். புதிய பொருட்கள் வாங்கலாம். இந்நேரத்தில் மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகும்.

சுப ஓரைகள்

குரு, சுக்கிரன், சூரியன், வளர்பிறை சந்திர ஓரை ஆகியவை சுப ஓரைகளாகும்.

அசுப ஓரைகள்

செவ்வாய், சனி, கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறை சந்திர ஓரை ஆகியவை அசுப ஓரைகளாகும்.

இதையும் படிக்கலாமே –

கௌரி பஞ்சாங்கம் இன்றைய நல்ல நேரம்…- Gowri panchangam parkum murai

கிரக ஓரையும், அதன் பயனும்-Kiraga orai Read More »

பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil

பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil

Palli Sollum Palan

 Palli sollum palan -கடவுளின் செய்தியாளன், கடவுளின் தூதுவனான பல்லி மூலம் கடவுள் நமக்கு நடவிருக்கும் நன்மை, தீமைகளை முன்கூட்டியே கூறுவார். அதையறிந்து முறையாக செயல்பட்டால், நன்மையின் பலன்களையும், தீமைகள் நம்மை அண்டாமலும் நாம் நம்மை காத்துக்கொள்ளலாம். பல்லி எழுப்பக்கூடிய சத்தத்தை வைத்து கூட நல்லது மற்றும் கெட்டதைக் கணிப்பர்.

பல்லி எழுப்பக்கூடிய சத்தங்களின் வகைகளும், பலன்களும்…

Palli Sollum Palan

பல்லியானது ஒரு முறை சத்தம் எழுப்பினால் துன்பம் உண்டாகும்.

பல்லியானது இரண்டு முறை சத்தம் எழுப்பினால் தனலாபம் கிடைக்கும்.

பல்லியானது மூன்று முறை சத்தம் எழுப்பினால் மரணம் செய்தி வரும்.

பல்லியானது நான்கு முறை சத்தம் எழுப்பினால் சௌபாக்கியம் உண்டாகும்.

பல்லியானது ஐந்து முறை சத்தம் எழுப்பினால்

பல்லியானது ஆறு முறை சத்தம் எழுப்பினால் பீடை உண்டாகும்.

பல்லியானது ஏழு மற்றும் எட்டு முறை சத்தம் எழுப்பினால் அகமகிழ்வு உண்டாகும்.

நம் அனைவரது வீட்டிலும் பல்லி நிச்சயமாக இருக்கும். எதிர்பராத விதமாக பல்லி நம் மீது விழுவதும் உண்டு. அதனால், பயம் கொள்ளத் தேவையில்லை. பல்லி எழுப்பக்கூடிய சத்தத்தை வைத்து கூட நல்லது மற்றும் கெட்டதைக் கணிப்பர். எந்த திசையில் இருந்து பல்லி சத்தம் எழுப்பினால் என்ன பலன் என்பதைப் பற்றிக் காண்போம்.

palli sollum palan

வடக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

பல்லியானது வாயு மூலையான வடக்கு திசையிலிருந்து சத்தமிட்டால் சுப செய்திகள் வீட்டை நோக்கி வரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.

கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

பல்லியானது கிழக்கு திசையிலிருந்து சத்தமிட்டால் நல்லது கிடையாது. இதனால், நம் மனதில் தேவையற்ற பயம் வரக்கூடும். கெட்ட செய்திகள் வரும். குடும்பத்தில் குடும்ப தலைவனுக்கோ, தலைவிக்கோ தேவையற்ற மனக்கவலை உண்டாகும்.

வடகிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

பல்லியானது வடகிழக்கு திசையிலிருந்து சத்தமிட்டால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் செய்யும் இடத்தில் இடையூறு ஏற்பட வாய்ப்புண்டு. வெளியூர் பயணங்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

வடமேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

வடமேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் இறையருள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உறவினர் வருகையால் நற்செய்தி உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் புதியதாக வீட்டிற்கு வரும் பெண்களால் குடும்பத் தகராறு உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனை உண்டாகும். பெண்களுக்கு உடல்நலபாதிப்பு உண்டாகும்.

தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு உறவினர் வருவார்கள். அவர்களால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

தெற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

தெற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டில் சுப நிகழ்ச்சி குறித்த பேச்சு தொடங்கும். சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். நன்மை தரக்கூடிய விஷயம் நடக்கும்.

தெற்கு மற்றும் வடக்கில் இரண்டு பல்லிகள் சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

Palli Sollum Palan

தெற்கு மற்றும் வடக்கில் இரண்டு பல்லிகள் சத்தமிட்டால் தொழிலில் நஷ்டம் உண்டாகும். வீட்டில் உள்ள ஆண்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. பணவிரயம் ஆகும்.

செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை நாளில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை நாளில் பல்லி சத்தமிட்டால் நன்மை உண்டாகும். பல்லி சத்தம் இட்ட இடத்திற்குச் சென்று, இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து மலர்களைத் தூவி வணங்கினால் நாம் நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எடுத்த காரியம் கைகூடும்.

வீட்டின் தரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

வீட்டின் தரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். காரியசித்தி உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.

வீட்டின் மேற்கூரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?

வீட்டின் மேற்கூரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் பயணம் மேற்கொள்ள வாய்ப்புண்டு. காரியத்தடை உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.

palli sollum palan

பல்லி சொல்லும் பலன் அட்டவணை…

கிழக்கு திசை
ஞாயிற்றுக்கிழமைபயம்
திங்கள்கிழமைதன லாபம்
செவ்வாய்கிழமைசம்பத்து
புதன்கிழமைசந்தோஷம்
வியாழன்கிழமைகெட்ட சகுனம்
வெள்ளிக்கிழமைசுப செய்தி
சனிக்கிழமைநற்செய்தி
தென் கிழக்கு திசை
ஞாயிற்றுக்கிழமைதீமை
திங்கள்கிழமைகலகம்
செவ்வாய்கிழமைலாபம்
புதன்கிழமைதனலாபம்
வியாழன்கிழமைபுகழ்
வெள்ளிக்கிழமைலட்சுமி கடாட்சம்
சனிக்கிழமைபொருட்கள்
தெற்கு திசை
ஞாயிற்றுக்கிழமைசுகம்
திங்கள்கிழமைபகை
செவ்வாய்கிழமைவிசனம்
புதன்கிழமைதுன்பம்
வியாழன்கிழமைதனலாபம்
வெள்ளிக்கிழமைவரவு
சனிக்கிழமைபதவி உயர்வு
  
தென்மேற்கு திசை
ஞாயிற்றுக்கிழமைவரவு
திங்கள்கிழமைவிரோதம்
செவ்வாய்கிழமைஎதிரிகள்
புதன்கிழமைகஷ்டம்
வியாழன்கிழமைகாரியச்சித்தி
வெள்ளிக்கிழமைபணவரவு
சனிக்கிழமைரோகம்
மேற்கு திசை
ஞாயிற்றுக்கிழமைசண்டை
திங்கள்கிழமைராஜ தரிசனம்
செவ்வாய்கிழமைஅனுகூலம்
புதன்கிழமைபயணம்
வியாழன்கிழமைநஷ்டம்
வெள்ளிக்கிழமைசந்தோஷம்
சனிக்கிழமைரோகம்
வடமேற்கு திசை
ஞாயிற்றுக்கிழமைவஸ்திரம்
திங்கள்கிழமைகெட்ட சகுனம்
செவ்வாய்கிழமைபயணம்
புதன்கிழமைபொருட்கள் பழுது
வியாழன்கிழமைநற்செய்தி
வெள்ளிக்கிழமைகலகம்
சனிக்கிழமைஸ்திரி
வடக்கு திசை
ஞாயிற்றுக்கிழமைதிரவியம்
திங்கள்கிழமைவஸ்திரம்
செவ்வாய்கிழமைசத்ரு பயம்
புதன்கிழமைகலகம்
வியாழன்கிழமைகாரியச்சித்தி
வெள்ளிக்கிழமைகலகம்
சனிக்கிழமைபணவரவு
வடகிழக்கு திசை
ஞாயிற்றுக்கிழமைலாபம்
திங்கள்கிழமைகல்யாணம்
செவ்வாய்கிழமைவாகனம்
புதன்கிழமைதோல்வி
வியாழன்கிழமைபோஜனம்
வெள்ளிக்கிழமைசத்ரு பயம்
சனிக்கிழமைதிருடர் பயம்

பல்லி சொல்லும் பலன் உண்மையா?

பல்லி சொல்லக்கூடிய பலன் உண்மையாகும். பண்டையகாலத்தில் கௌளி சாஸ்திரம் என்ற நூலே இருந்துள்ளது. அந்த புத்தகத்தில் பல்லி சொல்லும் பலன்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அது மக்கள் வாழ்வியலில் நடக்கக்கூடிய நன்மை, தீமைகளை முன்கூட்டியே கூறுவதாக அமைந்துள்ளது.

இரவில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?

செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை நாட்களின் இரவில் பல்லி கத்தினால், நமக்கு வெற்றி உணடாகும் என்ற அர்த்தமாகும். மற்ற நாட்களில் பல்லி கத்தினால் நமக்கு மிகுந்த கவனம் தேவை. எந்தவொரு செயலையும் பன்முறை யோசித்து செய்ய வேண்டும்.

கோவிலில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?

கோவிலில் இறைவனை வணங்கும்போது  பல்லிகள் சத்தமிட்டால் நமது வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பிக்கை உண்டு. கடவுளின் செய்தியாளன், கடவுளின் தூதுவனான பல்லியின் மூலம் கடவுள் நம்மிடம் பேச விரும்புவார். நமது வேண்டுதல் நிறைவேறும் என்றும், நாம் தொடங்விருக்கும் செயல் வெற்றி அடையும் என்றும் பல்லிகள் கோவிலில் பலன் சொல்லும்.

பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?

வீட்டின் பூஜை அறையில் பல்லி இருந்தால் நம் வீட்டில் செல்வம் செழிப்பு அதிகமாகும். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் லாபமானது பெருகும்.

தலைக்கு மேல் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?

மிகவும் சந்தோஷமான தருணம் ஏற்பட போகிறது என்று அர்த்தம் ஆகும்.

பல்லி வீட்டில் இறந்தால் பலன் என்ன தெரியுமா?

இறந்த பல்லியைப் பார்ப்பது நல்லதல்ல. அப்படி பார்க்க நேர்ந்தால் குலதெய்வத்தை வழிபடுதல் வேண்டும். பிரசாதம் வழங்குதல் போன்ற பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  இறந்த பல்லியைப் பார்க்க மற்றவர்களை ஒருபோதும் அழைக்க கூடாது.  இறந்த பல்லியை உடனடியாக அகற்ற வேண்டும்.

வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் என்ன தெரியுமா?

நமக்கு நடவிருக்கும் நன்மை, தீமைகளை உணர்த்தும் அறிகுறியாகும். வீட்டில் பல்லி கத்துவது என்பது கடவுள் நம்மிடம் உரையாட விரும்புகிறார் என்ற அர்த்தமாகும்.

இதையும் படிக்கலாமே – பல்லி விழும் பலன்கள் 2023 – Palli Vilum Palan in Tamil நம் உடலில் தலை,இடது கை,வலது கை,வலது கால், தலை உச்சி என எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil Read More »

இந்த மரங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும்…

இந்த மரங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும்…

செல்வம் பெருகும்

வீட்டுக்கோர் மரம் வளர்க்க வேண்டும். மரம் மற்றும் செடிகளை வளர்ப்பதால், தூய்மையான காற்றும், நேர்மறையான எண்ணங்களும் உண்டாகும். வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்களைப் பற்றி காண்போம்.

வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்

வீட்டின் முன்புறம்

வீட்டின் முன்புறத்தில் வேப்பமரம், மாதுளை, துளசி, மல்லிகை, முல்லை, மணிபிளான்ட் ஆகிய மரம் மற்றும் செடிகளை வளர்த்தால், வீட்டில் மங்கலம் பெருகும்.

வீட்டின் பின்புறம்

வீட்டின் பின்புறத்தில் முருங்கை, மாமரம், பலாமரம், கொன்றைமரம், பாக்கு மரம், நார்த்தை மரம், வேப்பமரம் ஆகிய மரங்களை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

வேலி ஓரம்

வேலி ஓரத்தில் பப்பாளி மரத்தை வளர்த்து வந்ததால், மகிழ்ச்சி பெருகும்.

தண்ணீர் மிகுந்த இடங்கள்

தண்ணீர் மிகுந்த இடங்களில்  வாழை மற்றும் தென்னை மரங்களை வளர்த்து வந்தால் ஆயுள் பெருகும்.

வீட்டில் வளர்க்க கூடாதவை

பனைமரம், அரச மரம், ஆலமரம், செண்பகமரம், புளியமரம், அவரை செடி, பாகற்காய் ஆகியவற்றை வளர்க்க கூடாது.

இதையும் படிக்கலாமே

வேர்க்குருவா இனி வரவே வராது…Verkuru

இந்த மரங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும்… Read More »

வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும் -Selvam peruga

குபேரர் அருள் கிடைக்க இதை செய்தால் போதும்…

செல்வம் பெருக

செல்வங்களை எல்லாம் பாதுகாக்கும் அதிபதி குபேரர்.  அவரின் அருளைப் பெற பல வேண்டுதல்களை வைத்தும் பலன் இல்லையா? இதை செய்யுங்கள் போதும் … குபேரர் உங்கள் இல்லம் தேடி வருவார்.

வடக்கு திசை

குபேரருக்குரிய திசை வடக்கு. ஆகையால், வீட்டிலும், தொழில் சாலையிலும் , வியாபர இடங்களிலும் பணப்பெட்டியை வடக்கு நோக்கி வைத்தால் செல்வம் பெருகும். லாபம் இரட்டிக்கும்.

அவல்

 சாம்பா அரிசியில் செய்த அவல் குபேரருக்கு மிகவும் பிடிக்கும். இந்த அவலை வைத்து குபேரரை படைத்தால், உள்ளம் மகிழ்வார். வீட்டிலும் பணம் பெருகும்.

ஊறுகாய்

குபேரருக்கு ஊறுகாய் மிகவும் பிடிக்கும். வீட்டின் சமையலறையில் விதவிதமான ஊறுகாய்களை வைத்தாலே போதும், குபேரர் இல்லம் தேடி வருவார்.

விளக்கு

தாமரை திரி போட்டு விளக்கேற்றி , குபேரரை வணங்கி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

லட்சுமி குபேரர் படத்தை 48 நாட்கள் அர்ச்சனை செய்து வணங்கினால் செல்வம் பெருகும்.

இதையும் படிக்கலாமே

வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்- Selvam peruga

வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும் -Selvam peruga Read More »

வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்- Selvam peruga

வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்…

செல்வம் பெருக

எவ்வளவு கடினமாக உழைத்தும் பணம் வந்த வழி தெரியாமல் செலவு ஆகிறதா… வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? பணத்தைச் சேமித்து வைக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்…

சிறிய துணியில் பச்சை கற்பூரம், ஏலக்காய், சோம்பு வைத்து கட்டி அதனை பணப்பெட்டியில் போட்டு வைத்தால், செல்வம் பெருகும்.

சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கினால் செல்வம் பெருகும்.

வியாழன் குரு ஓரையில் சுக்ரன் மற்றும் மகாலட்சுமியை மல்லிகையால் அர்ச்சனை செய்து 33 வராம் வணங்கி வந்தால்,  செல்வம் பெருகும்.   கஜலட்சுமி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வாசல்காலில் வைத்து வணங்கி வந்தால் செல்வம் பெருகும்.

கற்பக விநாயகரை அருகம்புல் அணிவித்து  சதுர்த்தி நாளில் வணங்கி வந்தால் லாபம் பெருகும்.

இதையும் படிக்கலாமே

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்- Selvam peruga Read More »

செல்வம் பெருக இதை செய்தால் போதும்…- Selvam peruka

செல்வம் பெருக இதை செய்தால் போதும்…- Selvam peruka

செல்வம் பெருக

தொழிலில் முன்னேற்றம் பெறவும், எடுத்த காரியம் கைகூடவும் எவ்வளவோ முயற்சி செய்தும் பயன் இல்லையா? இந்த மரத்தை மட்டும் வீட்டில் வைத்தால் போதும் லாபம் பெருகும்.

பூஜையறை

புரச மரத்திலிருந்து ஒரு சிறிய குச்சியை எடுத்து மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி, பின்னர் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வீட்டின் சாமி ரூமில் வைத்து படைத்து வந்தால், பண பிரச்சனை அனைத்தும் தீரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும். செல்வ செழிப்பு மேலோங்கும்.

புரச மரத்தால் செய்த கதவு

புரச மரத்தைக் கொண்டு பூஜை அறையில் கதவு செய்து வைத்தாலும், நிலை வாசலில் கதவு செய்து வைத்தாலும் செல்வ செழிப்பு உண்டாகும். செல்வ செழிப்பை ஈர்க்ககூடிய சக்தி இந்த மரத்திற்கு உண்டு.

இதையும் படிக்கலாமே

பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil

செல்வம் பெருக இதை செய்தால் போதும்…- Selvam peruka Read More »

பெருமாள் அருளால் செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்கள் போதும் – Selvam peruga

பெருமாள் அருளால் செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்கள் போதும்…

செல்வம் பெருக

செல்வ செழிப்போடு மங்கலமாக வாழ வேண்டும் என கடினமாக உழைக்கும் மக்களே….ஏழுமலையானை மனம் உருகி வழிபட்டு வந்தால் பெருமாள் இல்லம் தேடி வருவார். வீட்டில் செல்வ செழிப்பு மேலோங்கும்.

துளசி

வீட்டின் முன் துளசி செடியை நிச்சயமாக  வளர்க்க வேண்டும். துளசி செடியை வீட்டில் வளர்த்து வந்தால் செல்வம் பெருகும். அதிஷ்டம் உங்கள் இல்லம் தேடி வரும். தெய்வத்  தன்மையான இந்த செடி பெருமாளுக்கு உகந்தது ஆகும். துளசி செடியை தினமும் வணங்கி வர வேண்டும். குளிக்காமல் துளசி இலையைப் பறிக்கவோ, சாப்பிடவோ கூடாது.

ஏகாதசி

ஏகாதசி அன்று பெருமாள் பாதம் வரைந்து ,  அர்ச்சனை செய்து வழிபட்டால் செல்வம் பெருகும். தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்டால் சகல ஜஸ்வர்யமும் இல்லம் தேடி வரும்.

பச்சை வளையல்

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவலில் தாயாருக்கு ஆராதனை செய்து, பச்சை வளையலைத் தாயாருக்கு அணிவித்து வந்தால் பணம் பெருகும்.

திருப்பதி

வருடத்திற்கு ஒருமுறையாவது திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்து வந்தால் லட்சாதிபதி ஆகலாம்.

தங்க நகை அணிவித்த திருப்பதி ஏழுமலையானை காலை எழுந்தவுடன் பார்த்து வந்தால் பணம் பெருகும்.

பிரசாதம்

பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தைப் பெற்று , தினமும் பெருமாளை வணங்கி வந்தால் செல்வம் பெருகும்.

பெருமாளுக்கு சூடிய சிவப்பு வண்ண ரோஜாவைக் காய வைத்து, பணம் வைக்கும் பெட்டியிலும், வீட்டின் பூஜை அறையிலும் வைத்தால் செல்வம் பெருகும்.

இதையும் படிக்கலாமே

பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham

பெருமாள் அருளால் செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்கள் போதும் – Selvam peruga Read More »

மகா  லட்சுமி அருளால் செல்வம் பெருக இந்த செடிகளை  மட்டும் வீட்டில் வளர்த்தால் போதும்

மகா  லட்சுமி அருளால் செல்வம் பெருக இந்த செடிகளை  மட்டும் வீட்டில் வளர்த்தால் போதும்…

செல்வ செழிப்போடு மங்கலமாக வாழ வேண்டும் என கடினமாக உழைக்கும் மக்களே… இந்த செடிகளை உங்கள் வீட்டில் வளர்த்தால் போதும். மகா லட்சுமி இல்லம் தேடி வருவார். வீட்டில் செல்வ செழிப்பு மேலோங்கும்.

செல்வம் பெருக

துளசி

செல்வம் பெருக

வீட்டின் முன் துளசி செடியை நிச்சயமாக  வளர்க்க வேண்டும். துளசி செடியை வீட்டில் வளர்த்து வந்தால் செல்வம் பெருகும். அதிஷ்டம் உங்கள் இல்லம் தேடி வரும். தெய்வத்  தன்மையான இந்த செடி பெருமாளுக்கு உகந்தது ஆகும். துளசி செடியை தினமும் வணங்கி வர வேண்டும். குளிக்காமல் துளசி இலையைப் பறிக்கவோ, சாப்பிடவோ கூடாது.

மனோரஞ்சித செடி

செல்வம் பெருக

மனோரஞ்சித செடியை வீட்டில் வளர்த்து வந்தால் மகா லட்சுமி உள்ளம் மகிழ்ந்து இல்லம்  தேடி வருவார். மனோரஞ்சித செடி லட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமான செடியாகும். இந்த செடி வீட்டில் இருந்தால் லட்சுமி தேவி வீட்டில் நிலைத்து இருப்பாள்.

மலர்கள்

செல்வம் பெருக

மல்லிகை, முல்லை, பாரிஜாதம், மஞ்சள் அலரி, சிவப்பு செம்பருத்தி இந்த செடிகளை வீட்டின முன்புறம் நட்டு வளர்த்தால் லட்சுமி தேவி இல்லம் தேடி வருவாள். இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் செல்வம் பெருகும்.

மருதாணி, மாதுளை

செல்வம் பெருக

மருதாணி மற்றும் மாதுளை செடிகளை வீட்டின் முன்புறம் நட்டு வைத்து நன்றாக பராமரித்து வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும்.

இதையும் படிக்கலாமே

தும்பையின் மருத்துவக்குணங்கள் -Thumbai Poo Benefits

மகா  லட்சுமி அருளால் செல்வம் பெருக இந்த செடிகளை  மட்டும் வீட்டில் வளர்த்தால் போதும் Read More »

தீய சக்திகளை விரட்டியடிக்கும் மணி ஓசை… – Theeya sakthi

தீய சக்திகளை விரட்டியடிக்கும் மணி ஓசை… – Theeya sakthi

தீய சக்தி

கோயிலின் வரக்கூடிய மணி ஓசையானது உள்ளத்தில் மகிழ்ச்சியையும், அமைதியையும் உருவாக்குகிறது எதிர்மறை எண்ணங்களைப் போக்கி நேர்மறை எண்ணங்களையும் கொடுக்கக்கூடியது. தீய சக்திகளை விரட்டி அடிக்கக்கூடிய ஆற்றலை உடையது மணியோசை.

நுழை வாசல்

கோவிலின் நுழைவாசலில் நுழைந்தாலே மனம் அமைதி பெறும். கடவுளைக் காண வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை மனதில் கொண்டு கண்கள் அலைமோத, பாதம் வேகமாக நடக்க, வாயோ மந்திரத்தை உச்சரிக்க, மனதில் கடவுளை மட்டுமே நினைத்து முன்னேறி நடந்தால் இறைவனின் அருளைப் பெறலாம்.

நேர் மறை எண்ணங்கள்

 நெற்றியில் அணியக்கூடிய குங்குமம் , சந்தனம், கழுத்தில் அணியக்கூடிய சாமி கயிறு கோவிலில் ஒலிக்கக்கூடிய மணி ஓசை, பக்தி பாடல் என அனைத்துமே எதிர்மறை எண்ணங்ககளைப் போக்கி நேர்மறை எண்ணங்களை உருவாக்கக்கூடியது ஆகும்.

கோவில் மணி

தீய சக்தி

கோவில் மணியிலிருந்து வரக்கூடிய மணியோசையானது நேர்மறை எண்ணங்களையும், மன அமைதியையும் தருகிறது. கோவில் மணியிலிருந்து வரக்கூடிய மணியோசையானது எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கக்கூடியது. கோவில் மணியிலிருந்து வரக்கூடிய மணி ஓசை செல்லக்கூடிய திசை வரைக்கும் நேர்மறை சக்தியே நிறைந்திருக்கும். கோவில் மணியிலிருந்து வரக்கூடிய மணியோசையானது மனிதனின் மனம், உடல், ஆன்மா அனைத்திற்கும் ஆற்றலை அளிக்கக்கூடியது.

வீட்டின் மணியோசை

தீய சக்தி

 வீட்டில் மங்கலம் பெருக வேண்டும் என்றால், நிச்சயம் மணியோசை ஒலிக்க வேண்டும். வீடுகளில் கடவுளை வணங்கும்போது நிச்சயம் மணி அடிக்க வேண்டும். அவ்வாறு அடிப்பதன் மூலம் எதிர்மறை மற்றும்  கெட்ட சக்திகள் விலகி ஓடும். மணியோசை கேட்பதால்  குடும்பத்தார் உடன் வீண் விவாதங்கள், சண்டை, சச்சரவு ஆகியவை குறையும். வீட்டின் மற்றும் குடும்பத்தார் மீது உள்ள கண் திருஷ்டி மற்றும் வாஸ்து சார்ந்த பிரச்சனை என அனைத்தும பறந்தோடும்.

இதையும் படிக்கலாமே

மகிழ்ச்சியையும், மங்கலத்தையும் பெருக்கக்கூடிய வளையல்… வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா-Valaiyal

தீய சக்திகளை விரட்டியடிக்கும் மணி ஓசை… – Theeya sakthi Read More »

பல்லி விழும் பலன்கள் 2023 – Palli Vilum Palan in Tamil நம் உடலில் தலை,இடது கை,வலது கை,வலது கால், தலை உச்சி என எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லி விழும் பலன்கள் – Palli Vilum Palan in Tamil நம் உடலில் தலை,இடது கை,வலது கை,வலது கால், தலை உச்சி என எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

Palli Vilum Palan

நம் அனைவரது வீட்டிலும் பல்லி நிச்சயமாக இருக்கும். எதிர்பராத விதமாக பல்லி நம் மீது விழுவதும் உண்டு. அதனால், பயம் கொள்ளத் தேவையில்லை. பல்லி நம் மேலே விழுவதால் வரவிருக்கும் நல்லது மற்றும் கெட்டதை சுட்டிக் காட்டுவதாக அமையும். கடவுள் மனிதனோடு பேசுவதற்கு பல வழிகளை வைத்துள்ளார். கடவுள் ஒரு சில நேரங்களில் ஒரு சில தகவல்களை நமக்குக் குறிப்பால் உணர்த்துவார். அந்த வகையில் கடவுளின் செய்தியாளான பல்லி மூலம் நமக்கு நடவிருக்கும் நன்மை, தீமைகளைச் சுட்டிக்காட்டுவார்.

பல்லிக்கு தெய்வீக சக்திகள் இருக்கின்றன.  காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலிலும் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலிலும் பல்லியின் உருவங்கள் இடம்பெற்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் பல்லியை தெய்வமாக வணங்குகின்றனர். அங்கு இருக்கும் பல்லியைத் தொட்டு வணங்கினால், நமது தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். பல்லி என்பது நவகிரகங்களில் கேது பகவானை குறிக்கிறது. மேலும், பல்லியானது, பெருமாளின் அம்சமாக உள்ளது. பல்லி சத்தமிடுவது முதல் அது நம் உடலில் எங்கே வந்து விழுகிறது என்பது வரை அதன் செயல்கள் ஒவ்வொன்றும் பல முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

Palli Vilum Palan in Tamil

பல்லி தலையில் விழுந்தால் கெட்ட சகுனம் ஆகும். தலையின் இடதுபக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும் அல்லது மரணச் செய்தியானது வரும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் ஏற்படும்.

பல்லி உச்சந்தலையில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லி தலையில் விழுந்தால் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக உள்ளது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில் பல்லி விழுந்தால் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம்.

பல்லி நெற்றியில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் புகழ் உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் மங்கலம் வீடு தேடி வரும். நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது.

பல்லி தொடையில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

தொடையின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் துன்பம் நேரும். தொடையின் வலது பகுதியில் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். தொடையில் பல்லி விழுந்தால் மன சஞ்சலம் ஏற்படும்.

பல்லி முதுகில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

முதுகின்  இடது பகுதியில் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகின்  வலது பகுதியில் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.

பல்லி தோளில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

தோளின்  இடது பகுதியில் பல்லி விழுந்தால் பேரின்ப செய்தி கேட்க நேரிடும். தோளின்  வலது பகுதியில் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

பல்லி மணிகட்டில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

Palli Vilum Palan in Tamil

மணிகட்டின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் புகழ் உண்டாகும். மணிகட்டின்  வலது பகுதியில் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும்.

பல்லி கணுக்காலில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

கணுகாலின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். கணுகாலின் வலது பகுதியில் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.

பல்லி புருவத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லி புருவத்தில் விழுந்தால் உயர் பதவி உள்ளவரிடமிருந்து உதவி கிடைக்கும். புருவங்களில் பல்லி விழுவது என்பது மிகப்பெரிய பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதைக் குறிக்கும். ஏற்கனவே அதிகாரம்மிக்க பதவிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பல்லி கண்ணில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

கண்ணின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் நல்லது நடக்கும் மற்றும் அன்பு பெருகும். கண்ணின்  வலது பகுதியில் பல்லி விழுந்தால் தோல்வி மற்றும் மன அழுத்தம் உண்டாகும்.

பல்லி கைவிரலில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

கைவிரலில் வலது  பகுதியில் பல்லி விழுந்தால் பரிசு பெற வாய்ப்பு உள்ளது. கைவிரலில் இடது பகுதியில் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும்.

பல்லி கழுத்தில்  விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

கழுத்தின் வலது  பகுதியில் பல்லி விழுந்தால் பகை தொடரும். கழுத்தின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்

பல்லி மார்பில்  விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

Palli Vilum Palan in Tamil

மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் நன்மை கிடைக்கும்.

பல்லி உதட்டில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லி மேல் உதட்டில் விழுந்தால் எதிர்ப்பு வரும். பல்லி கீழ் உதட்டில் விழுந்தால் லாபம் கிடைக்கும்.

தலைமுடியில் பல்லி விழுவது அதிர்ஷ்டத்தின் அறிகுறி

தலை முடியில் பட்டு பல்லி ஓடுவது என்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறி உள்ளது. சில நேரங்களில் நமக்கு நன்மைகள் கிடைக்கவில்லை என்றால் கூட நமக்கு நடக்கவிருக்கும் தீமைகளில், அல்லது கெட்டது ஏதோ ஒன்று நம்பி விட்டு விலகும் என்று நம்பபடுகிறது. பல்லி தலை முடியில் பட்டு, உடனடியாக விலகிச் செல்வது என்பது உங்களுக்கு வரவிருந்த தீமை அல்லது துரதிர்ஷ்டம் நம்மை பாதிக்காமல் விலகிச் சென்று விட்டது என்பதை குறிக்கும்.

பல்லி பாதத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பாதத்தின்  வலது  பகுதியில் பல்லி விழுந்தால் நோயால் அவதி ஏற்படும். பாதத்தின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் கெட்டது நடக்கும்.

Palli Vilum Palan in Tamil

பல்லி விழும் பலன் அட்டவணை 2023 – Palli Vilum Palan Table

பல்லி விழும் பலன்கள்

மேலும் தகவல்கள்

  1. பல்லி விழும் பலன் எத்தனை நாட்கள் இருக்கும் தெரியுமா?

பல்லியானது நம் மேலே விழுந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் வரை அதன் பலன்  இருக்கும்.

2. பல்லி விழும் பலன் உண்மையா?

பல்லி தரையில் விழுந்தால் அதற்கு நேரடி அதிர்ச்சி உண்டாகும். நம் உடலின் மீது பல்லி விழுந்தால் அதற்கு அதிர்ச்சி குறைவு, நாம் அதிர்ச்சி அடைகிறோம். எனவே, அந்த அதிர்ச்சியின் மூலம் நமக்கு வரவிருக்கும் நன்மை, தீமைகளை நம்மால் உணர முடியும். எனவே, பல்லி விழும் பலன் உண்மை ஆகும்.

3. பல்லியை மிதித்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லியை தெரியாமல் மிதித்து விட்டாலோ, தவறுதலாக கொன்று விட்டாலோ தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. பல்லியானது வணங்கத்தக்க தெய்வீக சக்தி கொண்ட உயிரினமாக கருதப்படுகிறது. நவக்கிரகங்களில் கேதுவின் அவதாரமாகவும், விஷ்ணுவின் அவதாரமாகவும் பல்லி கருதப்படுகிறது.

4. கோவிலில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?

கோவிலில் இறைவனை வணங்கும்போது  பல்லிகள் சத்தமிட்டால் நமது வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பிக்கை உண்டு. கடவுளின் செய்தியாளன், கடவுளின் தூதுவனான பல்லியின் மூலம் கடவுள் நம்மிடம் பேச விரும்புவார். நமது வேண்டுதல் நிறைவேறும் என்றும், நாம் தொடங்விருக்கும் செயல் வெற்றி அடையும் என்றும் பல்லிகள் கோவிலில் பலன் சொல்லும்.

5. பல்லி காலில் ஏறினால் என்ன பலன் என்ன தெரியுமா?

பல்லி  வலது காலில் உள்ள பாதத்தில் ஏறினால் நமது உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும்.

இடது காலில் பல்லி ஏறினால் நமது உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும்.

6. பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா?

உடலின் எந்தப் பகுதியில் பல்லி விழுந்தாலும் உடனே குளிக்க வேண்டும். குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்க வேண்டும். வீட்டில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு, செய்தால் பல்லி விழுவதால் எந்த தோஷமும் ஏற்படாது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பல்லி சிலையைத் தொட்டு வணங்கினால் பல்லி விழுந்த தோஷங்கள் அனைத்தும் விலகும்.

7. பல்லி வீட்டில் இறந்து கிடந்தால் என்ன பலன்?

பல்லி வீட்டில் இறந்து கிடந்தால் எதிர்பாராத சில விரயம் உண்டாகும்.

8. பல்லி விழும் பலன் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருக்குமா?

பல்லி விழும் பலன் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருக்காது. ஆண்களின் வலது பக்கத்திலும், பெண்களின் இடது பக்கத்திலும் பல்லி விழுவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இதனால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. அதே நேரம் பல்லி ஒரு ஆணின் இடது பக்கத்திலோ அல்லது ஒரு பெண்ணின் வலது பக்கத்திலோ பல்லி விழுந்தால், கெட்ட சகுனமாக கருதப்படுகிறது.

ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பக்கத்திலும் பல்லி விிழுந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே

பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil

பல்லி விழும் பலன்கள் 2023 – Palli Vilum Palan in Tamil நம் உடலில் தலை,இடது கை,வலது கை,வலது கால், தலை உச்சி என எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா? Read More »

செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்…

மகா லட்சுமி அருளால் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்…

செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்…

மகா லட்சுமி அருளால் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்…

செல்வ செழிப்போடு மங்கலமாக வாழ வேண்டும் என கடினமாக உழைக்கும் மக்களே… மகா லட்சுமி  மனம் மகிழ்ந்து இல்லம் தேடி வர இதை செய்யுங்கள் போதும். வீட்டில் செல்வ செழிப்பு மேலோங்கும்.

பச்சை பட்டு உடுத்திய மகாலட்சுமி

பச்சை பட்டு உடுத்திய மகாலட்சுமியின் படத்தை வாசலின் உள்புறம் மாட்டி, தினமும் வணங்கி வந்தால் ஜஸ்வர்யம் பெருகும். செல்வம் அனைத்தும் இல்லம் தேடி வரும்.

செந்தாமரை

வெள்ளிகிழமை சுக்ர ஓரையில், செந்தாமரை இதழை தூவி

மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும்.

வெள்ளிக்கிழமை மகிமை

24 வெள்ளிக்கிழமை மனமுருகி மகாலட்சுமியை வழிபட்டால் பணம் இல்லம் தேடி வரும்.

வெள்ளிக்கிழமைகளில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு  நைவேத்யமாக படைத்து, அதனை குடும்ப உறுப்பினர் மட்டும் சாப்பிட்டு வந்தால் பண புழக்கம் அதிகரிக்கும்.

நெல்லி மரம்

வீட்டின் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம் இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

மஞ்சள்

மஞ்சளை நீரில் கலந்து வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் தெளித்தால் ஜஸ்வர்யம் பெருகும்.

ஐப்பசி மாதம் வளர்பிறை நாளில் மகாலட்சுமியை வழிப்பட்டு வந்தால் இரட்டிப்பு நன்மை பெருகும்.

மகா லட்சுமி அருளால் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்… Read More »

Scroll to Top