ஆன்மீகம்

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

முக்கியமான திருமண பொருத்தம்

திருமணம் நடக்க வேண்டுமெனில் ஆண், பெண் இருவரின் ஜாதகத்தைப் பார்த்து பொருத்தங்கள் உள்ளதா என்பது பார்ப்பது மிக அவசியமாகும். மணமக்களின் வாழ்க்கை சீரும் சிறப்பாக, செல்வ செழிப்பாக, அன்பு அன்னியோன்யமாக இருக்க அவசியம் பொருத்தம் பார்க்க வேண்டும். மிகவும் முக்கியமான பொருத்தங்கள் எவை என்பதைப் பற்றிக் காண்போம்.

திருமண பொருத்தங்கள்… – Thirumana Porutham Tamil

1. தினப் பொருத்தம்

2. கணப்பொருத்தம்

3. மகேந்திரப் பொருத்தம்

4. ஸ்திரீ தீர்க்கம்

5. யோனிப் பொருத்தம்

6. இராசிப் பொருத்தம்

7. இராசி அதிபதி பொருத்தம்

8. வசியப் பொருத்தம்

9. ரஜ்ஜிப்பொருத்தம்

10. வேதைப் பொருத்தம்

11. நாடிப் பொருத்தம்

12. விருட்சப் பொருத்தம்

திருமண பொருத்தம்

இந்த 12 பொருத்தங்களை சரிபார்த்து, அந்த குறிப்பிட்ட பெண்ணிற்கும், ஆணுக்கும் திருமண பொருத்தம் உண்டா? அல்லது இல்லையா? என்று பார்க்க வேண்டும்.

1.தினப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

தினப்பொருத்தம் என்பது மணமக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை குறிப்பிடுகிறது. இது மிகவும் முக்கியமான பொருத்தமாகப் பார்க்கப்படுகிறது. பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 இந்த எண்ணிக்கையில் இருந்தால் தினப்பொருத்தம் உள்ளது என்று பொருள்.

2. கணப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

கணம் பொருத்தமானது தம்பதியரின் மன ஒற்றுமைக்காகப் பார்க்கப்படுகிறது. கணப்பொருத்தம் என்பது தேவ கணம், மனித கணம், ராட்சஷ கணம் என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

பொருந்தக்கூடிய கணங்கள்

மணமக்கள இருவருக்கும் தேவகணம் உள்ளது என்றால் கணப்பொருத்தம் உள்ளது என்பர்.

மணமக்கள் இருவருக்கும் மனிதகணம் உள்ளது என்றால் கணப்பொருத்தம் உள்ளது என்பர்.

மணமக்கள் தேவகணம், மனித கணம் என இருந்தாலும் கணப்பொருத்தம் உள்ளது என்பர்.

மணமக்கள் மனித கணம், ராஜஸ கணம் என இருந்தாலும் கணப்பொருத்தம் உள்ளது என்பர்.

பொருந்தாத கணங்கள்

மணமக்கள் தேவகணம் , ராஜஸகணம் என்று இருந்தால் கணப்பொருத்தம் இல்லை என்று பொருள்.

மணமக்கள் இருவரும் ராஜஸகணம் என்று இருந்தால் கணப்பொருத்தம் இல்லை என்று பொருள்.

3. மகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

மகேந்திரப் பொருத்தம் என்பது மணமக்களின் புத்திர பாக்கியம், செல்வ செழிப்பு மற்றும் பொருளாதார வளத்தை குறிக்கிறது. பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 என்ற எண்ணிக்கையில் இருந்தால் மகேந்திர பொருத்தம் உள்ளது என்பர்.

4. ஸ்திரீ தீர்க்கம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

ஸ்திரி தீர்க்கம் என்பது மணமகள் தீர்க்க சுமங்கலியாக வாழ பார்க்கப்படும் மிக முக்கியமான பொருத்தமாகும். ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் மிகவும். முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. பெண்ணின் நட்சத்திரலிருந்து ஆணின் நட்சத்திரம் 13 க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் உள்ளது என்று பொருள்.

5. யோனிப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

யோனிப் பொருத்தம் என்பது திருமணத்திற்கு பின் மணமக்களின் உடல் தேவையை எந்த வகையில் பூர்த்தி செய்து கொள்வார்கள் என்பதைப் பற்றி அறியக்கூடியது ஆகும். திருமணத்தில் இணையும் மனங்கள், உடல் இன்பத்திலும் களித்தால் வாழ்நாள் மிகச்சிறப்பாக அமையும்.

6.இராசிப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

இராசிப் பொருத்தம் என்பது வம்ச விருத்தி செய்வதற்காக பார்க்கப்படும் மிக முக்கிய பொருத்தம் ஆகும். பெண் ராசியிலிருந்து ஆணின் ராசி 7 க்கு மேல் இருந்தால் இந்த பொருத்தம் உள்ளது என்பது பொருள்.

திருமண பொருத்தம்

7.இராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

இராசி அதிபதி பொருத்தம் என்பது சந்ததி விருத்திக்காகவும், மணமக்கள் ஒற்றுமையாக வாழ பார்க்கக்கூடிய பொருத்தம் ஆகும்.

8.வசியப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

வசிய பொருத்தம் என்பது மணமக்களின் நேச வாழ்விற்காக பார்க்கப்படும் பொருத்தம்.

வசியம் பொருத்தம் உள்ள ராசிகள்
மேஷம்சிம்மம், விருச்சிகம்
ரிஷபம்கடகம், துலாம்
மிதுனம்கன்னி
கடகம்விருச்சிகம், தனுசு
சிம்மம்துலாம், மீனம்
கன்னிரிஷபம், மீனம்
துலாம்மகரம்
விருச்சிகம்கடகம், கன்னி
தனுசுமீனம்
மகரம்மகரம்
கும்பம்மீனம்
மீனம்மகரம்
Marriage Porutham in Tamil

9.ரஜ்ஜிப்பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

ரஜ்ஜுப் பொருத்தம் மிகவும் முக்கியமானது ஆகும். இந்த பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தல் கூடாது.

ரஜ்ஜுப் பொருத்தம் ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை,

சிரசு ரஜ்ஜு – மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றொன்று ஒன்று பொருந்தாது.

கழுத்து ரஜ்ஜு -ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் இவை ஒன்றொன்று ஒன்று பொருந்தாது.

வயிறு ரஜ்ஜு -கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இவை ஒன்றொன்று ஒன்று பொருந்தாது.

தொடை ரஜ்ஜு -பரணி, பூரம்,பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி இவை ஒன்றொன்று ஒன்று பொருந்தாது.

பாத ரஜ்ஜு – அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஒன்றொன்று ஒன்று பொருந்தாது.

ஆகியவையாகும்.

10. வேதைப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

வேதைப் பொருத்தம் என்பது துன்பமில்லாத வாழ்க்கையைக் குறிக்கிறது. வேதைப் பொருத்தம் இல்லாவிட்டால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு வரும். வேதை பொருத்தம் இருந்தால் கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

வேதை நட்சத்திரங்கள்
அஸ்வினிகேட்டை
பரணிஅனுஷம்
கார்த்திகைவிசாகம்
ரோகிணிசுவாதி
திருவாதிரைதிருவாதிரை
புனர்பூசம்உத்திராடம்
பூசம்பூராடம்
ஆயில்யம்மூலம்
மகம்ரேவதி
பூரம்உத்திரட்டாதி
உத்திரம்பூரட்டாதி
அஸ்தம்சதயம்
Marriage Porutham in Tamil

11. நாடிப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

திருமண பொருத்தம்

நாடிப்பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் என்று கூறப்படுகிறது. நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால் மணமக்கள் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்று கூறப்படுகிறது. நாடியை மூன்று வகையாகப் பிரிப்பர். அவை,

வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வாத நாடியாகும்.

பித்த நாடி

பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பித்த நாடியாகும்.

நீர்ம நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் நீர்ம நாடியாகும்.

12. விருட்சப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

விருட்ச பொருத்தம் என்பது பால் மரத்தை பொருத்து பார்க்கப்படும் பொருத்தமாகும். திருமணம் செய்ய உள்ள தம்பதிகளில் ஆண், பெண் இருவரில் ஒருவருக்காவது பால் மரமாக இருந்தால் மிகவும் நல்லது. விருட்சம் என்றால் மரம் என்ற பொருள் இதில் 27 நட்சத்திரங்களையும் இளகிய பால் மரங்கள் , உறுதிதன்மையான பால் இல்லாத மரங்கள் என்று பிரித்துள்ளனர். பெண்ணின் நட்சத்திரமும் – ஆணின் நட்சத்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு என்று கூறுவர்.

பால் மரம் உள்ள நட்சத்திரங்கள்

கார்த்திகை – அத்தி மரம்

ரோகிணி -நாவல்

பூசம் – அரசு

ஆயில்யம்- புன்னை

மகம் -ஆலமரம்

பூரம்- பலா

உத்திரம் – அலரி

அஸ்தம் – வேலம்

கேட்டை -பிராய்

மூலம் -மா

பூராடம்-வஞ்சி

உத்திராடம்-பலா

திருவோணம் -எருக்கு

பூரட்டாதி -தேமா

ரேவதி -இலுப்பை

பால் மரம் இல்லாத நட்சத்திரங்கள்

அஸ்வினி – எட்டி

பரணி – நெல்லி

மிருகசீரிடம் – கருங்காலி

திருவாதிரை – செங்கருங்காலி

புனர்பூசம் – மூங்கில்

சித்திரை-வில்வம்

சுவாதி- மருதம்

விசாகம் -விளா

அனுஷம் – மகிழம்

அவிட்டம் -கன்னி

உத்திரட்டாதி – வேம்பு

ராசி அதிபதி பொருத்தம்

ராசி அதிபதிகள்பொருந்தக்கூடிய ராசி அதிபதிகள்
சூரியன்சந்திரன், செவ்வாய், குரு ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
சந்திரன்சூரியன், புதன் ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
செவ்வாய்சந்திரன், சூரியன், குரு ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
புதன்சூரியன், சுக்கிரன் ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
குருசூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
சுக்கிரன்புதன், சனி ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
சனிபுதன், சுக்ரன் ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
Marriage Porutham in Tamil

இதையும் படிக்கலாமே

  1. திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை – Natchathira Porutham Tamil
  2. திருமண ராசி பொருத்தம்- எந்த எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்? – Rasi Porutham in Tamil

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil Read More »

திருமண ராசி பொருத்தம்- எந்த எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்? – Rasi Porutham in Tamil

திருமண ராசி பொருத்தம்- எந்த எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்? – Rasi Porutham in Tamil

திருமண ராசி பொருத்தம்

Rasi Porutham in Tamil- திருமண ராசி பொருத்தம்- எந்த எந்த ராசிக்கு எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

பொருந்தக்கூடிய ராசிகள்

ராசிகள்பொருந்தக்கூடிய ராசிகள்
மேஷம்துலாம், மிதுனம், சிம்மம், தனுசு, விருச்சிகம், மகரம்
ரிஷபம்கடகம், கன்னி, மீனம், மகரம்
மிதுனம்தனுசு, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம்
கடகம்மகரம், ரிஷபம், சிம்மம், மகரம், மீனம்
கன்னிமீனம், ரிஷபம், கடகம், துலாம், மகரம்
சிம்மம்கும்பம், மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு
துலாம்சிம்மம்,கன்னி,  தனுசு, மகரம்
விருச்சிகம்ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, மீனம்
தனுசுமிதுனம், சிம்மம், மேஷம், துலாம், கும்பம்
மகரம்கடகம், ரிஷபம், கன்னி, மீனம், விருச்சிகம்
கும்பம்சிம்மம், மேஷம், மிதுனம், கன்னி, துலாம்
மீனம்கன்னி, ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம்

பொருந்தாத ராசிகள்

ராசிகள்பொருந்தாத ராசிகள்
மேஷம்கன்னி
ரிஷபம்துலாம், தனுசு
மிதுனம்விருச்சிகம், மகரம்
கடகம்கும்பம்
கன்னிமேஷம்,விருச்சிகம்
சிம்மம்மகரம், மீனம்
துலாம்மீனம், சிம்மம்
விருச்சிகம்மிதுனம், சிம்மம்
தனுசுரிஷபம், மிதுனம்
மகரம்சிம்மம், விருச்சிகம்
கும்பம்கடகம், மேஷம்
மீனம்துலாம், சிம்மம்

இதையும் படிக்கலாமே

திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை – Natchathira Porutham Tamil

திருமண ராசி பொருத்தம்- எந்த எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்? – Rasi Porutham in Tamil Read More »

திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை – Natchathira Porutham Tamil

உங்கள் ராசிக்கு பொருந்தும் நட்சத்திரம் எது? பொருந்தாத நட்சத்திரம் எது தெரியுமா? பார்ப்போம் வாருங்கள்

திருமண நட்சத்திர பொருத்தம்

திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை - Natchathira Porutham Tamil 2023

மேஷம்

natchathira porutham tamil

மேஷ ராசிக்குரிய நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி, கார்த்திகை (பாதம் 1). மேஷ ராசிக்குரிய Natchathira Porutham இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
அஸ்வினிபரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
பரணிரோகிணி, சுவாதி, உத்திராடம் (2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அஸ்வினி
கார்த்திகை ( 1ஆம் பாதம்)சித்திரை 4ஆம் பாதம், அவிட்டம் 1,2 ஆம் பாதம்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
அஸ்வினிபரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
பரணிபுனர்பூசம், உத்திராடம் , ரேவதி, அஸ்வினி
கார்த்திகை ( 1ஆம் பாதம்)சதயம்
Natchathira porutham

ரிஷபம்

natchathira porutham

ரிஷப ராசிக்குரிய நட்சத்திரங்கள் கார்த்திகை (பாதம் 2,3,4) ரோகிணி, மிருகசீரிஷம் (பாதம் 1,2). ரிஷப ராசிக்குரிய Natchathira Porutham இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
கார்த்திகை (2,3,4ஆம் பாதங்கள்)அஸ்தம், சித்திரை 1,2 ஆம் பாதங்கள், கேட்டை, அவிட்டம் 3,4 பாதங்கள்
ரோகிணிமிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள், உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
மிருகசீரிஷம் (பாதம் 1,2)  புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
கார்த்திகை (2,3,4ஆம் பாதங்கள்)சதயம்
ரோகிணிமிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள், புனர்பூசம் 4 ஆம் பாதம், உத்திரம், பூரட்டாதி, பரணி
மிருகசீரிஷம் (பாதம் 1,2)  உத்திரம் 1 ஆம் பாதம், உத்திராடம் 2,3, 4 ஆம் பாதங்கள், திருவோணம், சதயம், அஸ்வினி, ரோகிணி
Natchathira porutham Tamil

மிதுனம்

nakshatra porutham in tamil

மிதுன ராசிக்குரிய நட்சத்திரங்கள்  மிருகசீரிஷம் (பாதம்3,4), திருவாதிரை, புனர்பூசம். மிதுன ராசிக்குரிய Natchathira Porutham இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
மிருகசீரிஷம் (பாதம்3,4),திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், பூரட்டாதி, ரேவதி
திருவாதிரைபூசம், உத்திராடம் 1 ஆம் பாதம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் (பாதம்3,4)
புனர்பூசம்பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
மிருகசீரிஷம் (பாதம்3,4),திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள், சதயம், பரணி
திருவாதிரைபூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதங்கள்
புனர்பூசம்அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள், உத்திரட்டாதி, மிருகசீரஷம்
Natchathira porutham Tamil

கடகம்

nakshatra porutham

கடக ராசிக்குரிய நட்சத்திரங்கள் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம். கடக ராசிக்குரிய Nakshatra Porutham இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
புனர்பூசம் 4 ஆம் பாதம்பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
பூசம்உத்திரம், அஸ்வினி, புனர்பூசம்
ஆயில்யம்  அஸ்தம், அனுஷம், பூசம்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
புனர்பூசம் 4 ஆம் பாதம்பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள், உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
பூசம்ஆயில்யம், சுவாதி, விசாகம் 1,2, 3 பாதங்கள், பூரட்டாதி 4ஆம் பாதம், ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
ஆயில்யம்  சித்திரை, அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்
Natchathira porutham Tamil

சிம்மம்

திருமண பொருத்தம் நட்சத்திரம்

சிம்ம ராசிக்குரிய நட்சத்திரங்கள்  மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம். சிம்ம ராசிக்குரிய Nakshatra Porutham இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
மகம்சித்திரை, அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்
பூரம்அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1 ஆம் பாதம், திருவோணம்
உத்திரம் 1 ஆம் பாதம்பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
மகம்சதயம்
பூரம்உத்திரம் 1 ஆம் பாதம், பூரட்டாதி 1,2, 3 ஆம் பாதங்கள், அஸ்வினி
உத்திரம் 1 ஆம் பாதம்சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
Natchathira porutham Tamil

கன்னி

திருமண பொருத்தம்

கன்னி ராசிக்குரிய நட்சத்திரங்கள்  உத்திரம் ( பாதம் 2, 3, 4), அஸ்தம், சித்திரை (பாதம் 1,2). கன்னி ராசிக்குரிய Nakshatra Porutham in Tamil இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
உத்திரம் ( பாதம் 2, 3, 4)பூராடம், திருவோணம், ரேவதி
அஸ்தம்உத்திரம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதங்கள்
சித்திரை (பாதம் 1,2)விசாகம் 4 ஆம் பாதம், திருவோணம், ஆயில்யம்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
உத்திரம் ( பாதம் 2, 3, 4)அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
அஸ்தம்பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம், ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்
சித்திரை (பாதம் 1,2)கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்
Natchathira porutham

துலாம்

நட்சத்திர பொருத்தம்

துலாம் ராசிக்குரிய நட்சத்திரங்கள்  சித்திரை (பாதம் 3, 4), சுவாதி, விசாகம் (பாதம் 1, 2, 3). துலாம் ராசிக்குரிய Natchathira Porutham Tamil இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
சித்திரை (பாதம் 3, 4)விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
சுவாதிஅனுஷம், பூரட்டாதி 1,2, 3 ஆம் பாதங்கள், புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம்
விசாகம் (பாதம் 1, 2, 3)சதயம், ஆயில்யம்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
சித்திரை (பாதம் 3, 4)கார்த்திகை 1 ஆம் பாதம், மகம்
சுவாதிபூராடம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள், மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதங்கள், புனர்பூசம்
விசாகம் (பாதம் 1, 2, 3)அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள், சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்
Natchathira porutham

விருச்சிகம்

rasi porutham

விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்கள் விசாகம் (பாதம் 4), அனுஷம், கேட்டை. விருச்சிக ராசிக்குரிய Natchathira Porutham Tamil இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
விசாகம் (பாதம் 4)சதயம்
அனுஷம்உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள், ரேவதி, உத்திரம்
கேட்டை  திருவோணம், அனுஷம்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
விசாகம் (பாதம் 4)அவிட்டம், சதயம், சித்திரை
அனுஷம்கேட்டை, சதயம், பூரட்டாதி 1,2, 3 ஆம் பாதங்கள், ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
கேட்டை  கார்த்திகை 3, 4 ஆம் பாதங்கள்
Natchathira porutham

தனுசு

rasi porutham in tamil

தனுசு ராசிக்குரிய நட்சத்திரங்கள்  மூலம், பூராடம், உத்திராடம் (பாதம் 1). தனுசு ராசிக்குரிய Natchathira Porutham Tamil இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
மூலம்அவிட்டம், கார்த்திகை 1 ஆம் பாதம், மிருகசீரிஷம் 3, 4ஆம் பாதங்கள்
பூராடம்உத்திராடம், திருவோணம், அஸ்வினி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2, 3 ஆம் பாதங்கள், அஸ்தம்
உத்திராடம் (பாதம் 1)  பரணி, மிருகசீரிஷம் 3, 4ஆம் பாதங்கள், அஸ்தம், பூராடம்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
மூலம்உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
பூராடம்பூரட்டாதி, புனர்பூசம் 1,2, 3 ஆம் பாதங்கள், உத்திரம், ரேவதி
உத்திராடம் (பாதம் 1)  உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
Natchathira porutham

மகரம்

natchathira porutham tamil

மகர ராசிக்குரிய நட்சத்திரங்கள்  உத்திராடம் (பாதம் 2,3,4), திருவோணம், அவிட்டம் (பாதம் 1, 2). மகர ராசிக்குரிய Natchathira Porutham இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
உத்திராடம் (பாதம் 2,3,4)பரணி, மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்
திருவோணம்உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள், அனுஷம்
அவிட்டம் (பாதம் 1, 2)புனர்பூசம் 4 ஆம் பாதம், ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
உத்திராடம் (பாதம் 2,3,4)உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
திருவோணம்அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள், பூரட்டாதி 4 ஆம் பாதம், புனர்பூசம் 4 ஆம் பாதம், உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள், சித்திரை, கேட்டை, பூராடம்
அவிட்டம் (பாதம் 1, 2)கார்த்திகை 1 ஆம் பாதம், மூலம்
Natchathira porutham

கும்பம்

natchathira porutham

கும்ப ராசிக்குரிய நட்சத்திரங்கள் அவிட்டம் (பாதம் 3, 4), சதயம், பூரட்டாதி (பாதம் 1,2,3). கும்ப ராசிக்குரிய திருமண பொருத்தம் நட்சத்திரம் இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
அவிட்டம் (பாதம் 3, 4)சதயம், புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள், விசாகம் 4 ஆம் பாதம்
சதயம்கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள்
பூரட்டாதி (பாதம் 1,2,3)  உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
அவிட்டம் (பாதம் 3, 4)கார்த்திகை, சதயம், மகம், மூலம்
சதயம்சித்திரை  3, 4 ஆம் பாதங்கள், விசாகம், அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள்
பூரட்டாதி (பாதம் 1,2,3)  மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள், சுவாதி, அனுஷம்
Natchathira porutham

மீனம்

thirumana natchathira porutham

மீன ராசிக்குரிய நட்சத்திரங்கள்  பூரட்டாதி (பாதம் 4), உத்திரட்டாதி, ரேவதி. மீன ராசிக்குரிய திருமண பொருத்தம் நட்சத்திரம் இதோ,

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய பெண் நட்சத்திரங்கள்
பூரட்டாதி (பாதம் 4)உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
உத்திரட்டாதிரேவதி, புனர்பூசம், உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், உத்திராடம், பூரட்டாதி 4 ஆம் பாதம்
ரேவதிபரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

பெண் நட்சத்திரம்பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்கள்
பூரட்டாதி (பாதம் 4)உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
உத்திரட்டாதிரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர் பூசம் 1,2, 3 ஆம் பாதங்கள், அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
ரேவதிமிருகசீரிஷம், புனர் பூசம் 1,2,3 பாதங்கள், உத்திரம் 2,3,4 பாதங்கள், அனுஷம், உத்திரட்டாதி
Natchathira porutham

இதையும் படியுங்கள்

  1. பல்லி விழும் பலன்கள்
  2. பல்லி விழும் பலன் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமாக இருக்குமா?
  3. திருமண ராசி பொருத்தம்- எந்த எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்? – Rasi Porutham in Tamil

திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை – Natchathira Porutham Tamil Read More »

பல்லி விழும் பலன் பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமாக இருக்குமா?

பல்லி விழும் பலன் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமாக இருக்குமா?

பல்லி தோஷம் நிவர்த்தியாக நாம் செய்ய வேண்டியது என்ன?

பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?

Palli Vilum Palan in Tamil

பல்லி விழும் பலன் பெண்களுக்கு

பல்லி விழும் பலன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக இருக்குமா?

பல்லி விழும் பலன் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருக்காது. ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பக்கத்திலும் பல்லி விழுவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இதனால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. அதே நேரம் பல்லி ஒரு ஆணின் இடது பக்கத்திலோ அல்லது ஒரு பெண்ணின் வலது பக்கத்திலோ பல்லி விழுந்தால், கெட்ட சகுனமாக கருதப்படுகிறது.

ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பக்கத்திலும் பல்லி விிழுந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பல்லி விழும் பலன் ஆண்களுக்கு  

பல்லி விழும் பலன் ஆண்களுக்கு  
உடல் பாகம்வலதுஇடது
கண்முயற்சி தோல்வியில் முடியலாம்நல்ல செய்தி வரும் 
கைபிரச்சனைகள் வருவதை குறிக்கும் அவமானத்தை சந்திக்கலாம் 
காதுதொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்பணம் பெற்று கொள்ளும் அதிர்ஷ்டம் கிடைக்கும் 
தலைபிரச்சனைகள் வருவதை குறிக்கும் 
உச்சந்தலைமரண பயம் 
முகம்எதிர்பாராத செல்வம் கிடைக்கும் 
முன் நெற்றிதுணையை பிரிய நேரிடலாம் 
மேல் உதடுசண்டை வரலாம்
கீழ் உதடுபொருளாதார தடை நீங்கும் 
உதடுமரண செய்தி கிடைக்கும் 
வாய்ஆரோக்கியம் குறித்த பயம் 
மணிக்கட்டுவீடு மறுசீரமைப்பு அல்லது அழகுபடுத்தும் நடவடிக்கை 
கைநிதி இழப்பு 
விரல்கள்பழைய நண்பர்களை சந்திப்பீர்கள் 
தொடைஆடைகள் தொலையலாம்/ இழப்பீர்கள் 
மீசைதீர்க்க முடியாத கடினமான பிரச்சனைகள் வரும் 
பாதம்சவாலான காலமாக மாறும்
பின்னங்கால்பயணத்திற்கு தயார் ஆகும் அறிகுறி 
கால் விரல்கள்ஆரோக்கியம் குறித்த பயம் 

பல்லி விழும் பலன் பெண்களுக்கு

பல்லி விழும் பலன் பெண்களுக்கு  
உடல் பாகம்வலதுஇடது
கண்மன அழுத்தம் ஏற்படும் துணை உங்களை விரும்புவார் 
கன்னம்உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வெற்றி உண்டாகும்
காதின் மேற்புறம்பொருளாதார மேம்பாடு கிடைக்கும் வீண் கவலை உண்டாகும்
தோள்ரொமாண்டிக் சம்பவம் வரும் மனதில் மகிழ்ச்சி பெருகும்
கால்தோல்விகளை சந்திக்க நேரிடும் பதவி உயர்வு கிடைக்கும்
கைஉறவினர் வருகை அமையும்மன உளைச்சல் வரலாம்
உதடுபிரச்சினைகள் வரலாம் 
கீழ் உதடுஅவமானங்களை சந்திப்பீர்கள் 
மேல் உதடுபுதிய பொருள்கள் வாங்கும் யோகம் 
தலைமரண பயம்
தலை பின்னல் நோய்கள் குறித்து பயம் 
உதடுபிரச்சினைகள் வரலாம் 
முதுகுமரண செய்தி வரும் 
நகங்கள்பிரச்சனை வரலாம்
கைநிதி மேம்பாட்டை எதிர்பார்க்கலாம் 
விரல்கள்புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள் 
தோள்ப்பட்டைபுதிய நகைகளை வாங்குவீர்கள் 
முழங்கால்உங்கள் மீது யாரேனும் அன்பு மழை பொழியலாம் 
மூட்டுஏதோ பிரச்சனை வருவதன் அறிகுறி 
கால் விரல்கள்ஆண் குழந்தை பிறக்கும்
கெண்டைக்கால்வீட்டிற்கு விருந்தாளி வருவர் 

பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?

பல்லி விழும் பலன் பெண்களுக்கு

பல்லி நம் மீது விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் இருப்பதாக பழைய சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றிக்குரிய பாரிகாரங்களைச் செய்தால் பல்லி நம் மீது விழுவதால் ஏற்படக்கூடிய கெடுதலின் தாக்கம் குறையும். பல்லி மேலே விழுந்தால் உடனே தலைக்கு குளித்துவிட்டு இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும். வீட்டிற்கு அருகே உள்ள சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற கோவில்களில் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் , வீட்டின் பூஜை அறையிலேயே மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மை பயக்கும்.

Palli Vilum Palan in Tamil

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு கோவிலில் உள்ள தங்க மற்றும் வெள்ளி பல்லியை வழிபட்டால் தோஷங்கள் விலகும். திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு சென்று பல்லியை வழிபாடு செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கர்ப்ப கிரகத்தின் மேல் கூரையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லி உருவங்களை மனதில் நினைத்து வழிபடுவது நல்லது. அதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலிலும் இருக்கின்ற பல்லியை நினைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

பல்லி மேலே விழுந்தால் மகா மிரித்யுஞ்ஜய மந்திரத்தைப் படித்தால் பல்லி நம் மேலே விழுவதால் உண்டாகும் தோஷமானது நீங்கும்.

Palli Vilum Palan in Tamil

தெய்வங்களுக்கு தங்கம் அல்லது தங்க ஆபரணங்கள் தானமாக அளித்தால் பல்லியானது நம் மேலே விழுவதால் உண்டாகும் தோஷம் நீங்கும்.

பல்லி தோஷம் நிவர்த்தியாக நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

பல்லியைத் துன்புறுத்துவதாலும், தெரியாமல் அதனைக் கொல்வதாலும் தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. பல்லி தோஷம் நிவர்த்தியாக நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைப் பற்றி காண்போம்.

பல்லி தோஷம் நிவர்த்தியாக

Palli Vilum Palan in Tamil

காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பல்லியைத் தொட்டு வணங்கினால், பல்லியால் நமக்கு ஏற்படும் சகல தோஷங்களும் நீங்கும். மேலும், நம் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களும் முதலிய அனைத்து தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு அமையும்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள கோவிலில் பக்தியுடன் அனைவரும் தெய்வீகத் தன்மை கொண்ட பல்லியை வணங்கி வருகின்றனர். மேலும், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் பல்லியை அனைவரும் பக்தியுடன் வணங்கி வருகின்றனர்.

தோஷம் நிவர்த்தியான வரலாறு

பல்லி விழும் பலன் பெண்களுக்கு

ஸ்ரீ சிருங்கி பேரர் என்னும் முனிவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு நாள் பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வருவதற்காகச் சென்றனர். அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்தன. இதை கண்ட கௌதம முனிவர் கடுங்கோபம் அடைந்தார். அவர்கள் இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார். பின்னர், சிஷ்யர்கள் மனம் வருந்தி வேண்டிக்கொண்டதற்கு இணங்க, காஞ்சி வரதராஜர் கோவில் சென்றால் உங்களுக்கு பாவ விமோசனம் உண்டு எனக் கூறினார் கௌதம முனிவர்.

பெருமாளிடம் மோட்சம் வேண்டி நின்றனர் ஸ்ரீ சிருங்கி பேரரின் புதல்வர்கள். அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த வரதராஜ பெருமாள் உங்களின் ஆத்மா மட்டும் வைகுந்தம் செல்லும். உங்களின் சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்கும். என்னைத் தரிசிக்க வருபவர்கள் உங்களைத் தரிசித்தால் சகல தோஷமும் நீங்கி நல்வாழ்வு வாழ்வார்கள் என்று கூறினார்.

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் உள்ள தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லிகளைத் தொட்டு வணங்கினால், பல்லி நம் மீது விழுவதால் உண்டாகும் தோஷங்கள், கிரகண தோஷங்கள் அனைத்தும் விலகும். அதே போல் பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கும் இக்கோவிலில் உள்ள பல்லி உருவங்களை தொட்டு வணங்கினால் அந்த தோஷம் விலகும் .

பல்லி காலில் ஏறினால் என்ன பலன் என்ன தெரியுமா?

பல்லியானது வலது காலில்  ஏறினால் நாம் நம் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

பல்லியானது இடது காலில் ஏறினால் நாம் நம் வீட்டில் உள்ளோரின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

இதையும் படிக்கலாமே

  1. பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil
  2. பல்லி விழும் பலன்கள் 2023 – Palli Vilum Palan in Tamil நம் உடலில் தலை,இடது கை,வலது கை,வலது கால், தலை உச்சி என எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லி விழும் பலன் பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமாக இருக்குமா? Read More »

இன்றைய நல்ல நேரம் என்ன? இன்றைய  கௌரி பஞ்சாங்கம் எப்படி? இன்றைய கிரக ஓரை எப்படி? இன்றைய ராசி பலன் என்ன? இன்றைய நட்சத்திரம் என்ன? -(26 -5-2023)

இன்றைய நல்ல நேரம் என்ன? இன்றைய  கௌரி பஞ்சாங்கம் எப்படி? இன்றைய கிரக ஓரை எப்படி? இன்றைய ராசி பலன் என்ன? இன்றைய நட்சத்திரம் என்ன? -(26 -5-2023)

இன்றைய நல்ல நேரம்

சோபகிருது வைகாசி மாதம்  – 12 (26 -5-2023) வெள்ளிக்கிழமை  – வளர்பிறை  (கீழ்நோக்கு நாள்)

திதி – இன்று ஸ்ப்தமி முழுவதும்

இன்றைய நல்ல நேரம்

காலை -10.00 முதல் 10.30 வரை

மாலை -4.30 முதல் 5.30 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

இராகுகாலம் – 10.30 முதல் 12.00 வரை

குளிகை – 7.30 முதல் 9.00 வரை

எமகண்டம் -3.00 முதல் 4.30 வரை

இன்றைய நட்சத்திரம்

இன்று ஆயில்யம் 8.24 PM வரை பின்பு மகம்

இன்றைய  கௌரி பஞ்சாங்கம்

நேரம்காலைஇரவு
6-7.30சுகம்ரோகம்
7.30-9சோரம்லாபம்
9-10.30உத்தியோகம்தனம்
10.30-12விஷம்சுகம்
12-1.30அமிர்தம்சோரம்
1.30-3தனம்உத்தியோகம்
3-4.30லாபம்விஷம்
4.30-6சுகம்அமிர்தம்

இன்றைய கிரக ஓரை

நேரம்காலைஇரவு
6.00 -7.00சுக்கிரசெவ்வாய்
7.00 -8.00புதன்சூரியன்
8.00 -9.00சந்திரன்சுக்கிரன்
9.00-10 .00சனிபுதன்
10. 00 -11.00குருசந்திரன்
11.00 -12.00செவ்வாய்சனி
12.00 -1.00சூரியன்குரு
1.00 -2.00சுக்கிரசெவ்வாய்
2.00 -3.00புதன்சூரியன்
3.00 -4.00சந்திரன்சுக்கிரன்
4.00 -5.00சனிபுதன்
5.00 -6.00குருசந்திரன்

இன்றைய ராசி பலன்

ராசிபலன்
மேஷம்பக்தி
ரிஷபம்லாபம்
மிதுனம்களிப்பு
கடகம்யோகம்
சிம்மம்ஆர்வம்
கன்னிபயம்
துலாம்சுகம்
விருச்சிகம்செலவு
தனுசுநன்மை
மகரம்பொறுமை
கும்பம்ஆதாயம்
மீனம்நிம்மதி

சந்திராஷ்டம் – பூராடம், உத்திராடம்

இதையும் படிக்கலாமே –

  1. திருநீறு மகிமை பற்றி தெரிந்துகொண்டால், தினமும் திருநீறைப் பூசிக்கொள்வீர்- Thiruneer Benefits

இன்றைய நல்ல நேரம் என்ன? இன்றைய  கௌரி பஞ்சாங்கம் எப்படி? இன்றைய கிரக ஓரை எப்படி? இன்றைய ராசி பலன் என்ன? இன்றைய நட்சத்திரம் என்ன? -(26 -5-2023) Read More »

இன்றைய நல்ல நேரம் என்ன? இன்றைய  கௌரி பஞ்சாங்கம் எப்படி? இன்றைய கிரக ஓரை எப்படி? இன்றைய ராசி பலன் என்ன? இன்றைய நட்சத்திரம் என்ன? -(27 -5-2023)

இன்றைய நல்ல நேரம் என்ன? இன்றைய  கௌரி பஞ்சாங்கம் எப்படி? இன்றைய கிரக ஓரை எப்படி? இன்றைய ராசி பலன் என்ன? இன்றைய நட்சத்திரம் என்ன? -(27 -5-2023)

இன்றைய நல்ல நேரம்

சோபகிருது வைகாசி மாதம்  – 12 (27 -5-2023) சனிக்கிழமை  – வளர்பிறை (கீழ்நோக்கு நாள்)

திதி – இன்று ஸ்தப்தமி 6.57 AM வரை பின்பு அஷ்டமி

இன்றைய நல்ல நேரம்

காலை -7.30 முதல் 8.30 வரை

மாலை -4.30 முதல் 5.30 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

இராகுகாலம் – 9.00 முதல் 10.30 வரை

குளிகை – 6.00 முதல் 7.30 வரை

எமகண்டம் -1.30 முதல் 3.00 வரை

இன்றைய நட்சத்திரம்

இன்று மகம் 10.53 PM வரை பின்பு பூரம்

இன்றைய  கௌரி பஞ்சாங்கம்

நேரம்காலைஇரவு
6-7.30சோரம்லாபம்
7.30-9உத்தியோகம்தனம்
9-10.30விஷம்சுகம்
10.30-12அமிர்தம்விஷம்
12-1.30ரோகம்உத்தியோகம்
1.30-3லாபம்சோரம்
3-4.30சுகம்அமிர்தம்
4.30-6தனம்ரோகம்

இன்றைய கிரக ஓரை

நேரம்காலைஇரவு
6.00 -7.00சனிபுதன்
7.00 -8.00குருசந்திரன்
8.00 -9.00செவ்வாய்சனி
9.00-10 .00சூரியன்குரு
10. 00 -11.00சுக்கிரசெவ்வாய்
11.00 -12.00புதன்சூரியன்
12.00 -1.00சந்திரன்சுக்கிரன்
1.00 -2.00சனிபுதன்
2.00 -3.00குருசந்திரன்
3.00 -4.00சூரியன்சனி
4.00 -5.00சுக்கிரன்குரு
5.00 -6.00புதன்செவ்வாய்

இன்றைய ராசி பலன்

ராசிபலன்
மேஷம்மகிழ்ச்சி
ரிஷபம்எதிர்ப்பு
மிதுனம்சோதனை
கடகம்இன்பம்
சிம்மம்அச்சம்
கன்னிபரிவு
துலாம்தேர்ச்சி
விருச்சிகம்நிம்மதி
தனுசுநிறைவு
மகரம்ஏமாற்றம்
கும்பம்மேன்மை
மீனம்வெற்றி

சந்திராஷ்டம் – உத்திராடம், திருவோணம்

இதையும் படிக்கலாமே –

  1. உங்க ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? – Rasi Athishta Number and Colour

இன்றைய நல்ல நேரம் என்ன? இன்றைய  கௌரி பஞ்சாங்கம் எப்படி? இன்றைய கிரக ஓரை எப்படி? இன்றைய ராசி பலன் என்ன? இன்றைய நட்சத்திரம் என்ன? -(27 -5-2023) Read More »

இன்றைய நல்ல நேரம் என்ன? இன்றைய  கௌரி பஞ்சாங்கம் எப்படி? இன்றைய கிரக ஓரை எப்படி? இன்றைய ராசி பலன் என்ன? இன்றைய நட்சத்திரம் என்ன? -(21 -5-2023)

இன்றைய நல்ல நேரம் என்ன? இன்றைய  கௌரி பஞ்சாங்கம் எப்படி? இன்றைய கிரக ஓரை எப்படி? இன்றைய ராசி பலன் என்ன? இன்றைய நட்சத்திரம் என்ன? -(21 -5-2023)

இன்றைய நல்ல நேரம்

சோபகிருது வைகாசி மாதம்  – 7 (21 -5-2023) ஞாயிற்றுக்கிழமை –இன்றைய நல்ல நேரம் – வளர்பிறை (மேல்நோக்கு நாள்)

திதி – இன்று துவிதியை 10.35 வரை பின்பு திரிதியை

கரிநாள்

இன்றைய நல்ல நேரம்

காலை -7.30 முதல் 8.30 வரை

மாலை -1.30 முதல் 2.30 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

இராகுகாலம் – 4.30 முதல் 6.00 வரை

குளிகை – 3.00 முதல் 4.30 வரை

எமகண்டம் -12.00 முதல் 1.30 வரை

இன்றைய நட்சத்திரம்

இன்று ரோகினி 9.29 AM வரை பின்பு மிருகசீருஷம்

இன்றைய  கௌரி பஞ்சாங்கம்

நேரம்காலைஇரவு
6-7.30உத்தியோகம்தனம்
7.30-9அமிர்தம்சுகம்
9-10.30ரோகம்சோரம்
10.30-12லாபம்விஷம்
12-1.30தனம்உத்தியோகம்
1.30-3சுகம்அமிர்தம்
3-4.30விஷம்ரோகம்
4.30-6சோரம்லாபம்

இன்றைய கிரக ஓரை

நேரம்காலைஇரவு
6.00 -7.00சூரியன்குரு
7.00 -8.00சுக்கிரசெவ்வாய்
8.00 -9.00புதன்சூரியன்
9.00-10 .00சந்திரன்சுக்கிரன்
10. 00 -11.00சனிபுதன்
11.00 -12.00குருசந்திரன்
12.00 -1.00செவ்வாய்சனி
1.00 -2.00சூரியன்குரு
2.00 -3.00சுக்கிரசெவ்வாய்
3.00 -4.00புதன்சூரியன்
4.00 -5.00சந்திரன்சுக்கிரன்
5.00 -6.00சனிபுதன்

இன்றைய ராசி பலன்

ராசிபலன்
மேஷம்நற்செயல்
ரிஷபம்செலவு
மிதுனம்பயணம்
கடகம்இன்சொல்
சிம்மம்களிப்பு
கன்னிதாமதம்
துலாம்மகிழ்ச்சி
விருச்சிகம்நன்மை
தனுசுபொறுமை
மகரம்சோர்வு
கும்பம்கவனம்
மீனம்சிரமம்

சந்திராஷ்டம் – சுவாதி

இதையும் படிக்கலாமே –

  1. உங்க ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? – Rasi Athishta Number and Colour

இன்றைய நல்ல நேரம் என்ன? இன்றைய  கௌரி பஞ்சாங்கம் எப்படி? இன்றைய கிரக ஓரை எப்படி? இன்றைய ராசி பலன் என்ன? இன்றைய நட்சத்திரம் என்ன? -(21 -5-2023) Read More »

உங்க ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? – Rasi Athishta Number and Colour

உங்க ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?– Rasi Athishta Number and Colour

ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம்

Rasi Athishta Number and Colour -ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறங்கள் உள்ளது. அதை அறிந்து, அந்த ராசியினர், அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறங்களை அடிக்கடிப் பயன்படுத்தி வந்தால் வாழ்வில் வெற்றி காணலாம்.

மேஷம்

ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம்

மேஷம் ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 9. மேஷம் ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் சிவப்பு. மேஷம் ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 9 –ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

மேஷம் ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய சிவப்பை ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

ரிஷபம்

ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம்

ரிஷபம் ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 6. ரிஷபம் ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் பட்டுவெண்மை. ரிஷபம்  ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 6–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

ரிஷபம் ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய பட்டுவெண்மை ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

மிதுனம்

ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம்

மிதுனம் ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 5. மிதுனம் ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் பச்சை. மிதுனம்  ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 5–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

மிதுனம் ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய பச்சை ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

கடகம்

Rasi Athishta Number and Colour

கடகம் ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 2. கடகம் ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் வெண்மை, மஞ்சள். கடகம்  ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 2–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

கடகம் ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய மஞ்சள் ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

சிம்மம்

Rasi Athishta Number and Colour

சிம்மம் ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 1. சிம்மம் ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் சிவப்பு. சிம்மம் ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 1–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

சிம்மம் ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய சிவப்பு ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

கன்னி

Rasi Athishta Number and Colour

கன்னி ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 5. கன்னி ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் சிவப்பு. கன்னி ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 5–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

கன்னி ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய சிவப்பு ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

துலாம்

12 rsasikal

துலாம் ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 6. துலாம் ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் பட்டு வெண்மை. துலாம் ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 6–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

துலாம் ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய பட்டு வெண்மை ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

விருச்சிகம்

12 rsasikal

விருச்சிகம் ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 9. விருச்சிகம் ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் சிவப்பு. விருச்சிகம் ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 9–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

விருச்சிகம் ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய சிவப்பு ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

தனுசு

12 ராசிகள்

தனுசு ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 3. தனுசு ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் ஆரஞ்சு, ரோஸ். தனுசு ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 3–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

தனுசு ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய ஆரஞ்சு, ரோஸ் ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

மகரம்

12 ராசிகள்

மகரம் ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 8. மகரம் ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் நீலம். மகரம் ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 8–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

மகரம் ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய நீலம் ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

கும்பம்

12 ராசிகள்

கும்பம் ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 8. கும்பம் ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் நீலம். கும்பம் ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 8–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

கும்பம் ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய நீலம் ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

மீனம்

12 ராசிகள்

மீனம் ராசியினருக்குரியஅதிஷ்ட எண் 3. மீனம் ராசியினருக்குரியஅதிஷ்ட நிறம் ரோஸ். மீனம் ராசியினர் உங்கள் அதிஷ்ட எண்ணான 3–ஐ அடிக்கடி பயன்படுத்தி வந்தாலும், உங்கள் பாஸ்வோர்டாகவும், வாகன எண்ணாகவும், தொலைபேசி எண்ணில் உங்கள் அதிஷ்ட எண் வருமாறு பார்த்துக்கொண்டாலும் நீங்கள் அதன் மூலம் மிகுந்த பயன் அடைவீர்.

மீனம் ராசியினர் உங்கள் அதிஷ்ட நிறமாகிய ரோஸ் ஆடையை முக்கியமான விஷயத்திற்குச் செல்லும் போது அணிந்தால் வெற்றி நிச்சயம். பெரும்பாலும், தேர்வு எழுத செல்லும்போதும், பணிக்கான நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போதும், பிற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும் நீங்கள் உங்கள் அதிஷ்ட நிற ஆடையை அணிந்து செல்லலாம். அதன் மூலம் நீங்கள் மிகுந்த பயன் அடைவீர்.

இதையும் படிக்கலாமே –

  1.  மகிழ்ச்சியையும், மங்கலத்தையும் பெருக்கக்கூடிய வளையல்… வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா – Valaiyal

உங்க ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? – Rasi Athishta Number and Colour Read More »

திருநீறு மகிமை பற்றி தெரிந்து கொண்டால், தினமும் திருநீறைப் பூசிக்கொள்வீர்- Thiruneer Benefits

திருநீறின் மகிமை பற்றி தெரிந்து கொண்டால், தினமும் திருநீறைப் பூசிக்கொள்வீர் – Thiruneer Benefits

திருநீறு

மனதில் நினைத்தது நிறைவேற நாள் தவறாமல் இறைவனை வணங்கி, பக்தியின் அடையாளமாக தினமும் திருநீறைப் பூசிக்கொள்வர். திருநீறு என்பது பக்தியின் அடையாளம் மட்டும் அன்று. நமது உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு இணையற்ற பொக்கிஷம் என்று கூறலாம். திருநீறை வலது கையில் உள்ள மோதிர விரலால் எடுத்து பூசிக்கொள்ள வேண்டும்.  திருநீறு பூசிக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி காண்போம்.

திருநீறு மகிமை

திருநீறைப் பூசிக்கொள்வதால் ஞாபகத்திறன் வளரும். அறிவு ஆற்றல் பெருகும். கல்வியில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.

திருநீறு மகிமை

திருநீறைப் பூசிக்கொள்வதால் பாவங்கள் அனைத்தும் விலகும். இறைவனை மனதார நினைத்து, திருநீறைப் பூசிக்கொள்ளும், போது நாம் தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் விலகிச் செல்லும்.

திருநீறைப் பூசிக்கொள்வதால் ஏற்படும் பயன் – Thiruneer Benefits

திருநீறைப் பூசிக்கொள்வதால் முகமானது அழகு பெறும். முகம் மட்டும் அன்றி உள்ளத்திலும் அழகு கூடும். மரியாதை மிக்க தோற்றம் கொண்டவராக காண்பிக்கும் ஆற்றலை உடையது திருநீறு.

திருநீறைப் பூசிக்கொள்வதால் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் குணமாகும். உடலானது ஆரோக்கியமாகவும், புத்துணர்வாகவும் இருக்கும்.

திருநீறைப் பூசிக்கொள்வதால் உடலில் உள்ள நோய்கள் கிருமிகள் அனைத்தும் அழியும். உடலும், உள்ளமும் தூய்மையாகும். உள்ளத்தின் தூய்மை முகத்தில் தெரியும்.

திருநீறைப் பூசிக்கொள்வதால் ஏற்படும் பயன்

திருநீறைப் பூசிக்கொள்வதால் கண் திருஷ்டி அனைத்தும் விலகும். பில்லி சூனியம் அனைத்தும் விலகி ஓடும். வாழ்க்கையில் தடைகள் அனைத்தும் விலகிச்செல்லும். வெற்றி உண்டாகும். எடுத்த காரியம் கைகூடும்.

திருநீறைப் பூசிக்கொள்வதால் உடல் துர்நாற்றம் நீங்கும். உடலானது தூய்மையாகும்.

திருநீறைப் பூசிக்கொள்ளும் போது இறைவனை மனதார வேண்டினால், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். எதிரிகள் நம் முன்னே வந்து நிற்க கூட அஞ்சுவர். கடன் முழுவதுமாக நீங்கும். ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு கிடைக்கும். உயர் பதவி உள்ளவரிடமிருந்து உதவி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே –

  1. பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும் -Pradosham

திருநீறு மகிமை பற்றி தெரிந்து கொண்டால், தினமும் திருநீறைப் பூசிக்கொள்வீர்- Thiruneer Benefits Read More »

ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றக்கூடிய இந்த பொருளை உச்சந்தலையில் இப்படி வைத்தால் போதும், வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் – வசம்பு

ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றக்கூடிய இந்த பொருளை உச்சந்தலையில் இப்படி வைத்தால் போதும், வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் – வசம்பு

வசம்பு

எவ்வளவு முயற்சி செய்தும் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை என்று பெரிதும் புலம்பும் மக்களே! ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் இந்த பொருளை, உச்சந்தலையில் வைத்துப்பாருங்கள்… உங்கள் தலையெழுத்தே மாற்றக்கூடிய அந்த பொருள் வசம்பு.

இந்த பொருளால் பணம் சேர்த்துக்கொண்டே இருக்கும். நகைகள் மேன்மேலும் வாங்கும் யோகம் கிடைக்கும். உற்றார், உறவினர் மத்தியில் நமக்கான நன்மதிப்பு பெருகும். நம் தலையெழுத்தையே மாற்றக்கூடிய அந்த அதிஷ்டப் பொருளைப் பற்றி காண்போம்.

வசம்பு கிடைக்கும் இடம்

வசம்பு

கோடீஸ்வரர் யோகத்தைக் கொட்டித்தரக்கூடிய இந்த பொருளில் பல சக்தி உள்ளது. பெயர் சொல்லாதது என்று அழைக்கப்படும் இந்த வசம்பு, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வசம்பானது பணத்தை ஈர்க்கக்கூடிய ஆற்றலை உடையது.

இந்த பொருளை  நாட்டு மருந்து கடைகளில் வாங்கலாம். இதனை வாங்கும் போது இந்த பொருள் இவ்வளவு விலையா? என்று பேரம் பேசக்கூடாது. எவ்வளவு விலையானாலும் முதலில் இந்த பொருளை வாங்கிக்கொள்ள வேண்டும்.

வசம்பைப் பயன்படுத்தும் முறை

வசம்பை வாங்கி வந்து வீட்டின் பூஜை அறையில் வைக்கவேண்டும். வசம்பை சமையலறையிலோ, படுக்கை அறையிலோ வைக்கக்கூடாது. வசம்பு தெய்வீக சக்தியை உடையது என்பதால், இதனை பூஜை அறையில் மட்டுமே வைக்க வேண்டும்.

வசம்பு

காலையில் எழுந்தததும் குளித்துவிட்டு, பூஜை அறைக்குச் செல்ல வேண்டும். ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் நெய்யை ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர், திரியைப் போட்டு விளக்கேற்ற வேண்டும்.

வசம்பு

பின்னர், வசம்பை எடுத்து, தீபச்சுடரொளியில் காட்ட வேண்டும். வசம்பின் நுனிப்பகுதி கருப்பாக மாறும். அந்த கருப்பான பகுதியில் நெய்யைத் தடவிக்கொள்ள வேண்டும். இப்பொழுது வலதுகை மோதிர விரலால் இந்த வசம்பு பொட்டை எடுத்து உச்சந்தலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொட்டை நெற்றியிலும் வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு 48 நாட்கள செய்து வர வேண்டும்.

இந்த வசம்பு பொட்டை நெற்றியில் வைத்துக்கொண்டு வெளியில் சென்று வந்தால், எந்தவித துர்சக்தியும் நம்மை அண்டாது. மேலும், இந்த வசம்பு பொட்டை நெற்றியில் வைத்துக்கொண்டு முக்கியமான விஷயத்திற்குச் சென்று வந்தால், அந்த செயலில் வெற்றி உண்டாகும்.

வசம்பு பொட்டின் மகிமை

வசம்பு

புதிய தொழில் தொடங்க, கடன் வசூலிக்கச் செல்லும்போது, இந்த பொட்டை வைத்துக்கொண்டு சென்றால், அந்த செயல் வெற்றிகரமாக முடியும்.

பிறந்த குழந்தைக்கு மைக்கு பதிலாக இந்த வசம்பு பொட்டை வைப்பர். இந்த பொட்டை வைத்தால், எந்தவித துர்சக்தியும், காத்து கருப்பும் குழந்தையை நெருங்காது என்பது நம்பிக்கை.

தொழில் ரகசியம்

பெரிய பெரிய பணக்காரர்களின் தொழில் முன்னேற்ற இரகசியமாக நிச்சயமாக இந்த வசம்பு பொட்டு இருக்கும். மாபெரும் சக்தியை உடைய இந்த வசம்பு பொட்டை, வைத்துக்கொண்டால் அனைவருக்கும் பிடித்த ஒரு நபராக நீங்கள் மாறுவீர்கள்.

தொடர்ந்து இந்த பொட்டை நீங்கள் வைத்துக்கொண்டால், நீங்கள் மற்றவர் மத்தியல் அதிஷ்டத்தைக் கொடுக்கும் நபராக தெரிவீர்கள். முக்கியமான விஷயத்திற்கு உங்களை அழைத்து செல்ல விரும்புவார்கள். நீங்கள் உடன் வந்தால், அந்த செயல் வெற்றியில் முடியும் என்று நம்புவார்கள்.

வசம்பு

இந்த பொட்டை நீங்கள் வைத்து வந்தால், அடுத்தவர் உங்களிடம் பழகும் விதமும், நீங்கள் மற்றவரிடத்தில் பழகும் விதமும் மாறும். அனைவருக்கும் பிடித்த ஒரு நபராக மாறுவீர்கள். தொட்டது எல்லாம் வெற்றியாக முடியும். பண வரவு அதிகரிக்கும். வசம்பு துண்டை பர்ஸில் வைத்துக்கொண்டால், பணவரவு அதிகமாகும். எதிர்பார்க்காத அளவு பணம் சேரும். இத்தகைய மகத்துவம் வாய்ந்த வசம்பு பொட்டை, நாள்தோறும் நெற்றியல் வைத்துக்கொண்டு, வளமான வாழ்க்கையை வாழ்வோம். அளவிட முடியாத செல்வமும், சொல்லில் அடங்கா மகிழ்ச்சியையும் பெற்று வாழ்வோம்.

இதையும் படிக்கலாமே –

1.கண்டங்கத்திரி குழம்பு, கண்டங்கத்திரி  தீயல், கண்டங்கத்திரி ரசம் போதும் சளி, இருமல், சுவாசக்கோளாறு பிரச்சனையே இருக்காது- Kandankathri kuzhambu, Kandankathri theeyal, Kandankathri rasam…

2.ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு-Chitra pournami 2023

3.இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் –திரளாக குவிந்த பக்தகோடிகள்-Madurai meenakshi amman thirukalyanam- 2023

4.குழந்தை சாப்பிட வேண்டிய காய்கறிகள்-Vegetables for babies

5.இரத்த அழுத்தம் குறைய இதை செய்தால் போதும்-Blood pressure

ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றக்கூடிய இந்த பொருளை உச்சந்தலையில் இப்படி வைத்தால் போதும், வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் – வசம்பு Read More »

தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளும், அவற்றின் சிறப்பும்-Danam kodukka vendiya porutkal

தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளும், அவற்றின் சிறப்பும்-Danam kodukka vendiya porutkal

Danam kodukka vendiya porutkal

Danam kodukka vendiya porutkal-கோவிலுக்குச் சென்றாலே, மனமானது அமைதி பெறும். மனதில் உள்ள பாரங்கள் மற்றும் குழப்பங்கள் எல்லாம் இறைவனைக் கண்டவுடனே விலகிவிடும். பக்திக்கு அந்த அளவிற்குச் சிறப்பு உண்டு. கோவிலில் பல வகையான பொருட்களைத் தனமாக வழங்குவர். மனதில் வேண்டுதலை வைத்து, இறைவனை மனதில் நினைத்து இந்த தானமானது கொடுக்கப்படும். அத்தகைய தானத்தின் சிறப்புகளையும், பயனையும் அறிவோம் வாருங்கள்…

தானமும் அவற்றின் சிறப்பும், பயனும்…

Danam kodukka vendiya porutkal

அன்னத்தைத் தானமாகக் கொடுத்தால், வறுமை நீங்கும். கடன் தொல்லை நீங்கும். காரியத்தடை நீங்கி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

ஆடையைத் தானமாகக் கொடுத்தால், நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியத்துடன், நோய் நொடி இல்லாத வாழ்க்கை அமையும்.

தேனைத் தானமாகக் கொடுத்தால், புத்திர பாக்கியம் கிடைக்கம். பிள்ளைகளால், பேரும் புகழும் கிடைக்கும்.

தீபத்தைத் தானமாகக் கொடுத்தால், கண் பார்வைத் தெளிவாகும். பார்வை சார்ந்த கோளாறுகள் அனைத்தும் விலகும்.

அரிசியைத் தானமாகக் கொடுத்தால், பாவங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் செல்வ வளம் பெருகும். பணக்கஷ்டம் தீரும்.

நெய்யைத் தானமாகக் கொடுத்தால், நோய்கள் அனைத்தும் விலகும். உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.

பாலைத் தானமாகக் கொடுத்தால், துன்பங்கள் அனைத்தும் விலகி, இன்பமான வாழ்க்கை அமையும்.

தயிரைத் தானமாகக் கொடுத்தால், மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கை அமையும். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.

பழங்களைத் தானமாகக் கொடுத்தால், சிறந்த கல்வி ஞானமும், கேள்வி ஞானமும் கிடைக்கும். அரசாங்கப் பதவிகள் கிடைக்கும்.

பொன்னைத் தானமாகக் கொடுத்தால், குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் பெருகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வெள்ளியைத் தானமாகக் கொடுத்தால், மனக் கவலைகள் அனைத்தும் விலகும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பெருகும்.

Danam kodukka vendiya porutkal

பசுவைத் தானமாகக் கொடுத்தால், கடன் தொல்லை முழுவதுமாக நீங்கும். காரியத்தடை அனைத்தும் விலகும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

தேங்காயைத் தானமாகக் கொடுத்தால், நினைத்த காரியம் நிறைவேறும். செயலில் வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்.

நெல்லிக்காயைத் தானமாகக் கொடுத்தால், கல்வியில் சிறந்த அறிவும், கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும். உயர் பதவி கிடைக்கும்.

இடத்தைத் தானமாகக் கொடுப்பதன் மூலம் இறைவன் தரிசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். மங்காத புகழும், சிறப்பும் என்றும் நிலைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே- 

மகிழ்ச்சியையும், மங்கலத்தையும் பெருக்கக்கூடிய வளையல்… வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா- Valaiyal

தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளும், அவற்றின் சிறப்பும்-Danam kodukka vendiya porutkal Read More »

அர்ச்சனையாக செய்யப்படும் மலர்கள்…அவற்றின் பயன்கள் -Archanai malargal

Archanai malargal-அர்சனையாக செய்யப்படும் மலர்கள்…அவற்றின் பயன்கள்….

Archanai malargal

Archanai malargal-கோவிலுக்குச் சென்றாலே, மனமானது அமைதி பெறும். மனதில் உள்ள பாரங்கள் மற்றும் குழப்பங்கள் எல்லாம் இறைவனைக் கண்டவுடனே விலகிவிடும். பக்திக்கு அந்த அளவிற்குச் சிறப்பு உண்டு. கோவிலுக்குச் செல்லும்போது, அர்ச்சனை கூடைகள் எடுத்துச் செல்வது வழக்கம். அர்ச்சனை கூடையில் முதன்மையான இடம் வகிப்பது மலர்கள். கடவுளுக்கு அர்சனையாக பல மலர்களைப் பயன்படுத்துவார்கள். அவற்றின் பயன்களை அறிவோம் வாருங்கள்…

அர்ச்சனை மலர்களும் பயன்களும்…

Archanai malargal

அல்லிப் பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், வீட்டில் செல்வம் பெருகும். வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். காரியத் தடை நீங்கும்.

பூவரசம் பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், நோய் நொடி அனைத்தும் விலகும். உடலானது ஆரோக்கியமாகவும், நோய் நொடியின்றியும் இருக்கும்.

வாடமல்லி பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், மரணபயமானது நீங்கும். ஆயுள் பெருகும்.

மல்லிகை பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் பெருகும். வீண் விவாதம் குறையும்.

செம்பருத்தி பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், மன தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிவு பிறக்கும்.

காசாம் பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், நல்வாழ்வு அமையும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

அரளிப் பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், கடன் தொல்லை அனைத்தும் விலகும். பண வரவு அதிகரிக்கும்.

அலரி பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் அமையும். வாழ்க்கையின் மீது பிடிப்பு அதிகரிக்கும்.

ஆவாரம் பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், நினைவாற்றல் பெருகும். அறிவு தெளிவாகும். கல்வி ஞானம் பெருகும்.

கொடிரோஜா பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் பெருகும். வீண் விவாதம் குறையும்.

மருக்கொழுந்தால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசீர்வாதம்,உதவி கிடைக்கும்.

சம்பங்கி பூவால் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்தால், பணி இடமாற்றம், வீடு இடமாற்றம் ஆகியவை நிறைவேறும். மேலும், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே-

அபிஷேகமாக பொருட்களும் …அவற்றின் பயன்களும்….-அபிஷேக பொருட்கள் பலன்கள்

அர்ச்சனையாக செய்யப்படும் மலர்கள்…அவற்றின் பயன்கள் -Archanai malargal Read More »

தோஷங்களை நிவர்த்தி செய்ய செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள்…Dosham nivarthi aga

தோஷங்களை நிவர்த்தி செய்ய செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள்…Dosham nivarthi aga

Dosham nivarthi aga

Dosham nivarthi aga-மக்கள் வளமான , அமைதியான, நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்காக பெரிதும் முயற்சி செய்கின்றனர். ஆனால், ஜாதகத்தில் அவர்களுக்கு உள்ள தோஷங்களால், மிகவும் அவதிப்படுகின்றனர். தோஷம் நிவர்த்தியாக செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள் பற்றி காண்போம்.

தோஷ வகைகள்

புத்திர தோஷம், பித்ரு தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் ,சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை ஆகும்.

பரிகாரத் தலங்கள் -Dosham nivarthi aga

தோஷங்களை நிவர்த்தி செய்ய செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள்

புத்திர தோஷம்

புத்திர தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் செல்ல வேண்டும். அங்கு கடலில் 21 முறை மூழ்கி எழுந்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புத்திர தோஷம்  நிவர்த்தியாகும்.

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம் உள்ளவர்கள் காள அஸ்தி கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்குச் சென்று பித்ரு தோஷ பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நிவர்த்தியாகும்.

மாங்கல்ய தோஷம்

மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் சுமங்கலி ஏழு பேருக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்து ஆசீர்வாதம் பெறுவதன் மூலம் மாங்கல்ய தோஷம் நிவர்த்தியாகும்.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு, எலுமிச்சை பழத்தில் விளக்கு போட்டு வந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.

ராகு, கேது தோஷம்

ராகு, கேது தோஷம் நிவர்த்தியாக காள அஸ்தி சென்று பரிகாரம் செய்தால், இந்த தோஷம் நிவர்த்தியாகும். மேலும், நாகர் சிலை வாங்கி, கோவிலில் வைத்து வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும்.

சூரிய தோஷம்

சிவன் கோயில்களில் இருக்கும் சூரிய பகவானுக்கு கோதுமை, வெள்ளை ஆடை வைத்து வழிபட வேண்டும். மேலும், ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் இந்த பரிகாரம் செய்வது இரட்டிப்பு பலனைத் தரும்.

களத்திர தோஷம்

களத்திர தோஷம் நீங்க சுக்கிர பகவானை மனதார வேண்டினால் போதும். களத்திர தோஷம் நிவர்த்தியாகும். சுக்கிர பகவனால் நல்வாழ்வு அமைய சிறப்பு வழிபாடு செய்வது அவசியமாகும்.

இந்த பரிகாரங்களை முறையாக செய்தால், தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு வாழலாம்.

இதையும் படிக்கலாமே-

முகப்பொலிவு பெற இந்த மூன்று பொருட்கள் போதும்… பத்தே நொடியில் முகமானது பொலிவு பெறும்…- Mugam polivu pera

தோஷங்களை நிவர்த்தி செய்ய செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள்…Dosham nivarthi aga Read More »

ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு-Chitra pournami 2023

ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு-Chitra pournami 2023

Chitra pournami 2023

Chitra pournami 2023-சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி சித்ரா பௌர்ணமி ஆகும்.இந்த வருடம் சித்ரா பௌர்ணமி மே -5 வெள்ளிக்கிழமை வருகிறது. சித்ரா பௌர்ணமி நாளன்று சித்ர குப்தர் பிறந்தார்  என்பது வரலாறு. சித்ரா பௌர்ணமி அன்று சித்ர குப்தர் கோவிலில் சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகம் நடைபெறும்.

சித்ர குப்தர் கோவில்

சித்ரா பௌர்ணமி அன்று சித்ர குப்தர் வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். சித்ர குப்தர் கோவில் காஞ்சிபுரம் மற்றும் திருப்பூரில் உள்ளது. சித்ர குப்தர் மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கிட்டு, அதற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கத்தைத் தருவார்.

இந்த சித்ரா பௌர்ணமி நாளன்று சித்ர குப்தரை வணங்கி, நாங்கள் கடுகு அளவு செய்த புண்ணியத்தை மலை அளவாகவும், மலை அளவு செய்த பாவத்தைக் கடுகு அளவாகவும் எடுத்துக்கொண்டு எங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் தருக என மனதார வேண்டினால், சித்ர குப்தர் அருளால் நல்வாழ்வு அமையும்.

Chitra pournami 2023
Chitra pournami 2023

சித்ரா பௌர்ணமி வழிபாடு செய்யும் முறை

சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலையில் எழுந்து, நீராட வேண்டும். பூஜை அறையைச் சுத்தம் செய்து, சாமி படத்திற்கு மலர்களைச் சூட வேண்டும். சித்ரா பௌர்ணமி அன்று ஒரு வேளை உண்ணா நோன்பு இருந்தால் செல்வம் பெருகும். அன்றைய நாள் உணவில் உப்பு, பால், தயிர் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே –பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham

சித்ர குப்தர் வழிபாடு செய்யும் முறை

செம்பு கலசத்தைக் கழுவி சுத்தம் செய்து, மஞ்சள் , குங்குமம் வைக்க வேண்டும். பின்னர், கலசத்தின் நடுவில் தேங்காயை வைக்க வேண்டும். அந்த கலசத்தை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சித்ர குப்தரை மனதார நினைத்து, பாசிப்பயிறு பாயசத்தைச் செய்து, கடவுளுக்கு வைத்து படைக்க வேண்டும். புளிசாதம், எலுமிச்சைசாதம், சர்க்கரைப்பொங்கல் ஏதேனும் ஒரு சாதத்தைக் கடவுளுக்கு வைத்து படைக்க வேண்டும்.

தோஷம் நீக்கும் சித்ரா பௌர்ணமி வழிபாடு

Chitra pournami 2023

சித்ர பௌர்ணமி அன்று சித்ர குப்தரை மனதார நினைத்து வழிபட்டால், கேது தோஷம் நீங்கும். நவக்கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷம் நீங்கும். செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும். ராகு தோஷம், நாக தோஷம் என சகல தோஷங்களும் விலகும்.

சித்ரா பௌர்ணமி வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள்

சித்ர குப்தரை மனதார நினைத்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கும். கடன் தொல்லை தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும்.

சித்ரா பௌர்ணமி அன்று கொடுக்க வேண்டிய தானம்

சித்ரா பௌர்ணமி அன்று உணவு தானம் செய்தால், செல்வ வளத்துடன் வாழ வழி கிடைக்கும். ஏழை குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் தானமாகக் கொடுத்தால், பேரும் புகழோடும் வாழ்வர். ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள் மற்றும் ஆடைகளைத் தனமாகக் கொடுத்தால், பாவங்கள் அனைத்தும் விலகி, புண்ணியம் கிடைக்கும்.

பெண் தெய்வ வழிபாடு

இந்த வருடம் சித்ரா பௌர்ணமி வெள்ளிக்கிழமை வருவதால், அந்நாளில் பெண் தெய்வத்தை வழிபடுவது சகல ஜஸ்வர்யமும் கிடைக்க வழி செய்யும். அம்மனை மனதார வழிபட்டு, முறையாக விரதம் இருக்க வேண்டும். அந்நாளில் மஞ்சள், குங்குமம், உப்பு, புதிய நோட்டு ஆகிய பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும்.

கிரிவலம்-Chitra pournami 2023 girivalam

சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் மேற்கொண்டால் எடுத்த காரியம் கைகூடும். செல்வம் பெருகும். சிவபெருமானை மனதார நினைத்து, வழிபட்டால் தடைகள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். நோய் நொடி இல்லா ஆரோக்கியமான வாழ்க்கையும்,

ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு-Chitra pournami 2023 Read More »

இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் –திரளாக குவிந்த பக்தகோடிகள்-Madurai meenakshi amman thirukalyanam- 2023

இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் –திரளாக குவிந்த பக்தகோடிகள்-Madurai meenakshi amman thirukalyanam- 2023

Madurai meenakshi amman thirukalyanam- 2023

Madurai meenakshi amman thirukalyanam- 2023 பக்த கோடிகள் எதிர்பார்த்துக் காத்திருந்த மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மே 2 மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருக்கல்யாணத்தைக் காண திரளான மக்கள் கூடியுள்ளனர்.

இன்று காலை 8.30 மணி முதல் 8.59 மணி வரை மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அம்மனின் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்பத்தில் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வர் திருக்கல்யாணத்திற்கு ஏற்பாடுகள் மிக சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே-ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடு-Chitra pournami 2023

கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மதுரை அரசி மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு உள்ளார். மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காண வந்த பக்தர்கள் அதிகாலையில் எழுந்து, புனித நீராடி வழிபாட்டைத் தொடங்குவது வழக்கம். விபூதி விநாயகருக்கு அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெற உள்ளது. பக்தர்கள் பக்தி பாடலைப் பாடியவாறு கோவிலின்  உள் நுழைவது வழக்கம்.

பக்தர்கள் தூய மனதோடு, அர்ச்சனைக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வர். கோவிலில் தெய்வங்கள் மிக நேரத்தியாக அலங்கரிக்கப்படுவது வழக்கம். மலர் மாலைகள் மற்றும் பட்டு ஆடைகளால் தெய்வச்சிலைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் மணக்கோலத்தில் காட்சி தருவார். கோவிலில் உள்ள பிரதான பூசாரிகள் பூஜைகளை நடத்துவார்கள். திருமண சடங்குகள் அனைத்தும் முறைப்படி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணம் நடந்தேறியப்பின் சுந்தரேஸ்வர் மற்றும் மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் வந்து மக்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.

மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தைக் காண திரளான மக்கள் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்டு அம்மனின் ஆசியையும், அனுகிரகத்தையும் பெற்று வளமாக வாழ்வோம்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் –திரளாக குவிந்த பக்தகோடிகள்-Madurai meenakshi amman thirukalyanam- 2023 Read More »

Scroll to Top