மருத்துவம்

முதுகு வலி பிரச்சனை வராமல்  இருக்க இதை செய்யுங்கள் போதும்-Back pain

முதுகு வலி பிரச்சனை வராமல்  இருக்க இதை செய்யுங்கள் போதும்-Back pain

முதுகு வலி

நாம் நேராக நிற்பதற்கும், ஓடி ஆடி வேலை செய்வதற்கும், குனிந்து நிமிர்வதற்கு உறுதுணையாகவும், உதவியாகவும் இருப்பது முதுகு எலும்பு. அதிகப்படியான வேலை, முதுகு எலும்பு தேய்மானம் ஆகியவற்றால் முதுகு வலி ஏற்படுகிறது. முதுகு வலியைப் போக்கக்கூடிய மிக எளிமையான வழிகளைக் காண்போம்.

நடு மற்றும் மேல் முதுகு வலி குணமாக

நடு மற்றும் மேல் முதுகு வலி குணமாக நாம் செய்ய வேண்டியவைக் குறித்து காணலாம்.

உடற்பயிற்சி

முதுகுத்தசைகளை வலிமைப்படுத்தக்கூடிய மிக எளிமையான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும்.

பயணம்

முதுகு வலி உள்ளவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது, கடைசி இருக்கையில் அமர்வதைத் தடுக்க வேண்டும். நடுவிலுள்ள இருக்கையில் அமர வேண்டும்.

நான்கு சக்கர வாகனத்தை ஓட்டும்போது, நேராக நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.

இருசக்கர வாகனங்களில் கரடு, முரடான பாதையில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

உறங்கும் முறை

முதுகு வலி உள்ளவர்கள் கயிற்று கட்டிலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். சரியான மெத்தையில் ஒருபுறமாக ஒருகளித்து உறங்க வேண்டும்.

எடை

அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கக் கூடாது. முதுகை அதிகமாக வளைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தரையைக் குனிந்து துடைப்பதற்கு பதிலாக, நீளமான குச்சியைக் கொண்டு நின்று கொண்டு தரையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

உட்காரும் முறை வேலை செய்யும் போது முதுகை நேராக வைத்து உட்கார வேண்டும். நாற்காலியில் அமரும் போது முதுகுக்குத் தலையணை வைத்து உட்காருவது

இதையும் படிக்கலாமே –

நீர் சுருக்கு பிரச்சனை இனி வரவே வராது- Neer surukku home remedies

முதுகு வலி பிரச்சனை வராமல்  இருக்க இதை செய்யுங்கள் போதும்-Back pain Read More »

மயக்கம் வராமல் இருக்க மிக எளிமையான வழிகள்-Mayakkam

மயக்கம் வராமல் இருக்க மிக எளிமையான வழிகள்-Mayakkam

மயக்கம்

குறைந்த இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், சரியாக சாப்பிடாத காரணம், காய்ச்சல் ஆகியவற்றால் மயக்கம் ஏற்படும். காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் அலறி அடித்துக்கொண்டு எழுந்திருக்கக்கூடாது. நன்றாக கண்ணைத் திறந்து பார்த்து, மனதை சமநிலைப்படுத்தி பின்னரே, மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

கொத்தமல்லி உடன் இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து அரைத்து, தாளித்து கொத்தமல்லி துவையலைச் சாப்பிட்டு வந்தால், மயக்கம் குணமாகும். கருவேப்பிலை உடன் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து அரைத்து, தாளித்து கருவேப்பிலை துவையலைச் சாப்பிட்டு வந்தால், மயக்கம் குணமாகும். புதினா உடன் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி , கருவேப்பிலை சேர்த்து அரைத்து, தாளித்து புதினா துவையலைச் சாப்பிட்டு வந்தால், மயக்கம் குணமாகும்.

கொத்தமல்லி விதையை நீரில் போட்டு, கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து, வடிகட்டிக் குடித்தால் மயக்கம் குணமாகும்.

இஞ்சியைத் தோல் சீவி, நீரில் போட்டு கொதிக்க வைத்து , வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் மயக்கம் குணமாகும்.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் போதும், மயக்கம் பறந்தோடும். நெல்லிக்காயைத் துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மயக்கம் குணமாகும்.

நார்ச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டு வந்தால், மயக்கம் குணமாகும். உடலில் நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை நன்றாக குடிக்க வேண்டும். எண்ணெயில் வறுத்த , பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே –

முதுகு வலி பிரச்சனை வராமல்  இருக்க இதை செய்யுங்கள் போதும்-Back pain

மயக்கம் வராமல் இருக்க மிக எளிமையான வழிகள்-Mayakkam Read More »

மஞ்சள் காமாலை நோய்  உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-Jaundice

மஞ்சள் காமாலை நோய்  உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள-Jaundice

மஞ்சள் காமாலை நோய்

கல்லீரலைப் பாதிப்படையச் செய்து, மஞ்சள் காமாலையை வரவழைக்கும் பிலிரூபினிஸின் அளவைக் குறைப்பது எப்படி? என யோசிக்கும் மக்களே…உங்களுக்கான தீர்வு இதோ…

மஞ்சள் காமாலை நோயால் உடல்  மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால், தலைவலி, பசியின்மை, வாந்தி, உடல் எடை இழப்பு, வயிற்று வலி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும்.

முட்டை

முட்டையில் அதிகளவு கொழுப்பு மற்றும் புரோட்டீன் உள்ளதால், மஞ்சள் காமாலை உள்ளவர்கள் முட்டையைச் சாப்பிடக் கூடாது.

இறைச்சி

இறைச்சியில் அதிகளவு கொழுப்பு உள்ளதால், அது  கல்லீரலுக்குக் கெடுதலை விளைவிக்கும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மாமிசத்தைத் தவிர்க்க வேண்டும்.

உப்பு

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் உணவில் உப்பை அதிகமாக சேர்த்துக்கொள்ள கூடாது. உப்பில் கல்லீரலைப் பாதிப்படையச் செய்யக்கூடிய செல்கள் அதிகளவு உள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவு

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்ப்பது நல்லது. நன்றாக சமைத்த சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய்

எண்ணெய் பொருட்களை அதிகளவு எடுத்துக்கொள்ளக் கூடாது. எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே –

மயக்கம் வராமல் இருக்க மிக எளிமையான வழிகள்-Mayakkam

மஞ்சள் காமாலை நோய்  உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-Jaundice Read More »

மஞ்சள் காமாலை நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்-Jaundice symptoms

மஞ்சள் காமாலை நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள–Jaundice symptoms

மஞ்சள் காமாலை நோய்

கல்லீரலைப் பாதிப்படையச் செய்து, மஞ்சள் காமாலையை வரவழைக்கும் பிலிரூபினிஸின் அளவைக் குறைப்பது எப்படி? என யோசிக்கும் மக்களே…உங்களுக்கான தீர்வு இதோ…

மஞ்சள் காமாலை நோயால் உடல்  மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால், தலைவலி, பசியின்மை, வாந்தி, உடல் எடை இழப்பு, வயிற்று வலி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும்.

நார்ச்சத்து உணவு

நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. காலை உணவில் ஓட்ஸ், மதிய உணவில் கீரை மற்றும் பிரவுன் அரிசி,பழுப்பு அரிசி, இரவில் சிறுதானியங்கள், கோதுமை ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.

பழங்கள்

எளிதாக சீரணம் அடையக்கூடிய பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பப்பாளி, மாம்பழம், மாதுளை, பைன் ஆப்பிள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கேரட்

கேரட்டை அரைத்து அதன் சாறைப் பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். கல்லீரல் நன்றாக செயல்படும்.

எலுமிச்சை

எலுமிச்சை சாறைப் பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படும், மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

நெல்லிகாய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. நெல்லிக்காயில் உள்ள ப்லித்தோரா என்ற பொருள் மஞ்சள் காமாலையை வரவிடாமல் தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே –

மஞ்சள் காமாலை நோய்  உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-Jaundice

மஞ்சள் காமாலை நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்-Jaundice symptoms Read More »

மாலைக்கண் நோய் வராமல் இருக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்-Malai kan

மாலைக்கண் நோய் வராமல் இருக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்-Malai kan

மாலைக்கண் நோய்

வைட்டமின் ஏ குறைபாட்டால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இரவு நேரம் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் பார்வை மங்கலாக தெரிவது மாலை கண் நோயின் அறிகுறியாகும்.

வைட்டமின் ஏ நிறைந்த

மாலைக் கண் நோயைக் குணப்படுத்த வைட்டமின் ஏ நிறைந்த அரைக்கீரை, கேரட், குடைமிளகாய், சிட்ரஸ் பழங்கள், பப்பாளி, மாம்பழம், முட்டை, வெண்ணெய் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

செவ்வாழை

செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோயைக் குணமாக்கும். இரவு உணவுக்குப் பின்னர், செவ்வாழையைச் சாப்பிட்டு வந்தால் பார்வை குறைபாடு நீங்கும்.

பேரிச்சம்

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பேரிச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால் பார்வை குறைபாடு நீங்கும்.

வைட்டமின் ஏ

கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளது. கேரட்டை பச்சையாகவும், சமையல் செய்தோ சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவாகும்.

ஆரஞ்சு சாறு

ஆரஞ்சில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. ஆரஞ்சைப் பழமாகவோ, பழச்சாறாகவோ பருகி வந்தால், பார்வை தெளிவாகும். ஆரஞ்சு சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவாகும்.

அரைக்கீரை

அரைக்கீரையைப் பொரித்தோ, குழம்பாகவோ செய்து சாப்பிட்டு வந்தால், பார்வை குறைபாடு நீங்கும். பார்வைத் தெளிவாகும்.

இதையும் படிக்கலாமே –

நீர் சுருக்கு பிரச்சனை இனி வரவே வராது- Neer surukku home remedies

மாலைக்கண் நோய் வராமல் இருக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்-Malai kan Read More »

குழந்தையின் அழுகை நிறுத்துவது எப்படி?-How to control baby crying

குழந்தையின் அழுகை நிறுத்துவது எப்படி?-How to control baby crying

குழந்தையின் அழுகை

கள்ளம் கபடம் இல்லாத குழந்தை அழுவதைப் பார்த்தாலே அனைவரது மனமும் கரையும். குழந்தையின் அழுகையைச் சமாதானம் செய்து அழுகையை நிறுத்தச் செய்வர்.

குழந்தையின் அழுகைக்கான காரணங்கள்

குழந்தையின் பாஷையே அழுகைதான். குழந்தை அழுவதற்கு பெரும்பாலும் மூன்று காரணங்கள் தான். பசியால் அழும். உறக்கத்திற்காக அழும். சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டால் அழும்.

உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை பசியின் காரணமாக அழுவும். அதன் பசியினை உடனே போக்க வேண்டும். குழந்தை பசியால் அழும் போது கட்டயமாக பால் கொடுக்க வேண்டும்.

உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டால் குளிர் தாங்காமல் அழுவும். அப்போது குழந்தையைச் சுத்தம் செய்துவிட்டு, பின்னர் உறங்க வைக்க வேண்டும்.

சில குழந்தைகள் உறக்கத்திற்காக அழும். அப்போது குழந்தையைத் தாலாட்டி, பாடல் பாடி உறங்க வைக்க வேண்டும். குழந்தையைத் தோள் மீது போட்டு உறங்க வைக்கலாம். குழந்தையின் தலையை மெதுவாக நீவி விட்டால் குழந்தை உறங்கும்.

குழந்தையின் அழுகையை நிறுத்தச் செய்வது எப்படி

சில குழந்தைகள் நீண்ட நேரம் அழுது கொண்டே இருக்கும். குழந்தையின் அழுகைக்கான காரணம் தெரியாமல் பெற்றோர்கள் தவிப்பார்கள்.

அப்போது குழந்தையை  வெளியே அழைத்து வந்து, அருகில் உள்ள மரம், செடிகளைக் காட்டினால் குழந்தைகள் அழுகையை நிறுத்தும்.

தாயின் கருவறையில் பாதுகாப்பாகவும், வெதுவெதுப்பாகவும் இருந்த குழந்தை, பாதுகாப்பு இன்மையின் காரணமாக அழும். அப்போது தாய் குழந்தையைத் தூக்கி தன் அரவணைப்பைக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.

குழந்தையை வேகமாக குலுக்குவதாலும், பல கை மாறிக்கொண்டே இருப்பதாலும் சில குழந்தைகள் அழும். எனவே, குழந்தைகளை வேகமாக குலுக்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே –

மாலைக்கண் நோய் வராமல் இருக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்-Malai kan

குழந்தையின் அழுகை நிறுத்துவது எப்படி?-How to control baby crying Read More »

குழந்தையின் அழுகைக்கான காரணம் என்ன? Reason for baby crying…

குழந்தையின் அழுகைக்கான காரணம் என்ன? Reason for baby crying…

குழந்தையின் அழுகைக்கான காரணம்

கள்ளம் கபடம் இல்லாத குழந்தை அழுவதைப் பார்த்தாலே அனைவரது மனமும் கரையும். குழந்தையின் அழுகையைச் சமாதானம் செய்து அழுகையை நிறுத்தச் செய்வர்.

குழந்தையின் பாஷையே அழுகைதான். குழந்தை அழுவதற்கு பெரும்பாலும் மூன்று காரணங்கள் தான். பசியால் அழும். உறக்கத்திற்காக அழும். சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டால் அழும்.

உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை பசியின் காரணமாக அழுவும். அதன் பசியினை உடனே போக்க வேண்டும். குழந்தை பசியால் அழும் போது கட்டயமாக பால் கொடுக்க வேண்டும்.

உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டால் குளிர் தாங்காமல் அழுவும். அப்போது குழந்தையைச் சுத்தம் செய்துவிட்டு, பின்னர் உறங்க வைக்க வேண்டும்.

சில குழந்தைகள் உறக்கத்திற்காக அழும். அப்போது குழந்தையைத் தாலாட்டி, பாடல் பாடி உறங்க வைக்க வேண்டும். குழந்தையைத் தோள் மீது போட்டு உறங்க வைக்கலாம். குழந்தையின் தலையை மெதுவாக நீவி விட்டால் குழந்தை உறங்கும்.

இதையும் படிக்கலாமே –

குழந்தையின் அழுகை நிறுத்துவது எப்படி?-How to control baby crying

குழந்தையின் அழுகைக்கான காரணம் என்ன? Reason for baby crying… Read More »

குழந்தையைத் தூங்க வைப்பது எப்படி?…

குழந்தையைத் தூங்க வைப்பது எப்படி?…

குழந்தையைத் தூங்க வைப்பது

குழந்தையைத் தூங்க வைப்பது என்பது ஒரு கைசிறந்த கலையாகும். அழுகின்ற குழந்தையைத் தூங்க வைக்க சில வழிகளைக் காண்போம்.

குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்து, தாலாட்டு பாடுவதன் மூலம் உறங்கும்.

குழந்தையைத் மடியில் கிடத்தி, கதையைக் கூறினால் சில குழந்தைகள் உறங்கும்.

குழந்தையின் தலையை நீவி கொடுத்தால் சில குழந்தைகள் உறங்கும்.

குழந்தையின் உச்சந்தலையிலிருந்து மூக்கு வரை உங்கள் கையால் மெதுவாகத் தடவிக் கொடுத்தாலும், புருவத்தில் மெதுவாகத் தடவிக் கொடுத்தாலும் சில குழந்தைகள் உறங்கும்.

குழந்தையைத் மடியில் கிடத்தி, குழந்தையின் தலையை நீவி கொடுத்துக் கொண்டே , மின்விசிறியைத் தொடர்ந்து பார்க்கச் செய்தாலும் சில குழந்தைகள் உறங்கும்.

இதையும் படிக்கலாமே –

குழந்தையின் அழுகைக்கான காரணம் என்ன? Reason for baby crying…

குழந்தையைத் தூங்க வைப்பது எப்படி?… Read More »

குழந்தையைப் பராமரிப்பது எப்படி?…

குழந்தையைப் பராமரிப்பது எப்படி?…

குழந்தையைப் பராமரிப்பது

குழந்தையைப் பராமரிப்பது ஒவ்வொரு தாயின் முதன்மை கடமையாகும். தன்னை நம்பி இந்த உலகத்திற்கு வந்த ஜீவனைப் பராமரிக்கத் தன் முழு நேரத்தையும் செலவிடுவாள் தாய்.

குழந்தையைப் பராமரிப்பது

குழந்தை பசியால் அழுதால் உடனே உணவு கொடுக்க வேண்டும்.

குழந்தையை நன்றாக உறங்க வைக்க வேண்டும்.

குழந்தை உறங்கும் இடம்  காற்றோட்டமாகவும், மிதமான வெப்ப நிலையும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டால், சுத்தம் செய்து புதிய காய்ந்த ஆடையை உடுத்திவிட வேண்டும்.

குழந்தையை வெந்நீரால் நன்றாக துடைத்து, காய்ந்த ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

டையப்பர் அணிவதால் தோல் சிவந்து போகும். அதனால், தேங்காய் எண்ணெயைத் தடவ வேண்டும்.

கை, கால், கழுத்தில் கூர்மையாக அணிகலனை அணிவிக்கக் கூடாது.

குளிர்காலத்தில் குழந்தையை கதகதப்பாக வைத்திருக்க வேண்டும். குழந்தையின் கை, கால்களை முடி வைக்க வேண்டும்.

குழந்தையை கொசு, எறும்பு கடிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கைகளை நன்றாக கழுவிய பின்னரே, குழந்தையைத் தூக்க வேண்டும்.

குழந்தையை குளிர்ந்த நீரால் குளிக்க வைக்கக் கூடாது. வெந்நீரால் குளிக்க வைக்க வேண்டும்.

சமையலறையில் இருந்து வந்த உடன் குழந்தையைத் தூக்க கூடாது. கைகளில் ஏதாவது மிளகாய் காரம், மிளகாய் தூள் காரம் இருக்கும். எனவே, கைகளை நன்றாக கழுவிய பின்னரே, குழந்தையைத் தூக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே –

ஏழு மாத குழந்தை சாப்பிட வேண்டிய பழங்கள்-Fruits for babies

குழந்தையைப் பராமரிப்பது எப்படி?… Read More »

குழந்தையின் விக்கல் வரக் காரணம் என்ன? Reason for baby hiccups…

குழந்தையின் விக்கல் வரக் காரணம் என்ன? Reason for baby hiccups…

குழந்தையின் விக்கல்

குழந்தையின் விக்கல்

கைகுழந்தையைப் பராமரிக்கக்கூடிய அம்மாக்களுக்கு புரியாத விஷயமாக இருப்பது குழந்தைக்கு வரக்கூடிய விக்கல். கைகுழந்தைகளுக்கு விக்கல் வருவது சகஜமான விஷயம்தான். விக்கலைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை.

குழந்தைக்கு விக்கல் வரும்போது குழந்தையைத் தொந்தரவு செய்யாமல் படுக்க வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் விக்கல் அடங்கிவிடும்.

குழந்தை பால் குடிக்கும் போதும், உணவு உண்ணும் போது அதிகளவு காற்று வாயின் உள்ளே செல்லும். அதனால், குழந்தை பால் குடித்தப்பிறகும், உணவு உண்ட பிறகும் தோளில் போட்டு தட்ட வேண்டும். அப்போது காற்றானது ஏப்பமாக வெளியேறும்.

குழந்தை பால் குடிக்கும் போதும், உணவு உண்ணும் போது மெதுவாக சாப்பிடுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேகமாக பால் குடிப்பதையும், சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு அதிகமாக உணவு அளிக்கக்கூடாது. உணவு உண்ட பின் தோளில் போட்டு தட்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

குழந்தையின் விக்கல் வரக் காரணம் என்ன? Reason for baby hiccups… Read More »

குழந்தை வாந்தியைக் கட்டுபடுத்துவது எப்படி? How to control baby vomit…

குழந்தை வாந்தியைக் கட்டுபடுத்துவது எப்படி? How to control baby vomit…

குழந்தை வாந்தி கட்டுபடுத்துவது

உணவு ஒவ்வாமை, வயிற்றில் வைரஸ் தொற்று, வயிற்றில் புண் ஆகிய காரணங்களால் குழந்தை வாந்தி எடுக்கிறது. குழந்தைகள் எடுக்கக்கூடிய வாந்தியைக் கட்டுப்படுத்தக்கூடிய சில வழிகளைக் காண்போம்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய் மற்றும் சீரகத்தை நீரில் கலந்து வடிகட்டி குழந்தைகளைக் குடிக்கச் செய்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.

சீரகம்

வறுத்த சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து, பின்னர் அதனை வடிகட்டி குடித்து வர செய்தால் வாந்தி உணர்வு குறையும்.

சீரக பொடி மற்றும் ஏலக்காய் பொடியை நீரில் கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி அத்துடன் தேன் கலந்து குடித்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து, பின்னர் அதனை வடிகட்டி குடித்து வர செய்தால் வாந்தி உணர்வு குறையும்.

புதினா இலை

புதினா இலைகளை நீரில் போட்டு, கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி உணர்வு குறையும்.

இஞ்சி

இஞ்சியை நீரில் போட்டு  கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கச் செய்தால், வாந்தி உணர்வு கட்டுக்குள் வரும்.

இதையும் படிக்கலாமே

குழந்தையின் விக்கல் வரக் காரணம் என்ன? Reason for baby hiccups…

குழந்தை வாந்தியைக் கட்டுபடுத்துவது எப்படி? How to control baby vomit… Read More »

குழந்தை எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவு-How to increase baby weight…

குழந்தை எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவு…

குழந்தை எடை அதிகரிக்க

குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் போதுமான சத்து உள்ளது. தாய்ப்பால் பருகுவதன் மூலம் குழந்தைகள் ஆறு மாதம் வரை எடை அதிகரிப்பு நன்றாக இருக்கும். அதன் பிறகு திட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவுகளைக் கொடுப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

நெய்

பருப்பு சாதத்தில் நெய்யைக் கலந்து, குழந்தைக்கு கொடுத்தால் குழந்தை நன்றாக எடை அதிகரிக்கும்.

வாழைப்பழம்

குழந்தைகளுக்கு தினமும் ஒரு வாழைப்பழம் கொடுத்து வந்தால், எடை அதிகரிப்பு நன்றாக இருக்கும்.

சர்க்கரை வள்ளி கிழங்கு

சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு

உருளை கிழங்கை வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.

அவகோடா பழம்

அவகோடா பழம் வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே

குழந்தை வாந்தியைக் கட்டுபடுத்துவது எப்படி? How to control baby vomit…

குழந்தை எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவு-How to increase baby weight… Read More »

குமட்டல் இனி வரவே வாராது-Kumattal

குமட்டல் இனி வரவே வாராது-Kumattal

குமட்டல்

குமட்டல் என்பது வாந்தியின் அறிகுறியாகும். குமட்டல் இருந்தால் நமது மனநிலை சீராக இருக்காது. குமட்டலைப் போக்கக்கூடிய சில வழியைக் காண்போம்…

கிராம்பு

 கிராம்பு, பட்டை, சோம்பு இவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் தேன் கலந்து சாப்பிட்டால் குமட்டல் குணமாகும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சைப் பழத்தின் வாசனையை முகர்ந்து பார்த்து வந்தால் குமட்டல் உணர்வு கட்டுக்குள் வரும். எலுமிச்சைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் உப்பு கலந்து குடித்து வந்தால் குமட்டல் கட்டுக்குள் வரும்.

ஏலக்காய்

ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், வாந்தி உணர்வு குணமாகும். வாயு கோளாறு நீங்கும்.

கிராம்பு

கிராம்பை வாயில் போட்டு மென்றால், வாந்தி உணர்வு குணமாகும். வயிறு சார்ந்த பிரச்சனை குணமாகும்.

பேக்கிங் சோடா

வெந்நீரில் பேக்கிங் சோடாவைக் கலந்து குடித்தால் குமட்டல் உணர்வு சரியாகும்.

இஞ்சி

இஞ்சி, சீரகம் ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறைக் கலந்து குடித்தால் குமட்டல் உணர்வு சரியாகும்.

நெல்லி இலை காம்பு

கறிவேப்பிலை காம்பு, நெல்லி இலையின் காம்பு, வேம்பு இலையின் காம்பு, முருங்கை இலையின் காம்பு ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர், அதில் சீரகம், மிளகு, சுக்கு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் குமட்டல் சரியாகும்.

இதையும் படிக்கலாமே

தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்க வேண்டுமா? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள் போதும்-How to increase breast milk

குமட்டல் இனி வரவே வாராது-Kumattal Read More »

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள்-Pregnancy women food…

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள்-Pregnancy women food…

கர்ப்ப கால பெண்கள்

கருவுற்ற பெண்கள் சாப்பிடும் சாப்பாடு தனக்கு மட்டுமின்றி தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சேர்த்தே உண்கிறாள். கருவில் இருக்கும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாத உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் இரவு நேர உணவில் கீரையைத் தவிர்த்தல் வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் வேகாத முட்டையைச் சாப்பிட கூடாது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் கர்ப்ப காலத்தில் பெண்கள் கருவாட்டு குழம்பைச் சாப்பிடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் கருப்பு திராட்சை, பப்பாளி, பலாப்பழம், நாவற்பழம் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் தேனை அதிகமாக சாப்பிடக் கூடாது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறிகளைப் பச்சையாக சாப்பிடும்போது, நன்றாக சுத்தம் செய்து பின்னர் சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகளவு உப்பைச் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக இனிப்புகளை எடுத்துக்கொள்ள கூடாது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்ச்சாத பாலைப் பருக கூடாது.

கர்ப்ப கால உணவு அட்டவணை

இதையும் படிக்கலாமே

தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்க வேண்டுமா? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள் போதும்-How to increase breast milk

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள்-Pregnancy women food… Read More »

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்-Pregnancy women food…

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்-Pregnancy women food…

கர்ப்ப காலத்தில் பெண்கள்

கர்ப்பம் தரித்த பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்.

பருப்பு வகைகள்

கர்ப்பிணி பெண்கள் பட்டாணி, கொண்டைக்கடலை, சுண்டல் போன்ற புரதச்சத்து மிக்க உணவுகளைச் சாப்பிட வேண்டும். இவை கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

நட்ஸ்

பாதாம் பருப்பு, வால்நெட், முந்திரி,பேரிச்சப்பழம், உலர்திராட்சை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். இதனால், குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

கீரைகள்

கீரைகளைக் கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரையில் நார்சத்து மற்றும் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. முருங்கைக்கீரை, பசலைக் கீரை, வெந்தயக்கீரை இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை வாராது.

முட்டை

முட்டையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. முட்டையில் வைட்டமின் ஏ, பி2, பி12, ஒமேகா 3 , கால்சியம் முதலிய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. தாய்மார்கள் அவசியம் முட்டை சாப்பிடுதல் வேண்டும். இதன் மூலம் தாய் மற்றும் சேய் உடல் உறுதியுடன் இருப்பார்கள். முட்டை கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

மீன்கள்

ஒமேகா 3 உள்ள மீன்களைச் சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

தயிர்

தயிரைக் கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். தயிரில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழமாகவும், பழச்சாறாகவும் சாப்பிட்டு வந்தால், குழந்தை எந்த குறையும் இன்றி ஆரோக்கியமாக இருக்கும்.

வாழைப்பழம்

கர்ப்பிணி பெண்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராது. செரிமானம் சார்ந்த கோளாறுகள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே

திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை – Natchathira Porutham Tamil

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்-Pregnancy women food… Read More »

Scroll to Top