உங்கள் வீட்டில் ரோஜா செடி பூ பூக்கவில்லையா… இந்த இரண்டு பொருட்கள் போதும்…ரோஜா செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்கும்…-rose flower
rose flower-அனைவருக்கும் ரோஜாப்பூவென்றால், மிகவும் பிடிக்கும். பார்க்கும் இடங்களில் எல்லாம் ரோஜா செடியை பல வண்ணங்களில் வாங்கி வந்து வீட்டில் வைப்பர். அதனை முறையாக பராமரிக்கவும் செய்வர். ஆனால், ரோஜா செடியில் பூக்கள் பூப்பது என்பது மிக அரிதாகக் காணப்படும். வாங்கிய புதியதில் இரண்டு மூன்று பூக்கள் பூக்கும். பின்னர், வெறும் செடி மட்டும் தான் காணப்படும். ரோஜா செடி பூ பூக்கமால் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள ரோஜா செடி பூ பூக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை- 25 கிராம்
கடுகு- 25 கிராம்
செய்முறை
காய்ந்த வேர்க்கடலையை எடுத்துக்கொள்ளவும். பின்னர், கடுகை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பவுடரை ஒரு பாட்டிலில் கொட்டிக்கொள்ளவும். பின்னர், இதில் நீர் ஊற்றிக்கொள்ளவும். பாட்டில் மூடியை நன்றாக மூடிவிட்டு 10 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும்.
தினமும் காலையில் இந்த தண்ணீரை நன்றாக குலுக்கி மட்டும் வைக்க வேண்டும். 10 நாட்கள் கழிந்தப்பின்பு, மூடியை திறந்து ஒரு டம்ளர் தண்ணீரையை எடுத்துக்கொள்ளவும். இந்த தண்ணீருடன் 5 டம்ளர் சாதராண தண்ணீரைக் கலந்து ரோஜா செடிக்கு ஊற்ற வேண்டும். மாதம் ஒரு முறை இந்த தண்ணீரை ஊற்றினால் போதும். ரோஜா செடியில் பூக்கள் பூத்துக்குலுங்கும்.
இது மிகச்சிறந்த உரமாகும். இதனை தவறாமல் மாதந்தோறும் செடிக்கு உரமாக ஊற்றுவதைப் பழக்கப்படுத்திக்கொண்டால் பூக்கள் பூத்துக்குலுங்கும். பார்ப்பதற்கு அழகாகவும்,ஆனந்தமாகவும் இருக்கும்.
இதையும் படிக்கலாமே –
பழையக் கொலுசு பளபளப்பாக ஜொலிக்க இந்த மூன்று பொருட்கள் போதும்…
Pingback: பழையக் கொலுசு பளபளப்பாக ஜொலிக்க இந்த மூன்று பொருட்கள் போதும்…