வாய் துர்நாற்றம், வியர்வை துர்நாற்றம் இனி இருக்கவே இருக்காது இந்த துளசி செடியால் -Benefits of Thulasi

Benefits of Thulasi

Benefits of Thulasi-துளசி தெய்வத்தன்மை வாய்ந்த செடி மட்டும் அல்ல. மருத்துவ குணமும் நிறைந்த செடியாகும். பல வகையான நோய்களைப் போக்கவல்லது. அதனால், இதனை மூலிகைகளின் அரசி என்று அழைப்பர்.

துளசி வகைகள்

கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள் துளசி, கற்பூர துளசி என அதிக துளசி வகைகள் உள்ளன.துளசி இலையை சாப்பிட்டு வந்தாலும், அதனை நீரில் போட்டு அந்த நீரை பருகி வந்தாலும், என்றும் இளமையுடன் வாழலாம்.துளசி இலையைத் தினமும் தின்று வந்தால் உடலானது புத்துணர்ச்சி பெறும். துளசி இலையின் மருத்துவ குணத்தைக் காணலாம்.

துளசி மாடம் – Thulasi madam

வீட்டில் மாடத்தில் துளசி செடி வைத்து வளர்ப்பதும் சிறந்தது. இந்த மாடம் என்பது நான்கு புறமும் சிமென்டால் கட்டப்பட்ட மேடை போன்ற அமைப்பாகும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, துளசி மாடத்தை பால்கனியின் வடகிழக்கு மூலை அல்லது வெளியில் அமைத்து வழிபட்டு வரலாம். கிழக்கு திசை துளசி செடி வைத்து வளர்ப்பதற்கு ஏதுவான வாஸ்து திசையாகும்.

துளசியின் பயன்கள்…

  • மன அழுத்தத்தைக் குறைக்கும்.
  • நரம்பு சார்ந்த பிரச்சனையைச் சரிசெய்யும்.
  • ஞாபகச் சக்தியை அதிகரிக்கும்.
  • ஆஸ்துமாவைக் குணமாக்கும்.
  • இருமலைக் குணமாக்கும்.
  • தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
  • சிறுநீரக பிரச்சனை குணமாகும்.
  • நீரழிவு நோயைக் குணமாக்கும்.
  • செரிமானம் சார்ந்த பிரச்சனையைச் சரிசெய்யும்.
  • வாய் துர்நாற்றம், வியர்வை துர்நாற்றத்தைப் போக்கும்.
  • பார்வை குறைபாட்டை நீக்கும்.
  • முகப்பருவைக் குணமாக்கும்.
  • உடல் எடையைக் குறைக்கும்.
  • இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
  • காய்ச்சலைக் குணமாக்கும்.
  • மலேரியாவைக் குணமாக்கும்.
  • மூளைக்காய்ச்சலைக் குணமாக்கும்.

துளசியின் நன்மைகள்…

துளசி இலை சாறுடன் தேன் மற்றும் இஞ்சி கலந்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் குணமாகும்.

துளசி விதையை அரைத்து அதனை உட்கொண்டு வந்தால் சிறுநீரக தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

ஒரு கைப்பிடியளவு துளசியைப் பறித்துக்கொள்ளவும். அதனை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் நீரழிவு நோயனாது குணமாகும்.

ஒரு கைப்பிடியளவு துளசியைப் பறித்துக்கொள்ளவும். அதனை குளிக்கும் தண்ணீரில் போட்டு, ஊற வைத்து குளித்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.

தினமும் துளசி இலையைச் சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.மேலும், குடல், வாய், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

ஒரு கைப்பிடியளவு துளசியைப் பறித்துக்கொள்ளவும். அதனை செம்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும். இதனை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 48 நாட்கள் இவ்வாறு இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். மேலும், பார்வை குறைபாடு சரியாகும். நரம்புகள் வலிமை அடையும்.

துளசி இலையை அரைத்து அத்துடன், எலுமிச்சை சாறை கலந்து தோலில் தடவினால் தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

துளசி இலை மற்றும் அம்மான் பச்சரிசி இலை இரண்டையும் அரைத்து முகப்பருவின் மீது தடவினால், முகப்பருவானது குணமாகும்.

துளசி இலையை நன்றாக அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறைக் கலக்கவும். அத்துடன் தேன் கலந்து அதனை சூடுப்படுத்தவும். இதனை, உணவுக்குப் பின் அருந்தி வந்தால் உடல் எடையானது குறையும்.

துளசி இலை மற்றும் முருங்கை இலையை எடுத்துக்கொள்ளவும்.அதனை நன்றாக அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சீரகப்பொடி கலந்து, காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உயர் இரத்த அழுத்தமானது குறையும்.

தினமும் துளசி இலையைச் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவானது குறையும்.

துளசி இலை மற்றும் மிளகை நன்றாக நசுக்கி, தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடவும். இந்த நீர் சுண்டியவுடன், அதில் எலுமிச்சை சாறைக் கலந்து அருந்தி வந்தால் மலேரியா நோய் கூட குணமாகும்.

துளசி இலையானது கொடிய விஷ காய்ச்சலைக் கூட குணப்படுத்தக் கூடிய ஆற்றலை உடையது.

துளசி தாவரத்தின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.

இதையும் படிக்கலாமே

என்றும் இளமையாக இருக்கலாம் இந்த வல்லாரைக் கீரையால் – vallarai keerai benefits in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top