முருகன் மூல மந்திரம் – Murugan Moola Manthiram -Murugan Moola Mantra
![Murugan Moola Manthiram](https://arogyapayanam.in/wp-content/uploads/2024/05/image-29.png)
Murugan Powerful Mantra in Tamil
![Murugan Moola Manthiram](https://arogyapayanam.in/wp-content/uploads/2024/05/image-30.png)
முருகன் மூல மந்திரம்
![Murugan Moola Manthiram](https://arogyapayanam.in/wp-content/uploads/2024/05/image-31.png)
ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ.
ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளால் எழுதப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம் பெற்றுள்ளது. மனதை ஒருமுகப்படுத்தி இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்பவர்களுக்கு முக்தி கிடைப்பது நிச்சயம் என கூறப்படுகிறது. எம பயமும் நீங்குகிறது. அதோடு ஒளிச்சுடராய் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு இந்த மந்திரம் உதவுகிறது. எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றித் தருகிறது இந்த மூல மந்திரம்.
இந்த மூல மந்திரத்தை கோடி முறை ஜெபித்தால் ஈடு இணையற்ற சக்தியைப் பெறலாம் என கூறப்படுகிறது. கடும் தவத்தின் வாயிலாக சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்த வேத சூட்சும ரகசியங்களை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். அந்த ரகசியங்களை முருகப்பெருமானே ஜோதி வடிவில் தோன்றி நமக்கு கற்பிப்பார் என்பது ஐதீகம். எத்தனை முறை இந்த மந்திரத்தை ஜெபிக்க முடியுமோ ஜெபித்து முருகப்பெருமான மனதார வணங்கினால் அவரது அருளாசிகளைப் பெறலாம்.