ஆன்மீகம்

வீட்டில் செல்வம் பெருக எளிய பரிகாரங்கள் -selvam peruga pariharam in tamil

வீட்டில் செல்வம் பெருக எளிய பரிகாரங்கள் -selvam peruga pariharam in tamil

selvam peruga pariharam in tamil

பணத்தை சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சிலரால் சேமிக்கவோ பணத்தை தக்கவைக்கவோ முடியாது. எனவே பணத்தை சம்பாதிக்கவும், அதை நமது பக்கம் ஈர்த்து நம்மிடம் தக்க வைக்கவும், புகழ் செல்வாக்குடன் வாழவும் சில விசயங்களை நாம் செய்ய வேண்டும். அதன் மூலம் பணத்தை சம்பாதிப்பதுடன் அதை சேமிக்கவும் முடியும் புகழோடு வாழவும் முடியும்.

சுமங்கலி தெய்வங்கள்

selvam peruga pariharam in tamil

வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.

மஞ்சள் கிழங்கு

நம்முடைய வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் அவசியம் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

ஊறுகாய் அவசியம்

எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் வறுமை இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும். மளிகை சாமான்கள் வாங்கும் போதே ஊறுகாய்களையும் லிஸ்ட் போட்டு வாங்கி விடுங்கள்.

பணம் அதிகம் பெருக

selvam peruga pariharam in tamil

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும். செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது.

அன்னதானம்

selvam peruga pariharam in tamil

சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும். பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும். பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும்.

பணம் அதிகம் சேர

selvam peruga pariharam in tamil

செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் பெருகும்.செவ்வாய்கிழமையில் செவ்வரளி மலரைக் கொண்டு முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும். கோவிலில் லட்சுமி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.

வளையலும் பொட்டும் பெண்கள்

selvam peruga pariharam in tamil

மங்களகரமாக இருக்க வேண்டும். பூ வைத்து பொட்டு வைத்து இருப்பது பெண்களுக்கு அழகு. பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்காமல் பூஜை செய்யக்கூடாது. பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது,தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

மகிழ்ச்சியாக இருங்கள்

selvam peruga pariharam in tamil

பெண்கள் மகாலட்சுமியின் அம்சம் என்பதால் ஒரு வீட்டில் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தாலே அந்த வீட்டில் செல்வம் எளிதில் சேரும். யார் ஒருவர் தனது மனைவி, குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்களோ அவர்களைத் தேடி செல்வம் வரத்தொடங்கும். இது பலரது வாழ்க்கையில் நிரூபிடிக்கப்பட்ட உண்மை. வந்த செல்வத்தை மதிக்க வேண்டும். வராத செல்வத்தை நினைத்து ஏங்கக் கூடாது. எனவே மகிழ்ச்சியாக இருங்கள் மகாலட்சுமி வீடு தேடி வருவாள்.

ஸ்கந்த சஷ்டி விரதம் 2024 -சூரசம்ஹாரம் தேதி நேரம் – திருச்செந்தூர் 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் -Maha kanda sashti viratham in Tamil

வீட்டில் செல்வம் பெருக எளிய பரிகாரங்கள் -selvam peruga pariharam in tamil Read More »

ஸ்கந்த சஷ்டி விரதம் 2024 -சூரசம்ஹாரம் தேதி நேரம் – திருச்செந்தூர் 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் -Maha kanda sashti viratham in Tamil

ஸ்கந்த சஷ்டி விரதம் 2024 -சூரசம்ஹாரம் தேதி நேரம் – திருச்செந்தூர் 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் -Maha kanda sashti viratham in Tamil

Maha kanda sashti viratham in Tamil

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில்,  6 நாட்கள் ஸ்கந்த சஷ்டி விரதம் நவம்பர் 2, 2024 அன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

சூரசம்ஹாரம்

Maha kanda sashti viratham in Tamil

நவம்பர் 7, 2024 அன்று (வியாழன்)குறிப்பு:– திருச்செந்தூரில், நவம்பர் 7, 2024 அன்று (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.15 மணி முதல் 6 மணி வரை இந்திய நேரப்படி சூரசம்ஹாரம் நடைபெறும்.– சஷ்டி திதி நவம்பர் 6 ஆம் தேதி இரவு 10.03 மணிக்கு தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி இரவு 9.20 மணிக்கு முடிவடைகிறது.

திருக்கல்யாணம்

Maha kanda sashti viratham in Tamil

திருச்செந்தூரில் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருக்கல்யாணத்திற்கு பின்: பட்டணபிரவேசம், ஊஞ்சல் உற்சவம், மஞ்சள் நீராட்டு போன்றவை நடைபெறுகின்றன. அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

திருச்செந்தூர் கோவில் – முக்கிய நேரங்கள்:

குறிப்பு: இது முந்தைய ஆண்டுகளில் பூஜை அட்டவணையை அடிப்படையாகக் கொண்டது. இது குறிப்புக்கு மட்டுமே. உண்மையான நேரங்கள் திருவிழாவின் வருகையின் போது மட்டுமே கோயிலால் அறிவிக்கப்படும். மாற்றங்கள் புதுப்பிக்கப்படும் (ஏதேனும் இருந்தால்)

நவம்பர் 2, 2024 (சனிக்கிழமை) – நாள் 1 – கந்த சஷ்டி திருவிழா ஆரம்பம்– அதிகாலை 1 மணி IST (அதிகாலை) – கோவில் திறக்கப்பட்டது

— 1.30 am – Viswaroopa Darisanam– அதிகாலை 2 மணி – ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு (மூலவர்) உதயமார்த்தாண்ட அபிஷேகம்

— After 5.30 am – Sri Jayanthinathar Yaga Salai Purapadu – Yaga Salai Ezhuntharulal

— 6.30 am – Yaaga Salai Pujai– காலை 10 மணி – மூலவருக்கு உச்சி கால அபிஷேகம்– ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு அபிஷேகம்– மூலவருக்கு உச்சி கால தீபாராதனை– மதியம் 12 மணி – ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, காப்பு கட்டுதல்

— மதியம் 12.45 – தங்கச் சப்பரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயந்தி நாதர், யாகசாலையிலிருந்து சண்முக விலாச மண்டபத்திற்கு வேல் வகுப்பு, வீரவால் வகுப்பு, மேளவாத்தியம் ஆகிய முழக்கங்களுக்கு மத்தியில் செல்கிறார். அதன் பின் தீபாராதனை நடக்கிறது

நவம்பர் 3, 2024 (ஞாயிற்றுக்கிழமை) முதல் நவம்பர் 6, 2024 (புதன்கிழமை) வரை – நாள் 2 முதல் நாள் 5 வரை– அதிகாலை 3 மணி IST – கோவில் திறக்கப்பட்டது

— 3.30 am – Viswaroopa Tharisanam– அதிகாலை 4 மணி – ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு (மூலவர்) உதயமார்த்தாண்ட அபிஷேகம்

— 7 am – Yaaga Salai Pujai in the morning– மூலவருக்கு உச்சி கால அபிஷேகம்– ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு அபிஷேகம்– மூலவருக்கு உச்சி கால தீபாராதனை– மதியம் 12 மணி – ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை– மதியம் 12.45 – தங்கச் சப்பரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயந்தி நாதர், யாகசாலையிலிருந்து சண்முக விலாச மண்டபத்திற்கு வேல் வகுப்பு, வீரவால் வகுப்பு, மேளவாத்தியம் ஆகிய முழக்கங்களுக்கு மத்தியில் செல்கிறார். அதன் பின் தீபாராதனை நடக்கிறது– மதியம் சண்முக விலாச மண்டபத்தில் ஸ்ரீ ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.– மாலை சுமார் 4 மணி – சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம்– யாகசாலை பூஜை– மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை– சஷ்டி மண்டபத்தில் ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு தீபாராதனை– மூலவருக்கு ராகால அபிஷேகம்– இரவு – தங்க தேர் (தங்க தேர்)– மூலவருக்கு ஏகாந்த தீபாராதனை

நவம்பர் 7, 2024 (வியாழன்) – நாள் 6 – சூரசம்ஹாரம்– அதிகாலை 1 மணி IST (அதிகாலை) – கோவில் திறக்கப்பட்டது– 1.30 am – Viswaroopa Darisanam– அதிகாலை 2 மணி – ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு (மூலவர்) உதயமார்த்தாண்ட அபிஷேகம்

— 6 am – Yaaga Salai Pujai– காலை 10 மணி – மூலவருக்கு உச்சி கால அபிஷேகம்– ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு அபிஷேகம்– மூலவருக்கு உச்சி கால தீபாராதனை– மதியம் 12 மணி – ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை– மதியம் 12.45 – தங்கச் சப்பரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயந்தி நாதர், யாகசாலையிலிருந்து சண்முக விலாச மண்டபத்திற்கு வேல் வகுப்பு, வீரவால் வகுப்பு, மேளவாத்தியம் ஆகிய முழக்கங்களுக்கு மத்தியில் செல்கிறார். அதன் பின் தீபாராதனை நடக்கிறது– மதியம் சண்முக விலாச மண்டபத்தில் ஸ்ரீ ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.– பிற்பகல் 2 மணி – சஷ்டி மண்டபத்தில் ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம்.– மாலை 3 மணி – சாயரட்சை தீபாராதனை

— Around 4.15 pm – Sri Jayanthinathar Kadarkarai Eluntharulal– மாலை சுமார் 4.50 – தாரகாசுர சம்ஹாரம் – தொடர்ந்து – சிங்கமுகாசுர சம்ஹாரம்

— மாலை சுமார் 5.30 மணி – சூரசம்ஹாரம்— சூரசம்ஹாரத்திற்குப் பின்: சந்தோஷ மண்டபத்தில் ஸ்ரீ ஜெயந்திநாதர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனை.

— Giri Prakara Ula, Thirukovil Serthal– கோயிலுக்குள் 108 மகாதேவர் சந்நிதியில் சாயா அபிஷேகம் நடைபெறும். சமஸ்கிருதத்தில் ‘சாயா’ என்றால் உருவம் என்று பொருள். ஸ்ரீ ஜெயந்திநாதர் முன் கண்ணாடி வைக்கப்பட்டு, கண்ணாடியில் உள்ள அவரது உருவத்திற்கு அபிஷேகம் செய்யப்படும். சாயா அபிஷேகம், சஷ்டி பூஜைக்கு பிறகு தகடுகள் கடுத்தல்– மூலவருக்கு ராகால அபிஷேகம்– மூலவருக்கு ஏகாந்த தீபாராதனை

நவம்பர் 8 (வெள்ளிக்கிழமை) – நாள் 7 – திருக்கல்யாணம்— அதிகாலை 3 மணிக்கு – கோவில் திறக்கும்

— 5 am – Sri Deivanai Ambal Thabasu Kaatchi Purapadu

— Around 6.30 pm – Sri Kumaravidanga Swamy – Ambal – Tholmaalai Maatrum Nigalchi– இரவு 11 மணிக்குப் பிறகு (நள்ளிரவு) – திருக்கல்யாணம்

நவம்பர் 9 (சனிக்கிழமை) – நாள் 8

— Night: Sri Kumaravidanga Peruman in Thanga Mayil Vahanam, Sri Deivanai Ambal PooPallaku Pattanapravesham

நவம்பர் 10 (ஞாயிறு) முதல் நவம்பர் 12 (செவ்வாய்கிழமை) வரை – நாள் 9 முதல் நாள் 11 வரை

— Evening: 6 pm – Oonjal Utsavam – Sri Kumaravidanga Peruman, Sri Deivanai Ambal Unjal Kaatchi at Thirukalyana Mandapam

நவம்பர் 13 (புதன்) – நாள் 12

— Evening: 4.30 pm: Manjal Neeratu – Swami Ambal Thiruveedhi Ula – Thirukovil Serthal

சூரசம்ஹாரம் நேரடி ஒளிபரப்பை தூர்தர்ஷன் டிடி பொதிகை, தந்தி டிவி, நியூஸ்18 தமிழ்நாடு மற்றும் பிற தமிழ் செய்தி சேனல்களில் பார்க்கலாம்

அடுத்த ஆண்டு ஸ்கந்த சஷ்டி தேதி:2025ல் சூரசம்ஹாரம் – 27 அக்டோபர் 2025 (திங்கட்கிழமை)

கந்தர் அனுபூதி வரிகள் – கந்தர் அநுபூதி- Kandar Anuboothi Tamil Lyrics

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

ஸ்கந்த சஷ்டி விரதம் 2024 -சூரசம்ஹாரம் தேதி நேரம் – திருச்செந்தூர் 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் -Maha kanda sashti viratham in Tamil Read More »

திரு அருணகிரிநாதரின் – வேல் விருத்தம் -vel virutham

திரு அருணகிரிநாதரின் – வேல் விருத்தம் -vel virutham

வேல் விருத்தம்

திரு அருணகிரிநாதரின் – வேல் விருத்தம்

வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல்
வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல்

வேல் விருத்தம்

வேல் விருத்தம் – 1

மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே
வளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகல
மகிழ்வு பெறும் அறு சிறையவான்
சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழு
செந் நெல்களொடு தரளம் இடவே
செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
இடர் அடைய நுகரும் வடிவேல்
தகரம் இரு கமதம் என மணமருவு கடகலுழி
தரு கவுளும் உறுவள் எயிறுன்
தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்
குகரமலை எயினர்ககுல மடமயிலும் என இருவர்
குயம் ஒடமர் புரியு முருகன்
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே

வேல் விருத்தம் – 2

வெங்காள கண்டர் கை சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக் கருதியே
சங்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசன கன்னி
நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாக்ஷி
சைவ சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற்றி இருக்கை வேலே

வேல் விருத்தம்

வேல் விருத்தம் – 3

வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும்
வெகுளுறு பசாச கணமும்
வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்க வந்தே
ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக் கிரியெலாம்
அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத்தசை
அருந்தி புரந்த வைவேல்
தாதார் மலர்ச்சுனைப் பழனிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்
தணிகை செந்தூரிடைக் கழி ஆவினங்குடி
தடங் கடல் இலங்கை அதனிற்
போதார் பொழில் கதிர்க்காமத் தலத்தினை
புகழும் அவரவர் நாவினில்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் செங்கை வேலே

வேல் விருத்தம் – 4

அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே
அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல
அகில தலமும் சுழலவே
மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினிற் சகல தலமும் அருள சிரம
வகை வகையினிற் சுழலும் வேல்
தண்டம் உடனுங் கொடிய பாசம் உடனுங் கரிய
சந்தம் உடனும் பிறைகள்போல்
தந்தமுடனுந் தழலும் வெங்கண் உடனும் பகடு
தன்புறம் வரும் சமனை யான்
கண்டு குலையும் பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம் உதவும் கருணைவேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே

வேல் விருத்தம் – 5

ஆலமாய் அவுணருக் அமரருக் அமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளிமீது
அரியதவ முனிவருக்கு இந்துவில் தண்ணென்ற
அமைந்த அன்பருக்கு முற்றா
மூலமாம் வினை அறுத்தவர்கள் வெம் பகையினை
முடித்து இந்திரர்க்கும் எட்டா
முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளித்து எந்த
மூதண்டமும் புகழும் வேல்
ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும்
இன்பணைகள் உமிழு முத்தும்
இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருன்
தாலமா மரமுதற் பொருள் படைத் திடும் எயினர்
தருவநிதை மகிழ்நன் ஐயன்
தனிநடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவணக் குமரன் வேலே

வேல் விருத்தம் – 6

பந்தாடலிற் கழங் காடலிற் சுடர் ஊசல்
பாடலினொடு ஆடலின் எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணிந் இந்திரர்கரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும்
சசிமங்கை அனையர்தாமுந்
தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகினித் தரங்க சடிலருக்கு அரிய
மந்த்ர உபதேச நல்கும்
வரதேசிகன் கிஞ்சுகச் சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க் கடம் பும்செச்சை மாலையும்
குவளையும் செங் காந்தளும்
கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே

வேல் விருத்தம்

வேல் விருத்தம் – 7

அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
அநந்தமாயினு மேவினால்
அடைய உருவிப் புறம் போவதல்லது தங்கல்
அறியாது சூரன் உடலைக்
கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
கடியகொலை புரியும் அது
செங்கனகா சலத்தைக் கடைந்து முனை யிட்டு
கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டன் தனுத் திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவான் தகன் மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பற்றலை
தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
மங்கையும் பதம் வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகைத் திருக்கை வேலே

வேல் விருத்தம் – 8

மாமுதல் தடிந்து தண் மல்குகிரியூடு போய்
வலிய தானவர் மார்பிடம்
வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
மகவான் தனை சிறைவிடுத்து
ஓமவிருடித் தலைவர் ஆசிபெற்று உயர்வானில்
உம்பர் சொற்றுதி பெற்று நா
உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில்
ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்
சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா
சூடி காலாந்த காலர்
துங்க ரக்ஷக கத்ரோண கட்க குலிசஞ்சூல
துரக கேசர மாம்பரச்
சேம வடவாம்புயப் பரண சங்காபரண
திகம்பர த்ரியம்பக மகா
தேவ நந்தன கஜானன சகோதர குகன்
செம்பொற்றிருக்கை வேல்

வேல் விருத்தம்

வேல் விருத்தம் – 9

தேடுதற்கு அரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை அமுதம் வாய்கொள்
செயமளித் அருள் எனக் என உவப்பொடு வந்து
சேவடி பிடித்த தெனவும்
நீடுமைக் கடல் சுட்டதிற்கு அடைந்து எழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்
நிகழ்கின்ற துங்க நெடுவேல்
ஆடுமைக் கணபணக் கதிர்முடி புடை எயிற்று
அடலெரிக்- கொடிய உக்ர
அழல் விழிப் படுகொலைக் கடைய கட்செவியினுக்கு
அரசினைத் தனியெடுத்தே
சாடு மைப்புயல் எனப் பசுநிறச் சிகரியில்
தாய் திமித் துட நடிக்கும்
சமரமயில் வாகனன் அமரர் தொழு நாயகன்
சண்முகன் தன்கை வேலே

வேல் விருத்தம் – 10

வலாரி அலலாகுலம் இலாத அகலவே கரிய
மாலறியு நாலு மறைநூல்
வலான் அலை விலாநசி விலான் மலைவிலான் இவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோல மகராலய சலங்களும்
உலோகனிலை நீர்நிலை இலா
ஒலாவொலி நிசாசரர் உலோகம் அதெலாம் அழல்
உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலா வினொத வாசிலிமுகா விலொச
நா சின சிலாத அணிவிலா
சிலாமலர் எலா மதிய மோதி மதி சேலொழிய
சேவக சராப முகிலாம்
விலாச கலியாண கலை சேர பசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்
விலாழி யினிலாழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைஞன் கை வேலே

கந்தர் அனுபூதி வரிகள் – கந்தர் அநுபூதி- Kandar Anuboothi Tamil Lyrics

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

திரு அருணகிரிநாதரின் – வேல் விருத்தம் -vel virutham Read More »

Vel Maaral Maha Manthiram

வேல் மாறல் – Vel Maaral Maha Manthiram -Vel Maaral Lyrics in Tamil

வேல் மாறல் – Vel Maaral Maha Manthiram -Vel Maaral Lyrics in Tamil

Vel Maaral Maha Manthiram

Vel Maaral Lyrics in Tamil -வேல் மாறல்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளிய ‘வேல் மாறல்’

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( … இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … )

( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … )

Vel Maaral Maha Manthiram -வேல் மாறல்

Vel Maaral Maha Manthiram

1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

Vel Maaral Maha Manthiram

6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

Vel Maaral Maha Manthiram

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

Vel Maaral Maha Manthiram

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

Vel Maaral Maha Manthiram

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

Vel Maaral Maha Manthiram

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

Vel Maaral Maha Manthiram

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

Vel Maaral Maha Manthiram

61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

( … முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் … )

தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.

… … … வேலும் மயிலும் துணை … … …

கந்தர் அனுபூதி வரிகள் – கந்தர் அநுபூதி- Kandar Anuboothi Tamil Lyrics

கந்தர் அலங்காரம் பாடல் வரிகள் – Kandhar Alangaram

வேல் மாறல் – Vel Maaral Maha Manthiram -Vel Maaral Lyrics in Tamil Read More »

கந்தர் அனுபூதி வரிகள் – கந்தர் அநுபூதி- Kandar Anuboothi Tamil Lyrics

கந்தர் அனுபூதி வரிகள் – கந்தர் அநுபூதி- Kandar Anuboothi Tamil Lyrics

Kandar Anuboothi Tamil Lyrics

கந்தர் அனுபூதி நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது. 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. “அனு” என்பது அனுபவம். “பூதி” என்பது புத்தி. அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி. எல்லாப்பாடல்களுமே “நிலைமண்டில ஆசிரியப்பா” வகையில் அமைந்துள்ளன. பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன.

அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். திருமூலர் இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அதுபோல அருணகிரி நாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.

கந்தர் அனுபூதி lyrics

Kandar Anuboothi Tamil Lyrics

காப்பு

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

கந்தர் அனுபூதி பாடல் வரிகள்

Kandar Anuboothi Tamil Lyrics

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே. (1)

உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே. (3)

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (4)

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே. (5)

திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே. (6)

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே. (8)

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே. (9)

கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே. (10)

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே. (11)

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)

முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. (13)

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. (15)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே. (16)

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே. (17)

உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே. (18)

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. (19)

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே. (20)

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே. (21)

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)

கந்தர் அனுபூதி 15 வது பாடல்

Kandar Anuboothi Tamil Lyrics

அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே (23)

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே. (24)

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே. (25)

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே. (26)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே. (27)

ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே. (28)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே. (29)

செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. (30)

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31)

கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே. (32)

கந்தர் அனுபூதி pdf free download

Kandar Anuboothi Tamil Lyrics

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே. (33)

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே. (34)

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே. (35)

நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே.(36)

கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே. (37)

ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே. (38)

மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே. (39)

வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே. (40)

சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே. (41)

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42)

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே. (43)

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே. (44)

கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக தயாபரனே. (45)

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே. (46)

ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே. (47)

அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே. (48)

தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே. (49)

மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே. (50)

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51)

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

செல்வம் தரும் முருகன் மந்திரம் -Murugan Manthiram Tamil

கந்தர் அனுபூதி வரிகள் – கந்தர் அநுபூதி- Kandar Anuboothi Tamil Lyrics Read More »

கந்தர் அலங்காரம் பாடல் வரிகள் – Kandhar Alangaram

கந்தர் அலங்காரம் பாடல் வரிகள் – Kandhar Alangaram

Kandhar Alangaram

கந்தர் அலங்காரம் pdf

Kandhar Alangaram

1.
பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. … 1

2.
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. … 2

3.
தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்
பேரணி கெட்டது தேவந்த்ர லோகம் பிழைத்ததுவே. … 3

4.
ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்
சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட்டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே. … 4

5.
திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே. … 5

6.
பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே. … 6

7.
சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. … 7

8.
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே. … 8

9.
தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே. … 9

10.
சொல்லுகைக் கில்லையென் றெல்லாமிழந்து சும்மா விருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்ட வாஇகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. … 10

kandar alangaram

Kandhar Alangaram

11.
குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே. … 11

12.
படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்
துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடலம்
இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே. … 12

13.
ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கனகப்
பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே. … 13

14.
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே. … 14

15.
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே. … 15

16.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. … 16

17.
வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே. … 17

18.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. … 18

19.
சொன்ன கிரெளஞ்ச கிரியூ டுருவத் தொளைத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்குணம் பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே. … 19

20.
கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே. … 20

கந்தர் அலங்காரம்

Kandhar Alangaram

21.
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே. … 21

22.
மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. … 22

23.
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே. … 23

24.
கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்க குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே. … 24

25.
தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலுனக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே. … 25

26.
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே. … 26

27.
ஓலையுந் தூதருங் கண்டுதிண் டாட லொழித்தெனக்குக்
காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள்மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே. … 27

28.
வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான்மன வாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ் வாறு புகல்வதுவே. … 28

29.
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான்கடந் தேன்சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ் வாயிற் பணையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும்வெங் காம சமுத்திரமே. … 29 .

30.
பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. … 30 .

kandar alangaram lyrics in tamil

Kandhar Alangaram

31.
பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே. … 31

32.
கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னேதுறந் தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்நாள்வந் திரட்சிப்பையே. … 32 .

33.
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே. … 33

34.
பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே. … 34 .

35.
பத்தித் துறையிழிந் தாநந்த வாரி படிவதினால்
புத்தித் தரங்கந் தெளிவதென் றோபொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலே
குத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே. … 35

36.
சுழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்ப மின்பங்
கழித்தோடு கின்றதெக் காலநெஞ்சே கரிக் கோட்டு முத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென் கிலையெங்ங னேமுத்தி கிட்டுவதே. … 36

37.
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே. … 37 .

38.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. … 38

39.
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னி லொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே. … 39

40.
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. … 40

கந்தர் அலங்காரம் பாடல் விளக்கம்

Kandhar Alangaram

41.
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன்மலர்த் தாள்தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ் வேலவனே. … 41 .

42.
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்குங்
குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டு மல்குற் குருகுங் குமரன் பதாம்புயத்தை
வணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங்ஙன் வாய்த்ததுவே. … 42

43.
கவியாற் கடலடைத் தோன்மரு கோனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றியன்பாற்
குவியாக் கரங்கள்வந் தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே. … 43

44.
தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே. … 44

45.
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
றிருபூத வீட்டி லிராமலென் றான்னிரு கோட்டொருகைப்
பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக்
குரு பூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே. … 45

46.
நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்த னேசெந்தி லாய்சித்ர மாதரல்குற்
றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மநோதுக்க மானது மாய்வதற்கே. … 46 .

47.
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே. … 47

48.
புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றி லேன்முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. … 48

49.
சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ்
சாரிற் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே. … 49

50.
படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே. … 50

51.
மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியன்பின்
நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்
தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
இலையா யினும்வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே. … 51

52.
சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ பணி பாசசங் க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமரா
குகராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே. … 52

53.
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. … 53

54.
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்க்கொன்
றீகைக் கெனைவிதித் தாயிலை யேயிலங் காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே. … 54

55.
ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பு மறார்தினைப் போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்பு செய்யா ரென்செய் வார்யம தூதருக்கே. … 55

56.
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய்நரகக்
குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவனுார்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே. … 56

57.
பொருபிடி யுங்களி றும்விளை யாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம்
இருபிடி சோறுகொண் டிட்டுண் டிருவிளை யோமிறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே. … 57

58.
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார்க் கினியவன் தேவந்த்ர லோக சிகாமணியே. … 58

59.
பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ
எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த
வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே. … 59 .

60.
சிந்திக் கிலேனின்று சேவிக் கிலேன்றண்டைச் சிற்றடியை
வந்திக் கிலேனொன்றும் வாழ்த்து கிலேன்மயில் வாகனனைச்
சந்திக் கிலேன்பொய்யை நிந்திக்கி லேலுண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே. … 60

61.
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுணர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே. … 61

62.
ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறுமையன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே. … 62

63.
பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப்
போதித்த நாதனைப் போர்வேல னைச்சென்று போற்றியுய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச்
சாதித்த புத்திவந் தெங்கே யெனக்கிங்ஙன் சந்தித்ததே. … 63

64.
பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன்
கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே. … 64

65.
வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராசலங்கள்
எட்டுங் குலகிரி யெட்டும்விட் டோடவெட் டாதவெளி
மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே. … 65

66.
நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கைநில் லாதுசெல்வம்
பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தே
ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்
வேற் குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றே. … 66

67.
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன்மத கும்பகம்பத்
தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி
இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே. … 67

68.
சாடுஞ் சமரத் தனிவேன் முருகன் சரணத்திலே
ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப்
பாடுங் கவுரி பவுரிகொண்டாடப் பசுபதிநின்
றாடும் பொழுது பரமா யிருக்குமதீதத்திலே. … 68

69.
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச் சுவாமி யெனைத்தேற் றியபின்னர்க் காலன் வெம்பி
வந்திப் பொழுதென்னை யென்செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்
சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே. … 69

70.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே. … 70

71.
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொருக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன் சொன்ன
கருத்தை மனத்தி லிருத்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. … 71

72.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. … 72

73.
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே. … 73

74.
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற்
குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டுங்கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டு மேன்றால்
இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யெளிதல்லவே. … 74

75.
படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே. … 75

76.
கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாள னேதென் தணிகைக் குமரநின் றண்டையந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்
பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே. … 76

77.
சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ் சேரஎண்ணி
மால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே
கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே. … 77 .

78.
கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண் டாடுவிர்காள்
போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந்
தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிைகையும்
ஆர்கொண்டு போவரை யோகெடு வீர்நும் மறிவின்மையே. … 78 .

79.
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங்
கந்தா இளங்கும ராஅம ராவதி காவலனே. … 79 .

80.
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றவன்வந் தாலென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. … 80

81.
தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற்கட்டுஞ்
சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே. … 81

82.
தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தரு ளாய் புண்ட ரீகனண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்ட வெட்டிப்
பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே. … 82

83.
தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்
வாங்கிய னுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே. … 83

84.
மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப்
பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே. … 84

85.
காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவெளிதே விழிநாசிவைத்து
மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே. … 85

86.
வேலா யுதன்சங்கு சக்ராயு தன்விரிஞ் சன்னறியாச்
சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்
காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்
பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே. … 86

87.
குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே. … 87

88.
வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக்
குணம் கெட்ட துட்டனை ஈடேற்றுவாய் கொடியும் கழுகும்
பிணங்கத் துணங்கை அலகை கொண்டாடப் பிசிதர்தம் வாய்
நிணம் கக்க விக்கிரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே. … 88

89.
பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை
தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப்
பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே. … 89

90.
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. … 90

91.
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப்
பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்
தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. … 91

92.
தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்டவெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே. … 92

93.
மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே. … 93

94.
தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்
வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு வள்ளைதள்ளித்
துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லைநல்ல
வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே. … 94 .

95.
யான்றானெ னுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே. … 95

96.
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில் நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. … 96

97.
சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப்
பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே. … 97

98.
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா
நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. … 98

99.
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. … 99

100.
இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா! கிரெளஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே. … 100

நூற்பயன்

101.
சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவிதான்கற் றறிந்தவரே. … 101

102.
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே. … 102

103.
இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்
குராப்புனை தண்டையந் தாளரு ளாய்கரி கூப்பிட்டநாள்
கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும்
பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே. … 103

104.
செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே. … 104

105.
ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே. … 105

106.
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந்
தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவ னேமயிலேறிய மாணிக்கமே. … 106

107.
சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன் கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே. … 107

இதையும் படிக்கலாமே

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

108 Murugar potri in tamil – 108 முருகர் போற்றி -murugan 108 potri in tamil- murugan 108 potri – ஓம் முருகா போற்றி

கந்தர் அலங்காரம் பாடல் வரிகள் – Kandhar Alangaram Read More »

சஷ்டி விரதம் உணவு முறை – sashti viratham

சஷ்டி விரதம் உணவு முறை – sashti viratham

sashti viratham

இன்று தேய்பிறை சஷ்டி : sasti date

sashti viratham

முருகனுக்கு உகந்த மூன்று விரதங்கள் என்னென்ன?

sashti viratham

இந்து கடவுளில் அதிகமானவர்களால் விரும்பப்படும் தெய்வம் முருகப்பெருமான் ஆவார். முருகப்பெருமானுக்கு என மூன்று விரதங்கள் முக்கியமாக கடைபிடிக்கப்படுகின்றது. அவை வார விரதம், நட்சத்திர விரதம் மற்றும் திதி விரதம் என்பதாகும். செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டிப்பது வார விரதம், கிருத்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது நட்சத்திர விரதம், சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது திதி விரதம் எனப்படும். இதில் தேய்பிறை சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் மகத்தான பல நன்மைகள் நடக்கும்.

சஷ்டி விரதம் :

sashti viratham

சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஒரு நாளை குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது.அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் சஷ்டி கிருஷ்ணபட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.

தேய்பிறை சஷ்டி ஏன் முருகனுக்கு உகந்தது?

sashti viratham

திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. தேய்பிறை சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

sashti viratham

sashti viratham

இந்த தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் உங்களால்முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபிட்சம் பெருகும்.

வீட்டில் வழிபடும் முறை :

sashti viratham

முருகா என்றால் அனைத்து துன்பங்களும் பறந்துவிடும் என்பார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நினைத்து சஷ்டியில் விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும் என்பது நம்பிக்கை. தேய்பிறை சஷ்டி அன்று காலை குளித்து விட்டு சுவாமி படத்திற்கு மாலை அல்லது பூக்கள் அணிவித்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி, பால், பழம் நெய்வேத்தியம் செய்து கந்தசஷ்டி கவசம் அல்லது கந்தகுரு கவசம்பாராயணம் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை கூறலாம்.
அவல் நெய்வேத்தியம் படைக்க மிகவும் நல்லது. இது எதுவும் செய்ய முடியாவிட்டால் நாவல் பழத்தை வைத்து வழிபடலாம். முருகனுக்கு நாவல் பழமானது மிகவும் இஷ்டமான ஒரு பழம் ஆகும். நாள் முழுவதும் மாமிசம் உண்ணக்கூடாது. எந்தவொரு விவாதமும் செய்யக்கூடாது. அன்றைய தினம் முழுவதும் மௌனவிரதம் இருப்பதால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.

சஷ்டி விரதம் உணவு முறை

sashti viratham

குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

முருகன் மூல மந்திரம் – Murugan Moola Manthiram -Murugan Moola Mantra

சஷ்டி விரதம் உணவு முறை – sashti viratham Read More »

முருகன் ரகசிய மந்திரம் – சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

முருகன் ரகசிய மந்திரம் – சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

முருகன் ரகசிய மந்திரம்

சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

ஓம் முருகா, குரு முருகா,
அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே
ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும்
நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,

மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்,

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்,

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

இதையும் படிக்கலாமே

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

108 Murugar potri in tamil – 108 முருகர் போற்றி -murugan 108 potri in tamil- murugan 108 potri – ஓம் முருகா போற்றி

முருகன் ரகசிய மந்திரம் – சக்தி வாய்ந்த முருகன் மந்திரம் Read More »

முருகன் மூல மந்திரம் – Murugan Moola Manthiram -Murugan Moola Mantra

முருகன் மூல மந்திரம் – Murugan Moola Manthiram -Murugan Moola Mantra

Murugan Moola Manthiram

Murugan Powerful Mantra in Tamil

Murugan Moola Manthiram

முருகன் மூல மந்திரம்

Murugan Moola Manthiram

ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ.

ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளால் எழுதப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம் பெற்றுள்ளது. மனதை ஒருமுகப்படுத்தி இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்பவர்களுக்கு முக்தி கிடைப்பது நிச்சயம் என கூறப்படுகிறது. எம பயமும் நீங்குகிறது. அதோடு ஒளிச்சுடராய் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு இந்த மந்திரம் உதவுகிறது.  எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றித் தருகிறது இந்த மூல மந்திரம்.

இந்த மூல மந்திரத்தை கோடி முறை ஜெபித்தால் ஈடு இணையற்ற சக்தியைப் பெறலாம் என கூறப்படுகிறது. கடும் தவத்தின் வாயிலாக சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்த வேத சூட்சும ரகசியங்களை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். அந்த ரகசியங்களை முருகப்பெருமானே ஜோதி வடிவில் தோன்றி நமக்கு கற்பிப்பார் என்பது ஐதீகம். எத்தனை முறை இந்த மந்திரத்தை ஜெபிக்க முடியுமோ ஜெபித்து  முருகப்பெருமான மனதார வணங்கினால் அவரது அருளாசிகளைப் பெறலாம்.

இதையும் படிக்கலாமே

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

108 Murugar potri in tamil – 108 முருகர் போற்றி -murugan 108 potri in tamil- murugan 108 potri – ஓம் முருகா போற்றி

முருகன் மூல மந்திரம் – Murugan Moola Manthiram -Murugan Moola Mantra Read More »

செல்வம் தரும் முருகன் மந்திரம் -Murugan Manthiram Tamil

செல்வம் தரும் முருகன் மந்திரம் -Murugan Manthiram Tamil

Murugan Manthiram Tamil

செல்வம் தரும் முருகன் மந்திரம்

Murugan Manthiram Tamil

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி (1)

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்(2)

மயூராதிரூபம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோகபா லம்(3)

யதா ஸந்நிதானம் கதாமானவா மே
பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதெள ஸேவதாம் மே
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்(5)

கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா
இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து(6)

மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸூகந்தாக்யசைலே
குஹாயாம் வஸந்தம் வ்யபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் (7)

லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸூமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
ஸமுத்யஸ் ஸஹஸ்ரரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம்(8)

ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே(9)

ஸூவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் (10)

புளிந்தேச கன்யாக நாபோக துங்க
ஸ்தனாலிங்க நாஸக்த காச்சீரராகம்
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் (11)

விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹூதண்டான் (12)

ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா
ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் (13)

ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்
கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
ஸூதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ
தவாலோகேயே ஷண்முகாம் போரு ஹாணி (14)

விசாலேஷூ கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷூ த்வாதசஸ் வீக்ஷணேஷூ
மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாமஹானி(15)

ஸூதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்
ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய
கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய (16)

ஸ்புத்ரத் ன கேயூரஹாராபிராம
ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக
கடெள பீதவாஸா கரே சாருசக்தி
புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ (17)

இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம்(18)

குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா
பதே சக்தி பாணே மயூரா திரூட
புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் (19)

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்மே
ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் (20)

க்ருதாந்தஸ்ய தூதேஷூ சண்டேஷூகோபா
த்தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸூ
மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்
புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் (21)

ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்
நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா (22)

ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி (23)

அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸூதத்வம்(24)

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே (25)

த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா (26)

முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)

களத்ரம் ஸூதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா
யஜந்தோ நமந்ந ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸ்ர்வே குமார (28)

ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸூதூரே
விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல(29)

ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம்
ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத
அஹம் சாதிபாலோ பவான் லோக தாத
க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச (30)

நம கேகினே சக்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம குக்குடாய
நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து (31)

ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்தே
ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ (32)

புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய
ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ (33)

Murugan Mantra in Tamil

Murugan Manthiram Tamil

ஷடானனம் சந்தன லிப்தகாத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஷ்ய ஸூனும் சுரலோக நாதம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (1)

ஜாஜ்வல்ய மானம் ஸூரப்ருந்த வந்த்யம்
குமார தாரா தடா மந்த்ரஸ்தம்
கந்தர்ப்ப ரூபம் கமஜீய காத்ரம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (2)

த்விஷட்புஜம் த்வாதஸ திவ்ய நேத்ரம்
த்ரயீதனும் சூலமஹம் ததானம்
சேஷாவதாரம் கமஜீய ரூபம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே(3)

ஸூராரி கோரஹவ ஷோபமானம்
சுரோத்தமம் சக்திதரம் குமாரம்
சுதார ஸக்த்யாயுத ஷோபிஹஸ்தம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே(4)

இஷ்டார்த்த ஸித்தி ப்ரதமீஷ புத்ரம்
இஷ்டான்னதம் பூஸூர காமதேனும்
கங்கோத்பவம் சர்வ ஜனானு கூலம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (5)

ய:ஸ்லோக மிதம் படதே ச பக்த்யா
ப்ரஹ்மண்ய தேவ விநிவேம்ச நிதமானஸஸ் ஸஸ்ஸன்
ப்ராப்னோதி போகமகிலம் புவியத் யாதிஷ்டம்
அந்தே ஜகத்ச திமுதா குஹ சாம்ய மேவ.

Murugan Manthiram

Murugan Manthiram Tamil

ஞான சக்திதர ஸ்கந்தா
வள்ளிகல்யாண சுந்தரா
தேவசேனா மண காந்த
கார்த்திகேயா நமோ ஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ

Murugan Mantras in Tamil

Murugan Manthiram Tamil

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ

எதிர்மறை, எதிர்ப்பு எதிரி, கண் திருஷ்டியை அழிக்கும் முருகன் ஸ்துதி 

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்

வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை. இந்தப் பாடலை ஜெபம் செய்வதன் மூலம் நம்மை தீமைகள் அணுகாது காத்துக் கொள்ளலாம்.

1.   ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்

2.   ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்

3.   ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்

4.   ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
     ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்

5.   ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
    ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்

6.   ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்

7.   ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்

8.   ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்

9.   ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்

10.   ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
     ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்

11.   ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
     ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்

12.   ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
      ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்

13.   ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
     ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்

14.   ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
      ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்

15.   ஓம் இகபர பதயே நமோ நம ஹ
     ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்

16.   ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
     ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்

17.   ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
     ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்

18.   ஓம் நயநய பதயே நமோ நம ஹ
     ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்

19.   ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
     ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்

20.  ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
    ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்

21.  ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
    ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்

22.  ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
    ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்

23.  ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
    ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்

24.  ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
    ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்

25.  ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
    ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்

26.  ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்

27.  ஓம் அபேத பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்

28.  ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
    ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்

29.  ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
    ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்

30.  ஓம் மயூர பதயே நமோ நம ஹ
    ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்

31.  ஓம் பூத பதயே நமோ நம ஹ
     ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்

32.  ஓம் வேத பதயே நமோ நம ஹ
    ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்

33.  ஓம் புராண பதயே நமோ நம ஹ
    ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்

34.  ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
    ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்

35.  ஓம் பக்த பதயே நமோ நம ஹ
         ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்

36.  ஓம் முக்த பதயே நமோ நம ஹ
    ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்

37.  ஓம் அகார பதயே நமோ நம ஹ
    ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

38.  ஓம் உகார பதயே நமோ நம ஹ
    ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

39.  ஓம் மகார பதயே நமோ நம ஹ
     ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

40.  ஓம் விகாச பதயே நமோ நம ஹ
   ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்

41.  ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
     ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்

42.  ஓம் பூதி பதயே நமோ நம ஹ
    ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்

43.  ஓம் அமார பதயே நமோ நம ஹ
    ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்

44.  ஓம் குமார பதயே நமோ நம ஹ.
    ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று.

Murugan Mantra Tamil

Murugan Manthiram Tamil

ஷண்முக சடாட்சரம் – ஷட் என்றால் ஆறு  – ஆறுமுகப் பெருமானின் சரஹனபவ என்னும் ஆறெழுத்து  மந்திரம் ஜெபத்தால் வாழ்வில் வளமும் நலமும் பெருகும்.
1. சரஹணபவ என தொடர்ந்து ஜபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும
2. ரஹணபவச என தொடர்ந்து ஜபித்து வர செல்வம் செல்வாக்கு பெறகும் 
3. ஹணபவசர என தொடர்ந்து ஜெபித்து வர  பகை, பிணி நோய்கள் தீரும்.
4. ணபவசரஹ என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள்  நீங்கும்.
5. பவசரஹண என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் நம்மை அவிரும்பும்
6. வசரஹணப என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும் 

தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

முருகன் மந்திரம்

Murugan Manthiram Tamil

ஓம் முருகா, குரு முருகா, 
அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே 
ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் 
நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

இதையும் படிக்கலாமே

108 Murugar potri in tamil – 108 முருகர் போற்றி -murugan 108 potri in tamil- murugan 108 potri – ஓம் முருகா போற்றி

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

செல்வம் தரும் முருகன் மந்திரம் -Murugan Manthiram Tamil Read More »

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் lyrics -Thirupugal Lyrics in Tamil

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் lyrics -Thirupugal Lyrics in Tamil

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் lyrics

திருப்புகழ் முதல் பாடல்

பாடல்-1

கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா

அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி

அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் lyrics

பாடல்-2

பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப

பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம்

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி

வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே

Thirupugal Lyrics in Tamil

பாடல்-3

உம்பர் தரு தேநு மணி கசிவாகி ஒண் கடலில் தேனமுதத்து உணர்வூறி

இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே

தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே

அன்பர்தமக்கான நிலை பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுக பெருமாளே

பாடல்-4

நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட

நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் நிகழ் பால் தேன்

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி

நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்

மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர

வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு

வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு

வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல்

திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை

செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை

திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே

எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட

டிமுட டிமுடிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட

எதிரு நிசிசரரை பெலியிட்டு அருள் பெருமாளே

பாடல்-5

விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான்

விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே

கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய கயவன்

அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே

இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே

இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற

அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட

அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே

பாடல்-6

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண

பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே

தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட

திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத

கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே

பாடல்-7

அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை

அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும் இரு தோளுற்று

அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும்

இட அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு

உருக்கும் அங்கியில் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம்

உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து

உரு கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியில் முழுகி மெய் உணர்வு அற

உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக

இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று

இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை

இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே

செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர்

திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர்

திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ

திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

பாடல்-8

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை

உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா

உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்

உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்

கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள்

கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே

வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண

விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை

விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே

தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு

சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே

தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்

திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

பாடல்-9

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று

கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து

கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை

அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது

அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி

இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்

எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்

எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ

அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற

அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து

அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே

பாடல்-10

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு

கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே

கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர்

கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடு போகி

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர்

பொர நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே

நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட

நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே

நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என

நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும்

நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு

நிண குழம்பொடு குருதிகள் சொரிதர அடு தீரா

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள

சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு

திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

சிறந்த திருப்புகழ் பாடல் வரிகள்

பாடல்-11

கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே

கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு

கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே

பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர்

படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே

பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி

பவம் இன்று கழிந்திட வந்து அருள்புரிவாயே

அனகன் பெயர் நின்று உருளும் திரிபுரமும் திரி வென்றிட இன்புடன்

அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே

அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என

அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர்

மனமும் தழல் சென்றிட அன்று அவர் உடலும் குடலும் கிழி கொண்டிட

மயில் வென்தனில் வந்து அருளும் கன பெரியோனே

மதியும் கதிரும் தடவும்படி உயர்கின்ற வனங்கள் பொருந்திய

வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே

பாடல்-12

காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து இருள்

கால் தரவும் இந்து விசும்பில் இலங்கும் பொழுது ஒரு கோடி

காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி

காமன் நெடும் சிலை கொண்டு அடர்ந்தும் பொரு மயலாலே

வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன

மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம் அது உழலாதே

வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு

வாழ நிதம் புனையும் பதம் தந்து உனது அருள்தாராய்

போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ

போத வளம் சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே

பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள்

பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா

தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல

சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றிடு திறலோனே

சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி

தேவர் பணிந்து எழு தென்பரங்குன்று உறை பெருமாளே

பாடல்-13

சந்ததம் பந்த தொடராலே சஞ்சலம் துஞ்சி திரியாதே

கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ

தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கில் சிவை பாலா

செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரங்குன்றில் பெருமாளே

பாடல்-14

சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு

தழல் கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி

சயிலம் கொளு மன்றல் பொருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய

தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே

இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட

இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி

இவண் நெஞ்சு பதன்பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன்

இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ

திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண் திசை

திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின்

திரிகின்றவன் மஞ்சு நிறம் புனைபவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல்

செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் மருகோனே

மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட

வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே

மதியும் கதிரும் புயலும் தினம் மறுகும்படி அண்டம் இலங்கிட

வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே

பாடல்-15

தட கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை

தவித்து சென்று இரந்து உளத்தில் புண்படும் தளர்ச்சி பம்பரம்தனை ஊசல்

கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை

கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே

படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக

பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா

குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே

குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே

பாடல்-16

பதித்த செம் சந்த பொன் குட நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும்

பருப்பதம் தந்த செப்பு அவை ஒக்கும் தன பாரம்

பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும்

பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள்

துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு உவக்க நெஞ்சு அஞ்ச சிற்றிடைசுற்றும்

துகில் களைந்து இன்பம் துர்க்கம் அளிக்கும் கொடியார் பால்

துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம்

துறக்க நின் தண்டை பத்மம் எனக்கு என்று அருள்வாயே

குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன்

குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா

குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை

குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ

திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும்

திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை வேடர்

தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண்

திருப்பரங்குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே

பாடல்-17

பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்ச மாதர்

புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம்

அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும்

அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ

அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே

மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா

பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும்

தினை புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை திருப்பரங்குன்று உறை தம்பிரானே

பாடல்-18

மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர்

மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில்

ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை

உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய்

பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே

பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா

சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர் செண்பகம் பைம்பொன் மலர் செறி சோலை

திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே

பாடல்-19

வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர்

மயக்கி ஐங்கணை மதனனை ஒரு அருமையினாலே

வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை

வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் தொடுபோதே

விடத்தை வென்றிடு படை விழி கொடும் உளம் மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல்

விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானே

விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை

விரை பதம்தனில் அருள்பெற நினைகுவது உளதோ தான்

குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு

குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா

குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர்

குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே

திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ

திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே

செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர்

திருப்பரங்கிரி வள நகர் மருவிய பெருமாளே

பாடல்-20

வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும்

வடுப்படும் தொண்டையாலும் விரைத்திடும் கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி

எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற

இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே

சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக

துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே

செருக்கு எழுந்து உம்பர் சேனை துளக்க வென்று அண்டம் ஊடு தெழித்திடும் சங்கபாணி மருகோனே

தினை புனம் சென்று உலாவு குறத்தியின் இன்பம் பராவு திருப்பரங்குன்றம் மேவு பெருமாளே

திருப்புகழ் பாடல் வரிகள்

பாடல்-21

அம் கை மென் குழல் ஆய்வார் போலே சந்தி நின்று அயலோடே போவார்

அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ

அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே

அன்றும் இன்றும் ஓர் போதோ போகா துயில் வாரா

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல்

இன்று தந்து உறவோ தான் ஈது ஏன் இது போதாது

இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா

இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே

மங்குல் இன்புறு வானாய் வானூடு அன்று அரும்பிய காலாய் நீள் கால்

மண்டுறும் புகை நீறா வீறா எரி தீயாய்

வந்து இரைந்து எழு நீராய் நீர் சூழ் அம்பரம் புனை பாராய் பார் ஏழ்

மண்டலம் புகழ் நீயாய் நானாய் மலரோனாய்

உங்கள் சங்கரர்தாமாய் நாம் ஆர் அண்ட பந்திகள்தாமாய் வானாய்

ஒன்றினும் கடை தோயா மாயோன் மருகோனே

ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர்

உண்ட நெஞ்சு அறி தேனே வானோர் பெருமாளே

பாடல்-22

அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு

அன்பு உருகும் சங்கதம் தவிர முக்குணம் மாள

அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து

அம்புய பதங்களின் பெருமையை கவி பாடி

செந்திலை உணர்ந்துணர்ந்து உணர்வுற கந்தனை அறிந்தறிந்து அறிவினில்

சென்று செருகும் தடம் தெளிதர தணியாத

சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்தழிந்து அழிய மெய்

சிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ

கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற

குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள

குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என

குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச

தந்தன தனந்தனம் தனஎன செம் சிறு சதங்கை கொஞ்சிட மணி

தண்டைகள் கலின்கலின் கலின் என திருவான

சங்கரி மனம் குழைந்து உருக முத்தம் தர வரும் செழும் தளர் நடை

சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே

பாடல்-23

அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி

தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை

அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல்

கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே

எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு

இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது

இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு

என அகலும் நெறி கருதி வெஞ்சத்து அஞ்சி பகிராதோ

குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச

குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட

குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க

தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத்தொங்க தொகுதீதோ

திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப

திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா

திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க

திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே

பாடல்-24

அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே

அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே

எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள்

என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்ப புலி உற்றிடலாமோ

கொம்பு கரி பட்டு அஞ்ச பதும கொங்கை குறவிக்கு இனியோனே

கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே

செம்பொன் சிகர பைம்பொன் கிரியை சிந்த கறுவி பொரும் வேலா

செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே

பாடல்-25

அருண மணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன

அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி

அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என

அறவும் உறவு ஆடி நீடிய அங்கை கொங்கைக்கு இதமாகி

இருள் நிறை அம் ஓதி மாலிகை சருவி உறவான வேளையில்

இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள்

இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன்

இணை அடிகள் பாடி வாழா என் நெஞ்சில் செம் சொல் தருவாயே

தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய

சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர்

தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவிதனை

முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள்கூரும்

செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை

தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன்

திரு மருக சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய

ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே

பாடல்-26

அவனி பெறும் தோட்டு அம் பொன் குழை அடர் அம்பால் புண்பட்டு

அரிவையர்தம்பால் கொங்கைக்கு இடையே சென்று

அணைதரு பண்டு ஆட்டம் கற்று உருகிய கொண்டாட்டம் பெற்று

அழி தரு திண்டாட்டம் சற்று ஒழியாதே

பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை

பத உகளம் போற்றும் கொற்றமும் நாளும்

பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும் போய் சங்கை

படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ

தவ நெறி குன்றா பண்பில் துறவினரும் தோற்று அஞ்ச

தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி

தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை

தழல் எழ வென்றார்க்கு அன்று அற்புதமாக

சிவ வடிவும் காட்டும் சற்குருபர தென்பால் சங்க

திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும்

தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி

திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே

பாடல்-27

அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட

அவச மோகம் விளைந்து தளைந்திட அணை மீதே

அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து

அதர பானம் அருந்தி மருங்கு இற முலை மேல் வீழ்ந்து

உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின் முயங்குதல்

ஒழியுமாறு தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து

உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி

உபய சீதள பங்கய மென் கழல் தருவாயே

இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை

இரதி வேள் பணி தந்தையும் அந்தண மறையோனும்

இனிது உறாது எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவசங்கர சங்கர

என மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள் பாலா

வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன்

மகர வாரி கடைந்த நெடும் புயல் மருகோனே

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல

மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே

பாடல்-28

அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே

அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே

செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே

சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே

நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி

நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே

மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே

மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே

பாடல்-29

அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட

அனத்தின் தூவி குலாவிய சீறடி மட மானார்

அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி வார் முலை மேல் முகம்

அழுத்தும் பாவியை ஆவி இடேறிட நெறி பாரா

வினை சண்டாளனை வீணனை நீள் நிதிதனை கண்டு ஆணவமான நிர்மூடனை

விடக்கு அன்பாய் நுகர் பாழனை ஓர் மொழி பகராதே

விகற்பம் கூறிடு மோக விகாரனை அறத்தின்பால் ஒழுகாத மூதேவியை

விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்பெறுவேனோ

முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல

முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே

முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள

முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே

தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய

திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா

சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய

திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே

பாடல்-30

அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும்

அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி

மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர

மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ

தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா

ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா

இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே

எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே

திருப்புகழ் பாடல்கள் with lyrics

பாடல்-31

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி

இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே

உயர் கருணைபுரியும் இன்ப கடல் மூழ்கி

உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே

மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல்

வனச குறமகளை வந்தித்து அணைவோனே

கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே

கரி முகவன் இளைய கந்த பெருமாளே

பாடல்-32

இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே

பாடல்-33

இருள் விரி குழலை விரித்து தூற்றவும் இறுகிய துகிலை நெகிழ்த்து காட்டவும்

இரு கடை விழியும் முறுக்கி பார்க்கவும் மைந்தரோடே

இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும்

இடையிடை சிறிது நகைத்து காட்டவும் எங்கள் வீடே

வருக என ஒரு சொல் உரைத்து பூட்டவும் விரி மலர் அமளி அணைத்து சேர்க்கவும்

வரு பொருள் அளவில் உருக்கி தேற்றவும் நிந்தையாலே

வனை மனை புகுதில் அடித்து போக்கவும் ஒரு தலை மருவு புணர்ச்சி தூர்த்தர்கள்

வசை விட நினது பதத்தை போற்றுவது எந்த நாளோ

குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய

குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர்

குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி

குளிர் நிழல் அருவி கலக்கி பூ புனை வண்டல் ஆடா

முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய

முகிழ் முலை இளைய குறத்திக்கு ஆட்படு செந்தில் வாழ்வே

முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர

முறை அருள் முருக தவத்தை காப்பவர் தம்பிரானே

பாடல்-34

உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக

ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போலாய்

உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும்

முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய்

மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின்

வடிவு தரு கும்ப மோதி வளர் கொங்கை தோலாய்

வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலைதனை உணர்ந்து தாளில் உறு

வழி அடிமை அன்புகூரும் அது சிந்தியேனோ

இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும்

எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல்

இரு விழி துயின்ற நாரணனும் உமை மருவு சந்த்ரசேகரனும்

இமையவர் வணங்கு வாசவனும் நின்று தாழும்

முதல்வ சுக மைந்த பீடிகையில் அகில சக அண்டநாயகிதன்

முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே

முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி

முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே

பாடல்-35

உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள்

உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் மதியாதே

உரைக்கும் வீரிகள் கோள் அரவாம் என உடற்றும் தாதியர் காசளவே மனம்

உறைக்கும் தூரிகள் மீதினில் ஆசைகள் புரிவேனோ

அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர

அருள் கண் பார்வையினால் அடியார்தமை மகிழ்வோடே

அழைத்தும் சேதிகள் பேசிய காரண வடிப்பம் தான் எனவே எனை நாள்தொறும்

அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய்

இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள்

இடுக்கண் தீர் கனனே அடியார் தவமுடன் மேவி

இலக்கம் தான் எனவே தொழவே மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு

இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா

திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய

செக செம் சோதியும் ஆகிய மாதவன் மருகோனே

செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும் வாழையுமே திகழ்

திருச்செந்தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே

பாடல்-36

ஏவினை நேர் விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறி பேணா

ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள்

மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதனை இகழாதே

மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே

நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை

நாடியே கானிடை கூடிய சேவக நாயக மா மயில் உடையோனே

தேவி மநோமணி ஆயி பராபரை தேன் மொழியாள் தரு சிறியோனே

சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே

பாடல்-37

ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர

ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர்

கூரா அன்பில் சோரா நின்று அக்கு ஓயா நின்று உள் குலையாதே

கோடு ஆர் செம்பொன் தோளா நின் சொல் கோடாது என் கைக்கு அருள்தாராய்

தோரா வென்றி போரா மன்றல் தோளா குன்றை தொளை ஆடீ

சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர் மா அஞ்ச பொரும் வேலா

சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே

தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே செந்தில் பெருமாளே

பாடல்-38

கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள்

கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே

வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி

விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ

பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை

பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய

தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி

சற்சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே

பாடல்-39

கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும்

கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே

பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும்

பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய்

வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா

திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே

சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே

பாடல்-40

கமல மாதுடன் இந்திரையும் சரி சொலவொணாத மடந்தையர் சந்தன

களப சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய்

களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு

கரிய ஓதியில் இந்து முகம்தனில் மருளாதே

அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும்

அடைய ஓதி உணர்ந்து தணந்த பின் அருள் தானே

அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும்

அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய்

குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை

குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி

குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள்

குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன்

மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி

மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் இளையோனே

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல

மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே

திருப்புகழ் பாடல்கள் pdf

பாடல்-41

கரி கொம்பம் தனி தங்கம் குடத்து இன்பம் தனத்தின்கண்

கறுப்பும் தன் சிவப்பும் செம் பொறி தோள் சேர்

கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு ஒழிக்கும்

கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட

சர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன்

சடத்தும் பண் பிலுக்கும் சம்பள மாதர்

சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண்

தன துன்பம் தவிப்புண்டு இங்கு உழல்வேனோ

சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண்

சுகம் துய்ந்து இன்பு அலர் சிந்த அங்கு அசுராரை

துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண்

சுகித்தும் கண் களிப்பு கொண்டிடும் வேலா

சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும்

சிவ பண்பும் தவ பண்பும் தருவோனே

தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும்

செழிக்கும் செந்திலில் தங்கும் பெருமாளே

பாடல்-42

கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களை

கண்டு அங்கு அவர் பின் சென்று அவரோடே

கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு உண்டும்

பிணக்கு உண்டும் கலப்பு உண்டும் சலிப்பு உண்டும் தடுமாறி

செரு தண்டம் தரித்து அண்டம் புக தண்டு அந்தகற்கு என்றும்

திகைத்து அம் செகத்து அஞ்சும் கொடு மாயும்

தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம்

சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே

அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக்கண் சென்று அரக்கன் பண்பு

அனைத்தும் பொன்றிட கன்றும் கதிர் வேலா

அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும்

செந்திலில் தங்கும் குமரேசா

புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்

புதுக்கும் கங்கையட்கும் சுதன் ஆனாய்

புன குன்றம் திளைக்கும் செந்தினை பைம்பொன் குற கொம்பின்

புற தண் கொங்கையில் துஞ்சும் பெருமாளே

பாடல்-43

களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்

கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும்

கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு

மொழி கொடு தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகை ஆடி

பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர்

பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே

பிணமும் அணைபவர் வெறி தரு புனல் உணும் அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்

பெருமை உடையவர் உறவினை விட அருள்புரிவாயே

அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை

மகள் வசவனொடு புலி முலை உண மலையுடன் உருகா நீள்

அடவிதனில் உள உலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன்

அகல வெளி உயிர் பறவைகள் நிலம் வர விரல் சேர் ஏழ்

தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில்

சுருதி உடையவன் நெடியவன் மனம் மகிழ் மருகோனே

துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக

துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே

பாடல்-44

கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர

கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி

பொனின் குடங்கள் அஞ்சு மென் தனங்களும் புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாக

புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ

அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே

சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே

சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே

பாடல்-45

கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே

கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே

நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி

நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய்

குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய்

கொண்ட மயில் ஏறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா

மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ

மந்தி நடமாடும் செந்தி நகர் மேவு மைந்த அமரேசர் பெருமாளே

பாடல்-46

காலனார் வெம் கொடும் தூதர் பாசம்கொடு என் காலில் ஆர்தந்து உடன் கொடு போக

காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன்

சூலம் வாள் தண்டு செம் சேவல் கோதண்டமும் சூடு தோளும் தடம் திரு மார்பும்

தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும் தோகை மேல் கொண்டு முன் வரவேணும்

ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும் தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும்

ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த ஆதி மாயன் தன் நல் மருகோனே

சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம் சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே

தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம்பெறும் தாரை வேல் உந்திடும் பெருமாளே

பாடல்-47

குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி

குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு

அகரு தூளி கர்ப்புர தன இரு கோட்டு அன்புற்று இன்ப கடலூடே

அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய்

ககன கோளகைக்கு அண இரும் அளவா கங்கை துங்க புனலாடும்

கமலவதனற்கு அளவிட முடியா கம்பர்க்கு ஒன்றை புகல்வோனே

சிகர கோபுரத்தினும் மதிளினும் மேல் செம்பொன் கம்ப தளம் மீதும்

தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே

பாடல்-48

குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல்

குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா

அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா

அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய்

தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே

சரவண கந்த முருக கடம்ப தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே

சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா

துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே

பாடல்-49

குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம்

குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே

குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு

அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே

உழைக்கும் சங்கட துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டுஉண்டு

உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே

உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை

உயர்க்கும் கிண்கிணி செம் பஞ்சு அடி சேராய்

தழைக்கும் கொன்றையை செம்பொன் சடைக்கு அண்ட அங்கியை தங்கும்

தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார்

தனி பங்கின் புறத்தில் செம் பரத்தின் பங்கயத்தில் சஞ்சரிக்கும்

சங்கரிக்கு என்றும் பெருவாழ்வே

கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும்

கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே

கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில்

கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே

பாடல்-50

கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட

கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும்

வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய்

வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய்

சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர்

சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா

சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே

சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே

திருமண திருப்புகழ் பாடல் வரிகள் -திருமண தடை நீக்கும் திருப்புகழ் பாடல்

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த

மிகவானி லிந்துவெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற

வினைமாதர் தந்தம்வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

கொடிதான துன்ப மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

குறைதீர வந்துகுறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து

வழிபாடு தந்தமதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச

வடிவே லெறிந்தஅதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு

மடியா ரிடைஞ்சல்களைவோனே

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து

லைவா யுகந்தபெருமாளே

ஜோதிட படி, குடும்ப ஸ்தானமோ, களஸ்திர ஸ்தானமோ, பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டோ அல்லது அவற்றின் அமர்வினால் கெட்டு போய் இருந்தாலோ, சுக்கிரன் நீச்சம் மற்றும் குடும்ப ஸ்தான அதிபதி மறைவு ஸ்தானத்தில் இருந்தோலோ,நாக தோஷம் , களஸ்திர தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்கள் ஏற்பட்டு திருமண பொருத்தம் மற்றும் சரியான வரன் அமையாமல் திருமண தடை இருக்கலாம்.

இப்படி எந்த விதமான தோஷம் இருந்தாலும், அவற்றை நீக்கி திருமணம் விரைவில் நடைபெற உதவும் மந்திர சக்தி நிறைத்த பாடல், அருணகிரி நாதரால் பாடப்பெற்ற திருச்செந்தூர் திருப்புகழ் ஆகும். இந்த பாடல் திருமுருக கிருபானந்த வாரியாரால் சிபாரிசு செய்ய பட்டு நிறைய பேர் பலனடைந்துள்ளனர். இப்பாடலை முருகனை வேண்டி தினமும் ஆறு முறை என 48 நாட்கள் படித்து வந்தால், விரைவில் திருமணம் நடைபெறும். அவர்கள் வீட்டில் திருமண மேளம் கொட்டும் என்பதோடு மட்டுமல்லாமல், அமைய போகும் கணவனோ, மனைவியோ மிக சிறந்த பரிசாக அமையும் என்பது உண்மை ஆகும்.

இதையும் படிக்கலாமே

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

108 விநாயகர் போற்றி -கணபதி மந்திரம் 108 – vinayagar potri 108 -108 vinayagar potri in tamil-vinayagar 108 potri

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் lyrics -Thirupugal Lyrics in Tamil Read More »

குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் -Kula deivam kovil

குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் -Kula deivam kovil

Kula deivam kovil

குலதெய்வம் வழிபட உகந்த நாள்

Kula deivam kovil

பெளர்ணமி நாளில், குல்தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் பெளர்ணமி . ஒவ்வொரு பெளர்ணமியிலும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து குலதெய்வத்தை ஆராதிப்பது விசேஷமானது. தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

குலதெய்வம் வழிபடும் முறை

Kula deivam kovil

வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறினாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காத்தருளும். குலதெய்வ வழிபாடு செய்வது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. தினந்தோறும் ‘நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்’ என்று சொல்லி, வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறினாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காத்தருளும்

குலதெய்வ வழிபாடு வீட்டில் செய்வது எப்படி?

Kula deivam kovil

நாம் தினமும் குலதெய்வத்தை வணங்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வக் கோயிலுக்கு சென்று தரிசிக்க வேண்டும். குறிப்பாக அமாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. நம்மால் முடிந்த அளவுக்கு குலதெய்வக் கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்ய வேண்டும். 

குலதெய்வ வழிபாடு செய்வது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. தினந்தோறும் ‘நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்’ என்று சொல்லி வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறினாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காத்தருளும். குலதெய்வத்தின் பெயரை தினந்தோறும் உச்சரிக்க வேண்டும். இப்படி குலதெய்வத்தை பெண்கள் மட்டும் தான் நினைவு கூற வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே தினமும் குலதெய்வ வழிபாடு செய்து விட்டு, அவரவர் வேலையை தொடங்கினால்,  நல்லபடியாக அந்த நாள் செல்லும். 

அமாவாசை குலதெய்வ வழிபாடு

Kula deivam kovil

குலதெய்வ அருள் பெறவும் அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அமாவாசை நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிப்பதும் அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும்.

அமாவாசை நாளில்  முன்னோர்களின் ஆசி பெறுவது, குல தெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.

குலதெய்வம் என்பது உங்கள் முன்னோர்கள் வழிபட்ட குடும்ப தெய்வங்களாகும். அவைகளை அம்மாவாசை பௌர்ணமி நாள்களில் வழிபாடு செய்வது எந்த தவறும் இல்லை.

ஆகையினால் நீங்கள் யாருடைய சொற்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் உங்கள் மன அமைதிக்காக உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று சாத்வீகமான முறையில் நெய்விளக்கு ஏற்றி.

உங்களால் முடிந்த வகையில் பொங்கல் சுண்டல் வடை அப்பம் தேங்காய் பழம் தாம்பூலம் இவைகளை ஏதாவது ஒன்றை சமர்ப்பித்து வழிபாடு செய்து வரவும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்

குலதெய்வ அருள் பெற

Kula deivam kovil

வெள்ளிக்கிழமை அன்று அன்றாட பூஜை செய்யும் பொழுது கட்டாயம் குலதெய்வத்தை வேண்டி குலதெய்வம் படம் வைத்து இருப்பவர்கள் குலதெய்வத்தின் முன்பு அகல் தீபம் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். அதில் நெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அது போல் இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் சகலமும் வசமாகும். தேவகனி என்று சொல்லப்படும் எலுமிச்சை தான் அது. எலுமிச்சை பழத்தை வைத்து, குலதெய்வ மந்திரம் உச்சரித்து வழிபட்டு வந்தால், உங்களுடைய குலதெய்வம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள் புரியும்.

குலதெய்வம் வீட்டில் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

Kula deivam kovil

தீபம்

முதலில் பூஜை அறை தீபம் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்து விளக்கேற்றும் போது அந்த விளக்கு எப்போதும் போல் இல்லாமல் மிகவும் விளக்கு கொழுந்து விட்டு உயர உயர ஏரிகிறது என்றாள் அந்த தீபத்தை வளர்த்துக் கொண்டிருப்பதை உங்கள் குலதெய்வமாகத்தான் இருக்கும்.

பல்லி சத்தமிடுதல்

இரண்டாவதாக பல்லி சத்தமிடுதல் ஆம் உங்கள் வீட்டில் பூஜை அறையில் பல்லிகள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த இடத்தில் இறை சக்தி என்றால் தெய்வ சக்தி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். இறை சக்திகள் அதிகமாக இருக்கும் இடத்தில் பல்லிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதே போல் உங்கள் வீட்டில் உங்கள் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்றால் பல்லி சத்தமிட்டு கொண்டே இருக்கும் இதுவே உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா இல்லையா என்பதை காட்டி கொடுத்து விடும்.

சந்தனத்தின் நறுமணம்

மூன்றாவதாக திடீர் நறுமனம் வருதல் ஆம், வீட்டில் சந்தனத்தின் நறுமணம், விபூதியி நறுமணம், பூவின் வாசம் இந்த வாசனைகள் எல்லாம் உங்கள் வீட்டில் தீடிர் வாசனைகள் வருகிறது என்றால் உங்கள் வீட்டில் குல தெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம்.

சுருட்டு வாசனை

மேலும் சில குடும்பத்தினருக்கு கருப்பன், அய்யனார், முனியசாமி போன்ற ஆண் தெய்வங்கள் குலதெய்வமாக இருக்கும் இந்த தெய்வங்களுக்கெல்லாம் நாம் சுருட்டை ஒரு பிரசாதமாக வைத்து நாம் அதற்கு ஏற்றார் போல் உங்கள் வீட்டில் சம்பந்தமே இல்லாமல் திடீரென்று சுருட்டு வாசனை வருவதை நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் உங்கள் குல தெய்வத்தின் நடமாட்டம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையாக நம்பலாம்.

கோவில் எலுமிச்சை

நான்காவதாக எலுமிச்சை பழம் ஆம் நீங்கள் எப்போது கோவில்களுக்கு சென்று வரும்போது அங்கு கொடுக்கப்படும் எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டில் நிலை வாங்கி அல்லது பூஜை அறையிலும் வைத்திருப்பீர்கள். அப்படி வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் நாட்கள் செல்ல செல்ல சுருங்கி காய்ந்து போகிறது என்றால் உங்கள் வீட்டில் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

காகம் கரைதல்

ஐந்தாவது காகம் ஆம் காகமும் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தும்

குலதெய்வம் உத்தரவு

Kula deivam kovil

ஆறாவதாக அறிகுறி சில சமயங்களில் நீங்கள் வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் குறித்தோ அல்லது நல்ல காரியங்கள் குறித்தோ பேசும்போது அல்லது இந்த நல்ல குறித்தோ குறித்து உங்கள் குல தெய்வங்களிடம் நீங்கள் பிராத்தனை வைக்கும் போது உங்கள் குலதெய்வங்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்க நோக்கத்தில் ஒரு சில விஷயங்களை செய்வார்கள் இதில் சிலருக்கு தெரிந்த பொதுவான விஷயம் உங்கள் குலதெய்வத்தின் மேல் வைக்கின்ற பூ கீழே விழும் அல்லது எலுமிச்சம்பழம் கீழே விழும் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடக்கும்.

குலதெய்வ அபிஷேக பொருட்கள்

Kula deivam kovil

இறைவனுக்கு செய்யக்கூடிய அபிஷேக திரவியங்களின் பெயர்களை வரிசைப்படுத்தவும். எத்தனை விதமான அபிஷேக பொருட்கள் உள்ளது என்பது பற்றி விவரமாக பதிவிட முடியுமா#

பதினொன்று அபிஷோகங்கள்.

1 வாசனை தைலம்/ எண்ணெய்

2 பஞ்சகவ்யம்

3 பால்

4 தயிர்

5 நெய்

6 பஞ்ஞாமிர்தம்

7 கரும்புசாறு

8 பழச்சாறு/ பழங்கள்

9 சந்தனம்/ பன்னீர்

10.விபூதி

10 கும்பம் நீர் / ஸ்வர்ணாழிஷேகம்

குலதெய்வம் படம் வீட்டில் வைக்கலாமா?

Kula deivam kovil

நம் வாழ்வின் பிரச்னைகள் ஏற்படும்போது அவை ஏன் நிகழ்கின்றன என்று யோசிப்பதைவிட அவற்றை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசிப்பதுதான் சிறந்தது என்பார்கள் ஞானிகள். நம்மில் பலரும் நம் பிரச்னைகளுக்காக ஜோதிடர்களை அணுகிக் காரணம், பரிகாரம் கேட்பதுண்டு. அப்போது பல ஜோதிடர்கள் குலதெய்வ வழிபாட்டையே பரிகாரமாகக் கூறுவர்.

குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.

சில குலதெய்வங்களின் படத்தைக் கூட வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். மனதால் நினைத்து வழிபடும் பழக்கமே சில குடும்பங்களில் உள்ளது. அப்படியானால் குலதெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்றால் வழிபடலாம். ஆனால் அதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே

கால பைரவர் மந்திரம் – தனம் தரும் பைரவர் பாடல் வரிகள் -அஷ்ட பைரவர் மந்திரம்- kalabhairava ashtakam in tamil lyrics – Bairavar 108 Potri in Tamil

108 Murugar potri in tamil – 108 முருகர் போற்றி -murugan 108 potri in tamil- murugan 108 potri – ஓம் முருகா போற்றி

குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் -Kula deivam kovil Read More »

12 Rasi Athishta Number in Tamil -12 ராசிக்குமான அதிர்ஷ்ட எண்கள்

12 Rasi Athishta Number in Tamil -12 ராசிக்குமான அதிர்ஷ்ட எண்கள்

12 Rasi Athishta Number in Tamil

12 Rasi Athishta Number in Tamil – நீங்கள் எப்போதாவது எங்கள் எண் கணித வல்லுனர்களுடன் தொடர்பு கொண்டால், எண்கள் நமது ஆளுமை, உணர்வுகள் மற்றும் ஜாதகத்துடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். நீங்கள் பிறந்தது முதல் உங்கள் துணைக்கு சொந்தமானது வரை, அதிர்ஷ்ட எண்கள் வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து வரலாம். ஆனால் இந்த ஆதாரங்கள் அனைத்திலும் பிரகாசிப்பது ஜோதிடத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். நீங்கள் அதை நம்புவீர்கள், இல்லையா?

நீங்கள் செய்வீர்கள் என்று யூகித்து, எங்கள் நிபுணரான எண்கணித நிபுணரிடம் உதவி பெற்று, ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண் என்ன என்பதை எங்களிடம் கூறச் சொன்னோம் , அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது இங்கே.

மேஷம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

மேஷம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

மேஷம் தங்கள் சொந்த அதிர்ஷ்டத்தையும் விதியையும் உருவாக்குபவர்கள் என்றாலும், அவர்களின் அதிர்ஷ்ட எண் அல்லது எண்கள் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தால் அவர்களின் அதிர்ஷ்டம் பெருகும். எனவே எங்கள் நிபுணர் எண் கணித வல்லுநர்களின் கூற்றுப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட எண்கள் 6, 24 மற்றும் 64 ஆகும். இருப்பினும், சூதாட்ட நோக்கங்களுக்காக இந்த எண்களை பயன்படுத்த வேண்டாம் என்பதை ஆரியர்கள் உறுதி செய்ய வேண்டும். சரி, இந்த எண்கள் கூட மதிப்புக்குரியதா? சரி, நிச்சயமாக, நீங்கள் அவற்றை உங்கள் கடவுச்சொல்லாகவோ அல்லது அதுபோன்ற எதையும் வைத்திருக்கலாம். அவ்வாறு செய்வது உங்கள் சேமிப்பு, பணத்தின் அதிர்ஷ்டம் மற்றும் பலவற்றை அதிகரிக்கலாம்.

ரிஷபம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

ரிஷபம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

ரிஷப ராசியினரின் அதிர்ஷ்ட எண்கள் 6, 11 மற்றும் 17. இந்த எண்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பார்த்தால், நீங்கள் நேர்மறை ஆற்றலுடன் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தம், இதனால் நீங்கள் இருந்ததைச் செய்து கொண்டே இருங்கள். புளிப்பு எண் வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த அதிர்ஷ்ட எண்கள் உங்கள் தொழில்முறை வெற்றியைச் சேர்க்க உதவும். இருப்பினும், நமது ராசியின்படி அதிர்ஷ்ட எண்களை நீங்கள் அதிகம் நம்பக்கூடாது என்றும் எண் கணித வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். புத்தி மற்றும் அதிர்ஷ்டத்தின் கலவையை நீங்கள் தேட வேண்டும்.

மிதுனம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

மிதுனம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

ஜெமினிக்கு அதிர்ஷ்ட எண்ணைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் . ஏனென்றால், இந்த நபர்கள் நீண்ட நேரம் ஒரு அட்டவணையில் சிக்கிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் காலப்போக்கில் அவர்களின் ஆளுமையில் மாற்றங்களை கொண்டு வருவது போல், அவர்களின் அதிர்ஷ்ட எண்களும் மாறுகின்றன. இருப்பினும், இப்போதைக்கு, ஜெமினிக்கு அதிர்ஷ்டமான எண்கள் 3, 5 மற்றும் இந்த எண்களைச் சேர்த்த பிறகு வரும் முடிவுகள் – 5+3 = 8. 5+5 = 10, முதலியன.

சிம்மம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

சிம்மம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

சிம்ம ராசிக்கான அதிர்ஷ்ட எண்கள் 9, 19 மற்றும் 49 ஆகிய எண்களைக் கொண்டு, 9, 19 மற்றும் 49 ஆகிய எண்களைக் கொண்டவையாகும். இந்த எண்களைக் கொண்ட முஹூர்த்தங்களில் எந்த வேலையும் செய்வது உங்கள் யோகத்தின் நன்மையைக் கூட்டி, உங்களுக்கு  சாதகமான  பலன்களைத் தரும். எண் 9 ஒன்பது தெய்வங்களுடன் தொடர்புடையது. அதனால்தான் சிம்ம ராசிக்காரர்கள் பெண்மையின் ஆற்றல்களுடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இந்த ஆற்றல்கள் லியோஸை தொடர்பு, சிற்றின்பம் மற்றும் பணிவு ஆகியவற்றில் சிறந்ததாக்குகின்றன.

கன்னி ராசி அதிர்ஷ்ட எண்கள்

கன்னி ராசி அதிர்ஷ்ட எண்கள்

கன்னி பூமியின் உறுப்புக்கு சொந்தமானது. பூமியின் உறுப்பு என, அவர்கள் தங்கள் சொந்த செயல்களாலும் மற்றவர்களின் செயல்களாலும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் புத்திசாலித்தனத்தில் தொங்கிக்கொண்டு தங்கள் சுற்றுப்புறங்களை சமநிலைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். கன்னி ராசிக்கான அதிர்ஷ்ட எண்கள் – 0, 14 மற்றும் 49. இந்த எண்களின்படி நீங்கள் எதையும் தொடங்கினால், அது உங்கள் சுற்றுப்புறத்தை உங்களுக்கு நன்றாக வடிவமைக்க உதவும். சுருக்கமாக, நீங்கள் வெளி உலகிற்கு உள்ளேயும் வெளியேயும் சக்தியைப் பெறுவீர்கள். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண்ணின் மந்திரம் இதுதான் .

துலாம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

துலாம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

துலாம் அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் சமநிலையைக் காண ஏங்குகிறது. எனவே ஒரே எண்ணில் (11, 77, 88, 99, 66) எந்த இரட்டை இலக்க எண்ணும் அவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம். இருப்பினும், ஒற்றை இலக்க எண்களைப் பொறுத்தவரை, நமது ஜோதிடர்களின் கூற்றுப்படி, துலாம் ராசிக்காரர்களுக்கு 8 மற்றும் 2 எண்கள் நல்லவை. இந்த எண்களை உங்கள் தலையின் பின்புறத்தில் வைத்துக்கொண்டு நீங்கள் ஏதாவது செய்தால், அதில் நீங்கள் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிகம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

விருச்சிகம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையைப் பற்றி மிகவும் ஆர்வமாகவும் கவலையுடனும் இருப்பார்கள். எண்கள் உண்மையில் அவர்களுக்கு இந்த கவலையை குறைக்க உதவும். விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்ட எண்கள் 5 , 18 மற்றும் 69. இந்த எண்களைச் சுற்றி பகலில் யோகம்  இருந்தால்  , அந்த நேரத்தில் நீங்கள் எந்த வேலையைத் தொடங்கினாலும், அது உங்களுக்கு நன்றாக நடக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும், ஸ்கார்பியோஸ் வெளிச்செல்லும் மற்றும் புறம்போக்கு என்பதால், இந்த எண்களை பயணத்தின் போதும் மனதில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பயணம் செய்வதற்கு முன் 18ஐப் பார்ப்பது அதிர்ஷ்டம் என்று கூறப்படுகிறது, ஏனெனில் இது சூரியன் கிரகத்திலிருந்து வரும் ராசியாகும்.

தனுசு ராசி அதிர்ஷ்ட எண்கள்

தனுசு ராசி அதிர்ஷ்ட எண்கள்

தனுசு ராசிக்காரர்கள் இரகசியமானவர்கள். அவர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் மற்றும் ஒரு காளையின் ஆற்றல் கொண்டவர்கள். இருப்பினும், அவர்கள் நீண்ட கால பிணைப்புகளை உருவாக்குவது பெரும்பாலும் கடினமாக உள்ளது. அவர்கள் அவ்வாறு செய்தாலும், அந்த பிணைப்பு ‘வெறும் நண்பர்கள்’ விஷயத்தைத் தவிர வேறில்லை. தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட எண்கள் என்பதால் 5, 7, 15 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும் .

மகரம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

மகரம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

மகர ராசிக்காரர்கள் 3, 5, 14, மற்றும் 95 ஆகிய எண்களுடன் அவர்களைச் சுற்றி வைத்துக் கொண்டால் வெற்றியைக் காண்பார்கள். உடல்நலப் பயிற்சிகளை மேற்கொள்வது, குறிப்பாக இந்த எண்களில் ஏதேனும் ஒன்றில் கடிகாரத்தின் டிக் இருக்கும் போது (எ.கா: 5:14 AM); உங்கள் சக்கரங்களை சிறப்பாக சீரமைக்க உதவும். இத்தகைய நேரங்கள் எந்த வகையான அமர்வையும் முன்னெப்போதையும் விட அதிக பலனளிக்கின்றன.

கும்பம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

கும்பம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

கும்பம் தங்கள் உணர்ச்சிகளை நன்றாக மறைக்கும். ஆனால் அவர்கள் உண்மையில் விரும்புகிறார்களா? சரி, நம் ஒவ்வொருவரையும் போலவே, அவர்களும் சில செல்லம், அன்பு மற்றும் அக்கறையை நாடுகின்றனர். இந்த ஆடம்பரத்தை யார் அனுமதிக்க முடியும் என்று யூகிக்கிறீர்களா? சரி, அது அவர்களின் பிறந்த தேதியில் 2, 17 ஆகியவற்றைக் கொண்ட எவரும் இருக்கலாம். கும்ப ராசிக்காரர்களுக்கு மற்ற அதிர்ஷ்ட எண்கள் 77 மற்றும் 35 ஆகும்.

மீனம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

மீனம் ராசி அதிர்ஷ்ட எண்கள்

மீன ராசிக்காரர்கள் 5 மற்றும் 7 ஆகிய எண்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நேர்மறையான முடிவுகளைப் பெறலாம். மேலும், 15, 36, 21 போன்ற இந்த எண்களின் கூட்டுத்தொகையான எண்கள் மீனத்திற்கு அதிர்ஷ்டம். எதிர்மறை ஆற்றல்களை எதிர்த்துப் போராட இந்த எண்கள் உங்களுக்கு உதவும். மேலும், நீங்கள் இயல்பிலேயே கொஞ்சம் பொருள்சார்ந்தவர் என்பதும், இந்த எண்களைக் கொண்ட சில சமயங்களில் எதையாவது வாங்குவதும் மங்களகரமானது. இருப்பினும், ஒரே நேரத்தில் ஐந்து அல்லது ஏழு என்ற அளவில் எந்தப் பொருளையும் வாங்கக்கூடாது.

இதையும் படிக்கலாமே

12 ராசிக்காரர்களுக்கும் உரிய ராசியான நிறங்கள் என்ன? – 12 Rasi Niram in Tamil

12 ராசி கடவுள் -12 Rasi God in Tamil

12 Rasi Athishta Number in Tamil -12 ராசிக்குமான அதிர்ஷ்ட எண்கள் Read More »

12 ராசிக்காரர்களுக்கும் உரிய ராசியான நிறங்கள் என்ன? – 12 Rasi Niram in Tamil

12 ராசிக்காரர்களுக்கும் உரிய ராசியான நிறங்கள் என்ன? – 12 Rasi Niram in Tamil

12 Rasi Niram in Tamil

12 ராசிக்காரர்களும் எந்த நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டம் என்பதை அறிந்து கொள்வோம்.

12 Rasi Niram in Tamil – உங்கள் ராசிக்குரிய நிறத்தை நீங்கள் பயன்படுத்தினால் நீங்களும் ராசியானவராக அவர்களை போல் மாறிவிடுவீர்கள். அந்த வரிசையில் 12 ராசிக்காரர்களுக்கும் உரிய ராசியான நிறங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷ லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

மேஷ லக்னம் மற்றும் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இவர் சிவப்பு நிறத்திற்குச் சொந்தக்காரர். எனவே இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிறத்தை பயன்படுத்தலாம். இது முதல் தரமான, அதிர்ஷ்டத்தை உங்களுக்கு அளிக்கும். சிவப்பு நிறத்தைத் தொடர்ந்து, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிஷபம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி ரிஷப ராசி ஆகும். இந்த ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

மிதுனம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

புதனின் ஆதிக்கத்தில் உள்ள மிதுன ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.

கடகம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளது இந்த கடகம். கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள், மங்கிய வெண்மை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் பெருகும்.

சிம்மம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

சூரியனின் ராசியாக இந்த சிம்ம ராசி உள்ளது. இந்த சிம்ம ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், மங்கிய வெண்மை, மஞ்சள் மற்றும் வெளிர் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் உண்டாகும்.

கன்னி லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

புதனின் ஆதிக்கத்தில் உள்ள கன்னி ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.

துலாம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி துலாம் ராசி ஆகும். இந்த ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

விருச்சிக லக்னம் மற்றும் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தனுசு லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

தனுசு லக்னம் மற்றும் ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தங்க நிறம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மகரம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

மகர லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் கரு நீலம், வெண்மை மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கும்பம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

கும்ப லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் கரு நீலம், வெண்மை மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மீனம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

மீனம் லக்னம் மற்றும் ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தங்க நிறம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே

Rasi Natchathiram List in Tamil – எந்த ராசிக்கு எந்த நட்சத்திரம் தெரியுமா..?

12 ராசி அதிபதிகள் – 12 Rasi Athipathigal in Tamil

12 ராசிக்காரர்களுக்கும் உரிய ராசியான நிறங்கள் என்ன? – 12 Rasi Niram in Tamil Read More »

Rasi Natchathiram List in Tamil – எந்த ராசிக்கு எந்த நட்சத்திரம் தெரியுமா..?

Rasi Natchathiram List in Tamil – எந்த ராசிக்கு எந்த நட்சத்திரம் தெரியுமா..?

Rasi Natchathiram List in Tamil

12 ராசி 27 நட்சத்திரங்கள் -Rasi Natchathiram List in Tamil

மேஷம் ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

மேஷம் – அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய

ரிஷபம் ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

ரிஷபம் – கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய

மிதுனம் ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

மிதுனம் – மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய

கடகம் ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

கடகம் – புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய

சிம்மம் ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

சிம்மம் – மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய

கன்னி ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

கன்னி – உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய 

துலாம் ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

துலாம் – சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய 

விருச்சிகம் ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

விருச்சிகம் – விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய

தனுசு ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

தனுசு – முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய 

மகரம் ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

மகரம் – உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய 

கும்பம் ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

கும்பம் – அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய 

மீனம் ராசி நட்சத்திரம்

Rasi Natchathiram List in Tamil

மீனம் – பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய

ராசி நட்சத்திரம் அட்டவணை

Rasi Natchathiram List in Tamil
ராசி நட்சத்திரம் 
மேஷம் அசுவினி
கிருத்திகை
பரணி
ரிஷபம் கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிடம்
மிதுனம்திருவாதிரை
மிருகசீரிடம்
புனர்பூசம்
கடகம் பூசம்
ஆயில்யம்
புனர்பூசம்
சிம்மம் மகம்
பூரம் 
உத்திரம்
கன்னி சித்திரை
உத்திரம்
அஸ்தம்
துலாம் சித்திரை
விசாகம்
சுவாதி
விருச்சிகம் விசாகம்
கேட்டை
அனுஷம்
தனுசு மூலம்
பூராடம்
உத்திராடம்
மகரம் அவிட்டம்
உத்திராடம்
திருவோணம்
கும்பம் அவிட்டம்
பூரட்டாதி
சதயம்
மீனம் உத்திரட்டாதி
பூரட்டாதி
ரேவதி
ராசி நட்சத்திரம் அட்டவணை

12 ராசிகள்

Rasi Natchathiram List in Tamil

மேஷம், சிம்மம், தனுசு – நெருப்பு ராசிகள்

ரிஷபம், கன்னி, மகரம் – நிலம் ராசிகள்

மிதுனம், துலாம், கும்பம் – காற்று ராசிகள்

கடகம் , விருச்சிகம், மீனம் – நீர் ராசிகள்

மேஷம், கடகம், துலாம், மகரம் – சர ராசிகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் – ஸ்திர ராசிகள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் – உபய ராசிகள்

இதையும் படிக்கலாமே

12 ராசி நட்சத்திரத்திற்குரிய நல்ல தமிழ் பெயர்கள் – 12 Rasi Name in Tamil

உங்கள் ராசிப்படி நீங்க அணிய வேண்டிய டாலர் என்னவென்று தெரியுமா? – Rasi Dollar in Tamil

Rasi Natchathiram List in Tamil – எந்த ராசிக்கு எந்த நட்சத்திரம் தெரியுமா..? Read More »

Scroll to Top