இரத்த சோகை நெருங்கவே நெருங்காது இந்த நித்ய கல்யாணி செடியால் – NithyaKalyani Benefits
![NithyaKalyani Benefits](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/06/image-81.png)
NithyaKalyani Benefits – உணவில் அதிகளவு காய்கள் மற்றும் பழங்களைச் சேர்த்து கொண்டால் நோயானது நம்மை நெருங்கவே நெருங்காது. நாம் உண்ணக் கூடிய உணவே சிறந்த மருந்தாக அமையும், எப்போது என்றால், சரியான விகிதத்தில், சரியான நேரத்தில், சரியான அளவு, சாப்பிடும் வேளையில்.
நித்ய கல்யாணி மருந்தானது நமது நோய்களைப் போக்க வல்லது. நித்ய கல்யாணி அழகுக்காக வளர்க்கப்படும் செடி மட்டும் அல்ல. நித்ய கல்யாணி செடி பலவகையான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. நித்ய கல்யாணி செடியை வீட்டில் வளர்த்தால் வாஸ்து சம்பந்தமான எந்த பிரச்சனையும் வாராது. நித்ய கல்யாணியின் இலை, பூ, வேர் என அனைத்து பகுதியும் மருத்துவ குணம் வாய்ந்தது.
நித்ய கல்யாணியின் பயன்கள்…
![NithyaKalyani Benefits](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/06/image-82.png)
- விஷ காய்ச்சலானது குணமாகும்.
- இரத்த புற்று நோய் குணமாகும்.
- ஆஸ்த்துமா குணமாகும்.
- மார்பக புற்றுநோய் குணமாகும்.
- கர்ப்பபை புற்றுநோய் குணமாகும்.
- சீரற்ற மாதவிடாய் பிரச்சனையைச் சரி செய்யும்.
- இரத்தசோகை குணமாகும்.
- நீரழிவு நோய் குணமாகும்.
- உடல் அசதி நீங்கும்.
- சிறுநீரக பிரச்சனை குணமாகும்.
- இரத்ததில் சர்க்கரை அளவானது குறையும்.
நித்ய கல்யாணியின் நன்மைகள்…
![NithyaKalyani Benefits](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/06/image-83.png)
நித்ய கல்யாணி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து கொள்ளவும். நித்ய கல்யாணி தண்டு மற்றும் வேரையும் எடுத்து கொள்ளவும். இவற்றை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இவற்றை நீரில் போட்டு கொதிக்க விடவும். இந்த மருந்து சுண்ட உடன், ஆற வைத்து அத்துடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்கவும். காலை, மாலை இரு வேளையும் குடித்து வந்தால் இரத்த புற்று நோய் மற்றும் விஷ காய்ச்சலானது குணமாகும்.
நித்ய கல்யாணி வேரை எடுத்துக் கொள்ளவும். அதனை நன்றாக சுத்தம் செய்து விட்டு நீரில் போட்டு கொதிக்க விடவும். இந்த மருந்து சுண்ட உடன் , அதனை ஆற வைத்து அதில் தேன் அல்லது சர்க்கரை கலந்து காலை மாலையும் 20 மில்லி குடித்து வந்தால் ஆஸ்த்துமா குணமாகும்.
![NithyaKalyani Benefits](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/06/image-84.png)
நித்ய கல்யாணி கஷாயம்
நித்ய கல்யாணி கஷாயமானது மார்பக புற்றுநோயை குணப்படுத்தக்கூடியது. நித்ய கல்யாணி செடியை எடுத்து கொள்ளவும். அதனை நன்றாக காய வைத்து, பொடியாக்கி கொள்ளவும். ஒரு டீஸ் ஸ்பூன் பொடியை எடுத்து தண்ணீரில் கொதிக்கவிடவும். அந்த மருந்து சுண்ட உடன், ஆற வைத்து தினமும் மூன்று வேளை அருந்தி வந்தால் மார்பக புற்றுநோய் குணமாகும்.
நித்ய கல்யாணி பூ கஷாயமானது கர்ப்பபை புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது. பதினைந்து கிராம் அளவு நித்திய கல்யாணி பூக்களை எடுத்துக் கொள்ளவும். அதனை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு அந்த மருந்து சுண்டியவுடன் ஆற வைத்து வடிகட்டி கொள்ளுங்கள். இதனை தினமும் மூன்று வேளை நாள் தவறாமல் குடித்து வந்தால் கர்ப்பபை புற்றுநோய் குணமாகும்.
நித்ய கல்யாணி வேர் கஷாயமானது முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது.
நித்ய கல்யாணியின் வேரை எடுத்து, சுத்தப்படுத்தி அதை நீரில் போட்டு கொதிக்க விடவும். அந்த மருந்து சுண்டியவுடன் வடிகட்டி கொள்ளவும். அதனை காலை, மாலை இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மாதவிடாய் பிரச்சனை சரியாகும்.
![NithyaKalyani Benefits](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/06/image-85.png)
நித்யகல்யாணி பூ இரத்தசோகையை சரிசெய்கிறது. நித்ய கல்யாணி பூவை எடுத்துக்கொள்ளவும். அதனை டம்ளரில் போட்டு தண்ணீர் ஊற்றவும். ஓர் இரவு முழுவதும் அது காற்றோட்டமாக இருக்க வேண்டும். காலையில் இந்த நீரை வடிகட்டி குடித்தால் இரத்தசோகை சரியாகும்.
நித்ய கல்யாணி கஷாயமானது நீரழிவு நோய் மற்றும் கணையம், உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது.
நித்திய கல்யாணி இலை மற்றும் பூக்களை சுத்தம்செய்து, நீரில் போட்டு கொதிக்கவிடவும். அந்த மருந்து சுண்டியவுடன் ஆற வைத்து , காலை மாலை இருவேளையும் குடித்து வந்தால் நீரழிவு நோய் குணமாகும்.
நித்திய கல்யாணி பூ கஷாயமானது உடல் அசதியை போக்குகிறது. நித்திய கல்யாணி பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும். அந்த மருந்து சுண்டியவுடன் அதனை ஆற வைத்து குடித்து வந்தால் உடல் அசதி குணமாகும்.
![NithyaKalyani Benefits](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/06/image-86.png)
நித்திய கல்யாணி வேர் பொடி சிறுநீரக சம்பந்தமான பிரச்சனையைச் சரிசெய்கிறது. நித்ய கல்யாணி வேர் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். அதனை சுடு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக சம்பந்தமான நோய்கள் சரியாகும்.
நித்திய கல்யாணி வேர் சூரணமானது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நித்ய கல்யாணி வேர் சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து, சுடு தண்ணீரில் கலந்து மூன்று வேளையும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
நித்ய கல்யாணி தாவரத்தின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.
இதையும் படிக்கலாமே
கீழாநெல்லியின் மருத்துவக்குணங்கள்-Keelanelli Benefits In Tamil
எலும்பை வலிமை அடைய செய்யும் ஆற்றலை உடையது முருங்கைக்கீரை- Murungai Keerai Benefits