உங்கள் வீட்டில் ரோஜா செடி பூ பூக்கவில்லையா… இந்த இரண்டு பொருட்கள் போதும்…ரோஜா செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்கும்…-rose flower
rose flower-அனைவருக்கும் ரோஜாப்பூவென்றால், மிகவும் பிடிக்கும். பார்க்கும் இடங்களில் எல்லாம் ரோஜா செடியை பல வண்ணங்களில் வாங்கி வந்து வீட்டில் வைப்பர். அதனை முறையாக பராமரிக்கவும் செய்வர். ஆனால், ரோஜா செடியில் பூக்கள் பூப்பது என்பது மிக அரிதாகக் காணப்படும். வாங்கிய புதியதில் இரண்டு மூன்று பூக்கள் பூக்கும். பின்னர், வெறும் செடி மட்டும் தான் காணப்படும். ரோஜா செடி பூ பூக்கமால் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள ரோஜா செடி பூ பூக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை- 25 கிராம்
கடுகு- 25 கிராம்
செய்முறை
காய்ந்த வேர்க்கடலையை எடுத்துக்கொள்ளவும். பின்னர், கடுகை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பவுடரை ஒரு பாட்டிலில் கொட்டிக்கொள்ளவும். பின்னர், இதில் நீர் ஊற்றிக்கொள்ளவும். பாட்டில் மூடியை நன்றாக மூடிவிட்டு 10 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும்.
தினமும் காலையில் இந்த தண்ணீரை நன்றாக குலுக்கி மட்டும் வைக்க வேண்டும். 10 நாட்கள் கழிந்தப்பின்பு, மூடியை திறந்து ஒரு டம்ளர் தண்ணீரையை எடுத்துக்கொள்ளவும். இந்த தண்ணீருடன் 5 டம்ளர் சாதராண தண்ணீரைக் கலந்து ரோஜா செடிக்கு ஊற்ற வேண்டும். மாதம் ஒரு முறை இந்த தண்ணீரை ஊற்றினால் போதும். ரோஜா செடியில் பூக்கள் பூத்துக்குலுங்கும்.
இது மிகச்சிறந்த உரமாகும். இதனை தவறாமல் மாதந்தோறும் செடிக்கு உரமாக ஊற்றுவதைப் பழக்கப்படுத்திக்கொண்டால் பூக்கள் பூத்துக்குலுங்கும். பார்ப்பதற்கு அழகாகவும்,ஆனந்தமாகவும் இருக்கும்.
பழையக் கொலுசு பளபளப்பாக ஜொலிக்க இந்த மூன்று பொருட்கள் போதும்…
மான் போன்ற கால்களுக்கு அழகு சேர்ப்பது கொலுசு. கொலுசு சிறிய குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரும் விரும்பி அணியக்கூடிய அணிகலனாகும். கொலுசு அணிவதன் மூலம் மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் பெருகும். வீடு முழுக்க கொலுசு ஓசை கேட்பவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கொலுசை வாங்கும் போது பல டிசைன்களில் பார்த்து பார்த்து வாங்கி மகிழ்வர். ஆனால், கொலுசை அணிந்த சில வருடங்களில் அதன் நிறமானது மாறத் தொடங்கும். கொலுசை பளபளப்பாக வைக்க எவ்வளவு முயற்சி செய்தும் பயன் இல்லையா? இந்த மூன்று பொருட்கள் போதும். கொலுசு பளபளப்பாக ஜொலிக்கும்…
தேவையான பொருட்கள்
கோல்கேட் டூத்பேஸ்ட் பவ்டர்
எலுமிச்சை சாறு
சுடத்தண்ணீர்
விளக்கம்
ஒரு கிண்ணத்தில் கோல்கேட் டூத்பேஸ்ட் பவ்டரை மூன்று தேக்கரண்டி கொட்டிக்கொள்ளவும். பின்னர், நன்றாக பழுத்த எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி சாறு எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சை சாறை கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை அழுக்கான கொலுசின் மீது நன்றாக தேய்க்கவும்.
தேய்த்தப்பின்னர், சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு, இந்த கொலுசைச் சுடத்தண்ணீரில் 10 நிமிடம் நேரம் போடவும். கொலுசு நன்றாக ஊறியதும், அதனை வெளியே எடுத்துக்கொள்ளவும். பின்னர், டூத் பிரஷைப்பயன்படுத்தி நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
இப்பொழுது கொலுசில் உள்ள அழுக்குகள் முழுவதுமாக நீங்கி, கொலுசு பளபளப்பாக இருப்பதைக் காண முடியும். மிக எளிமையான வழியில் கொலுசைப் பளபளப்பாக மாற்ற இது சிறந்த வழியாகும்.
முட்கள் நிறைந்த கண்டங்கத்திரி முழு செடியுமே மருத்துவக் குணம் வாய்ந்த செடியாகும். இதன் காய் கத்திரிக்காய் போல் காணப்படும். கண்டங்கத்திரியின் காய் மஞ்சள் நிறத்தில் காணப்படும். கண்டங்கத்திரியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
கண்டங்கத்திரியைப் பயன்படுத்தி கண்டங்கத்திரி குழம்பு, கண்டங்கத்திரி தீயல், கண்டங்கத்திரி ரசம் செய்வது எவ்வாறு என்பது பற்றி காண்போம்.
கண்டங்கத்திரி குழம்பு -Kandankathri kuzhambu
கண்டங்கத்திரியில் குழம்பு செய்து சாப்பிட்டால், சளி, இருமல், சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சனைகள் முழுவதும் குணமாகும். கண்டங்கத்திரி குழம்பு செய்வது எப்படி? என காண்போம்.
தேவையான பொருட்கள்
கண்டங்கத்திரி காய் – ஒரு கைப்பிடியளவு
தக்காளி -2
வெங்காயம் -3
பூண்டு – 10 பற்கள்
புளிகரைசல் – ஒரு டம்ளர் அளவு
மஞ்சள் தூள் –கால் தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் –தேவையான அளவு
உப்பு –தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு, சீரகம், கருவேப்பிலை
செய்முறை
கண்டங்கத்திரிகாயை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். கண்டங்கத்திரிகாயின் காம்பை நீக்கி, இரண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டுக்கொள்ளவும். பின்னர், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியில் தண்ணீர் மற்றும் உப்பு போட்டு ஊற வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தப்பிறகு, கடுகு மற்றும் சீரகத்தைப் போட்டுக்கொள்ளவும். பின்னர், வெங்காயம் மற்றும் பூண்டு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும். பிறகு, நறுக்கி வைத்துள்ள கண்டங்கத்திரியைக்காயை போட்டு, பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
பின்னர், மஞ்சள் தூள் போடவும். காய்கறி நன்றாக வதங்கிய பின் மிளகாய் தூள் போட்டுக்கொள்ளவும். பின்னர், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். தண்ணீர் நன்றாக கொதித்தப்பின் புளிகரைசலை ஊற்றிக்கொள்ளவும். குழம்பு நன்றாக சுண்டும் வரை கிளறிக்கொண்டு இருக்கவும். மணமணக்கும் கண்டங்கத்திரி குழம்பு பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய குழம்பாகும்.
கண்டங்கத்திரியில் தீயல் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சனைகள் முழுவதும் குணமாகும். கண்டங்கத்திரி தீயல் செய்வது எப்படி? என காண்போம்.
தேவையான பொருட்கள்
கண்டங்கத்திரி காய் – ஒரு கைப்பிடியளவு
சின்ன வெங்காயம் – 10 முதல் 15 வரை
மாசலாவிற்கு தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் -2, துருவிய தேங்காய் சிறிதளவு, பூண்டு -5 பற்கள், சீரகம், நெல்லிக்காய் அளவு புளி, மல்லித்தூள்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் , கடுகு
செய்முறை
எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். எண்ணெய் காய்ந்தப்பிறகு கடுகைப் போட்டுக்கொள்ளவும். கடுகு வெடித்தப்பின் சின்ன வெங்காயத்தைப் போட்டுக்கொள்ளவும். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியப்பின் கண்டங்கத்திரி மற்றும் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர், மாசலாவிற்குத் தேவையான பொருட்களை தனியாக வதக்கி, அரைத்து இதில் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக வதக்கிக்கொண்டே இருக்கவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சுண்டியவுடன் இறக்கிக்கொள்ளவும். சுவையான கண்டங்கத்திரி தீயல் சுவாசக்கோளாறை முற்றிலும் குணப்படுத்தக்கூடியது ஆகும்.
கண்டங்கத்திரி இரசம் – Kandankathri rasam
கண்டங்கத்திரியில் இரசம் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சனைகள் முழுவதும் குணமாகும். கண்டங்கத்திரி இரசம் செய்வது எப்படி? என காண்போம்.
தேவையான பொருட்கள்
கண்டங்கத்திரி இலைகளைச் சுத்தம் செய்து, அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். எண்ணெய் காய்ந்த பிறகு உளுத்தம் பருப்பைப்போட்டுக் கொள்ளவும். பின்னர், இடித்து வைத்துள்ள மாசலாவைப் போட்டுக்கொள்ளவும். நன்றாக வதக்கவும். பிறகு புளி கரைசலை ஊற்றவும்.
பின்னர், கண்டங்கத்திரி இலை சாறை ஊற்றவும். தண்ணீர் நன்றாக கொதித்தப்பிறகு பருப்பு வேக வைத்த தண்ணீரை ஊற்றிக்கொள்ளவும். இரசம் கொதித்தப்பின் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை தழையைப் போட்டு, இரசத்தை இறக்கிக்கொள்ளவும். சுவையான மணமணக்கும் கண்டங்கத்திரி இரசத்தைச் சாப்பிட்டால் இருமல் தொந்தரவு வரவே வாராது.
கண்டங்கத்திரியில் செய்யக்கூடிய உணவுமுறைகளைப் பற்றி பார்த்தோம். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த கண்டங்கத்திரி செடியில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நம் வீட்டின் அருகில் வளர்ந்தால், அதனை முறையாகப் பராமரிக்கவும். மக்களின் நோயைத் தீர்க்கக்கூடிய இந்த செடியைப் பராமரிப்பது நமது கடமையாகும்.
குழந்தைளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை மட்டும் செஞ்சி கொடுங்க போதும்…
குழந்தைளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க- குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வர வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்களுக்கு எளிதில் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன கொடுக்க வேண்டும்? என புலம்பும் தாய்மார்களே! இத மட்டும் செஞ்சி கொடுங்க.. போதும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குழந்தைளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
கஷாயத்திற்குத் தேவையான பொருட்கள்…
சீரகம் – கால் தேக்கரண்டி
மிளகு- 5
பூண்டு -1
இஞ்சி –சிறு துண்டு
ஒமம் -– கால் தேக்கரண்டி
கஷாயம் செய்யும் முறை
சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி, ஓமம் இவற்றை உரலில் போட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும். தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும், இடித்து வைத்த பொருட்களை அதில் போட்டு, கொதிக்கவிடவும்.
நீர் நன்றாக சுண்டவுடன், அதனை வடிகட்டிக் கொள்ளவும். சிறிது ஆற வைத்து, அதில் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
ஆறு மாத குழந்தைக்கு அரை பாலாடையும், ஒன்பது மாத குழந்தைக்கு முக்கால் பாலாடையும் கொடுக்கலாம். அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஒரு பாலாடையும் கொடுக்கலாம்.
இந்த கஷாயம் கொடுத்த உடன் குழந்தையை தோளில் போட்டு தட்டி, சிறிது நேரம் விளையாடவிட வேண்டும்.
இந்த கஷாயம் குடிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பசியின்மை பிரச்சனை, வயிறு சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
பூஜை பொருட்கள் பளபளப்பாக ஜொலிக்க மிக எளிய வழிகள் உங்களுக்காக-Poojai porutkal
Poojai porutkal-பூஜை அறை மங்களகரமாகவும், தெய்வீகத் தன்மையுடன் இருந்தால், அந்த வீட்டில் சகல ஜஸ்வர்யமும் பெருகும். வீட்டில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றுவதன் மூலம் செல்வமும், ஒற்றுமையும் பெருகும்.
பூஜை அறையில் உள்ள பொருட்களைச் சுத்தமாக, கழுவி மஞ்சள், குங்குமம் வைத்து, மலர் வைத்து, ஆராதனை செய்தால் மன அமைதி பெறும். பூஜை அறையில் உள்ள பொருட்களை எவ்வளவு கழுவியும் பளபளப்பாக இல்லையா? இதை மட்டும் செய்தால் போதும்… வீட்டின் பூஜை அறையில் உள்ள பொருட்கள் பளபளப்பாக இருக்கும்.
பூஜை பொருட்கள் பளபளப்பாக ஜொலிக்க
முதலில் பூஜை பொருட்களில் உள்ள எண்ணெய் பசையை ஒரு காகிதத்தைக் கொண்டு, நன்றாக துடைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி இந்துப்புவை எடுத்துக்கொள்ளவும்.
பின்னர், மூன்று தேக்கரண்டி கோதுமை மாவை அதில் சேர்க்கவும். புளி கரைத்த தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். பின்னர், எலுமிச்சைச் சாறை அதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர், பூஜை பொருட்களின் மீது இதனை தடவ வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர், நன்றாக தேய்த்து கழுவினால், பூஜை பொருட்கள் பளபளப்பாக இருக்கும். பின்னர், பூஜை பொருட்களை நன்றாக துடைத்து, மஞ்சள் , குங்குமம் வைத்தால் பூஜை பொருட்கள் பளபளப்பாக இருக்கும்.
வீட்டில் சகல ஐஸ்வர்யமும் பெருகும். மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி, தெய்வத்தை மனதில் நிறுத்தினால், எடுத்த காரியம் கைகூடும்.
அதிகாலையில் எழுந்தவுடன் இவற்றைப் பார்த்தால் போதும் நன்மை பெருகும்-Athikalai velaiyil parkka vendiyathu
Athikalai velaiyil parkka vendiyathu-காலையில் உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய பொருட்களைக் காண வேண்டும். அவ்வாறு காண்பதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வாகவும், சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் அமையும். காலையில் எழுந்ததும் எந்தெந்தப் பொருட்களைக் காணலாம் என்பதைப் பற்றி காணலாம்.
காலையில் எழுந்தவுடன் முதலில் பசுவின் முகத்தைப் பார்க்க வேண்டும். பசுவின் முகத்தைப் பார்த்தால் அன்றைய நாள் முழுக்க நன்மை கிடைக்கும். மன அமைதி கிடைக்கும். வீண் வாக்குவாதம் குறையும்.
காலையில் எழுந்தவுடன் தனது உள்ளங்கையைப் பார்த்தல் நல்லது. உள்ளங்கையில் லட்சுமி தேவி வாசம் செய்யக்கூடிய பகுதியாகும். உள்ளங்கையைப் பார்ப்பதன் மூலம் செல்வமானது பெருகும்.
தங்க நகை அணிந்த பெருமாளின் படத்தைக் காலையில் எழுந்தவுடன் பார்த்தால் பணமானது பெருகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காரியத் தடை நீங்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
காலையில் எழுந்தவுடன் மகாலட்சுமி படத்தைப் பாரத்தால் செல்வம் பெருகும். எடுத்த காரியம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பேரும், புகழும் கிடைக்கும்.
காலையில் எழுந்தவுடன் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பதும் நன்மை பயக்கும். காலையில் எழுந்ததும் தன் முகத்தைப் பார்ப்பதன் மூலம் தன்னம்பிக்கைப் பெருகும். மன தைரியம் பெருகும்.
காலையில் எழுந்தவுடன் தன் தாய், மனைவி, பிள்ளைகளின் முகத்தை காண்பதும் நன்மை பயக்கும். மனதில் அமைதி பெருகும். அன்றைய நாள் முழுக்க உற்சாகம் இருக்கும். ஒற்றுமை உணர்வோடு வாழ வழி கிடைக்கும்.
காலையில் கதிரவனைக் காண்பது சிறந்த பலனைத் தரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
இயற்கை காட்சிகளைக் காண்பதன் மூலம் மனம் புத்துணர்வாக இருக்கும். மனதில் அமைதி நிறைந்திருக்கும். எண்ணத்தில் தெளிவு மற்றும் பேச்சில் தெளிவு ஏற்படும்.
காலையில் எழுந்தவுடன் கோவில் கோபுரத்தைக் காண்பதன் மூலம் மங்கலம் பெருகும். சுப நிகழ்ச்சி செய்திகள் வீடு தேடி வரும். பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
காலையில் எழுந்தவுடன் சிவலிங்கத்தைக் காண்பதன் மூலம் ஆயுள் பெருகும். தீராத நோய்கள் குணமாகும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். பண வரவு அதிகரிக்கும்.
Excercise benefits- உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் குறையும்.
உடற்பயிற்சி அவசியம் -Excercise benefits
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலும், மனமும் பாதுகாக்கப்படுகிறது. நாம் அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளே மிகச்சிறந்த உடற்பயிற்சிக்குச் சான்றாகும். நடத்தல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், விளையாடுதல், நடனம் என் அனைத்துமே உடலையும், மனதையும் பலப்படுத்தக்கூடியது ஆகும்.
காலை, மாலை என இருவேளையும் உடற்பயிற்சி செய்யலாம். பெரும்பாலும் காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது. காலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலானது சுறுசுறுப்பாக இருக்கும். காலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மன அமைதியாக இருக்கும். மேலும், கவனச்சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைகிறது.
உடற் பயற்சி செய்வதன் மூலம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் கோபமானது கட்டுக்குள் வரும். இதய படபடப்பு குறையும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு சீராக இருக்கும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் செரிமானம் சார்ந்த பிரச்சனை நீங்கும். உடல் செயல்பாடு நன்றாக இருக்கும். உடலானது ஆரோக்கியமாகவும், புத்துணர்வாகவும் இருக்கும். இரவில் நன்றாக துக்கம் வரும்.
அமாவாசை அன்று மறந்தும் கூட இதை செய்யாதீங்க-Amavasaya
அமாவாசை பொருள்
சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரக்கூடிய நாளைத்தான் அமாவாசை என்று அழைப்பர். சந்திரன் முழுமையாக மறையக்கூடிய நாள்தான் அமாவாசை ஆகும்.
அமாவாசை விரதம் யார் இருக்க கூடாது?
அமாவாசை அன்று பொதுவாக பெரும்பாலோனோர் அசைவ சாப்பாட்டைத் தவிர்த்து விரதம் இருப்பர். வீட்டைச் சுத்தம் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். ஆண்கள் தாய் , தந்தை இல்லை என்றால் அமாவாசை விரதம் இருக்கலாம். கணவரை இழந்த பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாம். சுமங்கலி பெண்கள் எக்காரணம் கொண்டும் அமாவாசை விரதம் இருக்கக்கூடாது.
அமாவாசை அன்று செய்யக்கூடாதவை
அமாவாசை அன்று வீட்டின் முன் எக்காரணம் கொண்டும் கோலம் போட கூடாது.
அமாவாசை அன்று வீட்டில் காலைப் பொழுதில் படைக்கக் கூடாது. பொதுவாகக் காலையில் அமாவாசைப் படைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர். அதைத் தவிர்க்க வேண்டும்.
அமாவாசை படைத்தப்பிறகு வீட்டில் இருந்து பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி,நூல் இவற்றை யாருக்கும் தர கூடாது. மீறி தந்தால் வறுமை ஏற்படும்.
மறந்தும் கூட அமாவாசை அன்று தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது.
அமாவாசை அன்று நுனி இலையில் காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். காகத்திற்குச் சாதம் வைப்பதன் மூலம் நம் முன்னோர்கள் பசியாறுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
அமாவாசை அன்று நம் முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். அவர்களின் அருளால் வீட்டில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும்.
அமாவாசை அன்று மறந்தும் கூட அசைவ சாப்பாட்டைச் சாப்பிடக்கூடாது.
அமாவாசை அன்று உணவில் பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
அமாவாசை அன்று எவரையும் கோவமாகத் திட்டக்கூடாது. அமாவாசை அன்று நம் முன்னோர்கள் மண்ணுலகிற்கு வருவார்கள். அவர்கள் முன் கோவமாகத் திட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
அமாவாசை அன்று பூஜை அறையில் மணி அடிக்கக்கூடாது. மணி அடிப்பதன் மூலம் நம் முன்னோர்களின் ஆன்மா உள்ளே வரத்தயங்குமாம். எனவே, மணி அடிக்கக்கூடாது.
ஏழு மாத குழந்தை சாப்பிட வேண்டிய பழங்கள்-Fruits for babies
குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பின்னர் திட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். சத்து நிறைந்த எளிதில் செரிமானம் அடையகூடிய உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். திட உணவைக் கொடுக்க ஆரம்பித்தாலும், அத்துடன் இணை உணவாகத் தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிட வேண்டிய பழத்தைப் பற்றி காணலாம்.
பழத்தைக் கொடுக்கும் முறை
ஏழு மாத குழந்தைக்கு பழத்தை நறுக்கியோ, பழச்சாறாகவோ கொடுக்கக்கூடாது. பழத்தை வேக வைத்து கூழாக்கி கொடுக்க வேண்டும். பழத்தைக் கூழாக்கிக்கொடுக்கும் போது அதில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. பழத்தில் உள்ள சர்க்கரையே போதுமானது ஆகும்.
கிவி பழம்
கிவி பழத்தை வேக வைத்து தோல் நீக்கி, மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்குக் கிவி பழத்தைக் கொடுத்து வந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு வரக்கூடிய சளி, மூச்சுத்திணறல் போன்றவற்றைக் கிவி பழம் குணப்படுத்தும். கிவி பழத்தில் ஒமேகா 3, போலேட், கொழுப்பு அமிலம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளது.
ஸ்டாபெரி பழம்
ஸ்டாபெரி பழத்தை வேக வைத்து தோல் நீக்கி, மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஸ்டாபெரி பழத்தில் வைட்டமின் சி, போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு முதலிய எண்ணற்ற சத்துகள் உள்ளது. குழந்தைகளுக்கு கிவி பழத்தைக் கொடுத்து வந்தால்,
ஆப்பிள்
ஆப்பிளை நன்றாக வேக வைத்து தோல் நீக்கி, மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும். ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை நன்றாக மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வாழைப்பழத்தைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி2, சுண்ணாம்புச்சத்து உள்ளது.
குழந்தை சாப்பிட வேண்டிய காய்கறிகள்-Vegetables for babies
Vegetables for babies-ஏழு மாத குழந்தைக்கு என்னென்னக் காய்கறிகளைக் கொடுக்க வேண்டும் என குழம்பும் தாய்மார்களே! குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பின்னர் திட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். சத்து நிறைந்த எளிதில் செரிமானம் அடையகூடிய உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். திட உணவைக் கொடுக்க ஆரம்பித்தாலும், அத்துடன் இணை உணவாகத் தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிட வேண்டிய காய்கறிகளைப் பற்றி காணலாம்.
குழந்தைகளுக்கு காய்கறிகளைக் கொடுக்கும் முறை
ஏழு மாத குழந்தைக்கு காய்கறியை நன்றாக வேக வைத்து, மசித்து கொடுக்க வேண்டும். காய்கறிகளை அவசியம் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். காய்கறிகளைப் பழக்கப்படுத்தவில்லை என்றால், பின்னாளில் அவர்கள் காய்கறியை வேண்டாம் என்று ஓதுக்குவார்கள். குழந்தைக்குச் சரியான ஊட்டச்சத்து காய்கறிகளில் தான் உள்ளது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர், நன்றாக கழுவி கொள்ளவும். அதனை, வேக வைத்து தோல் நீக்கிக்கொள்ளவும். பிறகு நன்றாக மசித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். உருளைக்கிழங்கைக் குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.
கேரட்
கேரட்டை தோல் சீவிக்கொள்ளவும். பின்னர், சிறு சிறு துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு கேரட்டை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். பின்னர், மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கேரட்டைக் குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் குழந்தையின் அறிவுத்திறன் பெருகும். கேரட் சாப்பிடுவதால் கண்கள், பற்கள், தோல், இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றிற்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
பீட்ரூட்
பீட்ரூட்டை தோல் சீவிக்கொள்ளவும். பின்னர், சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர், வேக வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். பீட்ரூட்டைக் குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். புதிய இரத்த உற்பத்தியாக உறுதுணையாக இருக்கும்.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி உள்ள தாதுக்கள் இதயம், தசைகள், கண்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்லது. ப்ரோக்கோலியை வேகவைத்து கொடுக்கலாம். உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க ப்ரோக்கோலியை உணவில் சேர்க்கவும்.
இனிப்பு உருளைக்கிழங்கு
இனிப்பு உருளைக்கிழங்கைக் குழந்தைகள் அதன் இனிப்பு தன்மைக்காக அதிகம் விரும்புவார்கள். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இனிப்பு உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் டி குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இனிப்பு உருளைக்கிழங்கு சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான தொற்றுநோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆறு மாத குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்கச் சாப்பிட வேண்டிய சத்து மாவு -Cerelac for 6 months baby
குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பின்னர் திட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். சத்து நிறைந்த எளிதில் செரிமானம் அடையகூடிய உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். திட உணவைக் கொடுக்க ஆரம்பித்தாலும், அத்துடன் இணை உணவாகத் தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும்.
சத்து உணவு செய்யும் முறை…
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அரிசியைக் கொட்டிக் கொள்ள வேண்டும்.
அதனை நன்றாக கழுவி, பின்னர் உலர வைக்க வேண்டும்.
`பிறகு, அரிசியை வறுக்க வேண்டும்.
பின்னர், அரிசியை ஆற வைத்து, மிக்சியில் போட்டுக்கொள்ள வேண்டும்.
அத்துடன் பொட்டுகடலை, சீரகம் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், இதனை சல்லடையால் சலித்து ஒரு பாத்திரத்தில் கொட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
தேவையான நேரத்தில் ஒரு தேக்கரண்டி இந்த மாவை எடுத்துக்கொண்டு, தண்ணீரில் போட்டு கிளறி சாப்பிடும் பதம் வந்தவுடன் இறக்கிக்கொள்ள வேண்டும்.
இது குழந்தைக்கு மிகவும் சத்தான உணவாகும். இதன் மூலம் குழந்தைகள் எடை அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மறந்தும் கூட மாலை நேரத்தில் இதை செய்யாதீங்க-Malai nerathil seya kudathavai
கதிரவன் மறையும் மாலை நேரத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ, என்ன பேசுகிறோமோ அது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, மாலை விளக்கு ஏற்றும் நேரத்தில், வீட்டைச் சுற்றி நேர்மறை எண்ணங்களை உருவாக்க வேண்டும். அந்நேரத்தில், நேர்மறையான வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும். முடியாது, நடக்காது போன்ற எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்.
மாலை ஆறு மணிக்கு மேல் யாரையும் திட்டவோ, சாபமிடவோ கூடாது. எதிர்மறை வார்த்தைகளைப் பேசக்கூடாது. நல்லது நடக்கும், வெற்றி உண்டாகும் போன்ற நேர்மறையான வார்த்தைகளைப் பேச வேண்டும். நாம் மாலை நேரத்தில் நல்ல செயல்களைச் செய்தால், அதன் மூலம் நல்ல வளமான வாழ்க்கையே நமக்குக் கிடைக்கும். எதிர்மறை வார்த்தைகளைப் பேசினால், அதன் விளைவு நம்மையேத் தாக்கும்.
மாலை விளக்கு வைத்தப்பிறகு வீட்டிலிருந்து பணம், பால், உப்பு இவற்றை யாருக்கும் தரக்கூடாது. அதை மீறி தந்தால், வீட்டில் செல்வம் தங்காது.
மாலை நேரத்தில் பெண்கள் தலையை விரித்து போட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. விளக்கு வைக்கும் நேரத்திற்கு முன்னாக தலை சீவ வேண்டும். மாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது. ஆண்கள் தாடி மற்றும் முடி வெட்டக்கூடாது.
மாலை விளக்கும் வைக்கும் நேரத்தில் யாரும் உறங்கக் கூடாது. குழந்தை மற்றும் நோயுற்றவர், வயதானவர் உறங்கலாம். மீறி உறங்கினால், கடன் சுமை அதிகரிக்கும்.
மாலை நேரத்தில் துணி துவைக்கக்கூடாது. ஈர துணிகளைக் காய வைக்க கூடாது. அதை மீறி மாலை நேரத்தில் துணி துவைத்தாலோ, துணிகளைக் காய வைத்தாலோ வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, மாலை நேரத்தில் துணி துவைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மாலை நேரத்தில் துணி தைக்க கூடாது. மீறினால் வறுமை வந்து சேரும்.
இரவில் வீட்டைப் பெருகினால், குப்பையை வெளியில் கொட்டக்கூடாது. வீட்டின் உள்ளேயே வைக்க வேண்டும். காலையில் எழுந்து வெளியில் கொட்ட வேண்டும்.
மாலை நேரம் என்பது எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்த வேளையாகும். அந்நேரத்தில், தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் வளமான வாழ்க்கையைப் பெறலாம்.
அடர்த்தியான புருவம் பெற இதை செய்தால் போதும்-Adarthiyana puruvam pera
மான் போன்ற விழிகளுக்கு வில் போன்ற புருவம் அமைந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். வில் போன்ற புருவத்தைப் பெற இந்த வழிகளைக் கடைப்பிடித்தால் போதும்.
சின்ன வெங்காயம் -Adarthiyana puruvam pera
சின்ன வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். அதனை அரைத்து சாறினை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை புருவத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்தால் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.
தேங்காய் எண்ணெய்-Adarthiyana puruvam pera
தேங்காய் எண்ணெயை இளஞ்சூடாக காய்ச்சி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை புருவத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்தால் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.
ஆலிவ் எண்ணெய்-Adarthiyana puruvam pera
ஆலிவ் எண்ணெயில் துளசியைப் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை புருவத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்தால் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.
விளக்கெண்ணெய்-Adarthiyana puruvam pera
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து புருவத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்தால் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து சூடாக்கி புருவத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்தால் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.
பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil
Palli sollum palan-கடவுளின் செய்தியாளன், கடவுளின் தூதுவனான பல்லி மூலம் கடவுள் நமக்கு நடவிருக்கும் நன்மை, தீமைகளை முன்கூட்டியே கூறுவார். அதையறிந்து முறையாக செயல்பட்டால், நன்மையின் பலன்களையும், தீமைகள் நம்மை அண்டாமலும் நாம் நம்மை காத்துக்கொள்ளலாம். பல்லி எழுப்பக்கூடிய சத்தத்தை வைத்து கூட நல்லது மற்றும் கெட்டதைக் கணிப்பர்.
பல்லியானது ஒரு முறை சத்தம் எழுப்பினால் துன்பம் உண்டாகும்.
பல்லியானது இரண்டு முறை சத்தம் எழுப்பினால் தனலாபம் கிடைக்கும்.
பல்லியானது மூன்று முறை சத்தம் எழுப்பினால் மரணம் செய்தி வரும்.
பல்லியானது நான்கு முறை சத்தம் எழுப்பினால் சௌபாக்கியம் உண்டாகும்.
பல்லியானது ஐந்து முறை சத்தம் எழுப்பினால்
பல்லியானது ஆறு முறை சத்தம் எழுப்பினால் பீடை உண்டாகும்.
பல்லியானது ஏழு மற்றும் எட்டு முறை சத்தம் எழுப்பினால் அகமகிழ்வு உண்டாகும்.
நம் அனைவரது வீட்டிலும் பல்லி நிச்சயமாக இருக்கும். எதிர்பராத விதமாக பல்லி நம் மீது விழுவதும் உண்டு. அதனால், பயம் கொள்ளத் தேவையில்லை. பல்லி எழுப்பக்கூடிய சத்தத்தை வைத்து கூட நல்லது மற்றும் கெட்டதைக் கணிப்பர். எந்த திசையில் இருந்து பல்லி சத்தம் எழுப்பினால் என்ன பலன் என்பதைப் பற்றிக் காண்போம்.
வடக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
பல்லியானது வாயு மூலையான வடக்கு திசையிலிருந்து சத்தமிட்டால் சுப செய்திகள் வீட்டை நோக்கி வரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.
கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
பல்லியானது கிழக்கு திசையிலிருந்து சத்தமிட்டால் நல்லது கிடையாது. இதனால், நம் மனதில் தேவையற்ற பயம் வரக்கூடும். கெட்ட செய்திகள் வரும். குடும்பத்தில் குடும்ப தலைவனுக்கோ, தலைவிக்கோ தேவையற்ற மனக்கவலை உண்டாகும்.
வடகிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
பல்லியானது வடகிழக்கு திசையிலிருந்து சத்தமிட்டால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் செய்யும் இடத்தில் இடையூறு ஏற்பட வாய்ப்புண்டு. வெளியூர் பயணங்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வடமேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
வடமேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் இறையருள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உறவினர் வருகையால் நற்செய்தி உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் புதியதாக வீட்டிற்கு வரும் பெண்களால் குடும்பத் தகராறு உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனை உண்டாகும். பெண்களுக்கு உடல்நலபாதிப்பு உண்டாகும்.
தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு உறவினர் வருவார்கள். அவர்களால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
தெற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
தெற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டில் சுப நிகழ்ச்சி குறித்த பேச்சு தொடங்கும். சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். நன்மை தரக்கூடிய விஷயம் நடக்கும்.
தெற்கு மற்றும் வடக்கில் இரண்டு பல்லிகள் சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
தெற்கு மற்றும் வடக்கில் இரண்டு பல்லிகள் சத்தமிட்டால் தொழிலில் நஷ்டம் உண்டாகும். வீட்டில் உள்ள ஆண்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. பணவிரயம் ஆகும்.
செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை நாளில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை நாளில் பல்லி சத்தமிட்டால் நன்மை உண்டாகும். பல்லி சத்தம் இட்ட இடத்திற்குச் சென்று, இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து மலர்களைத் தூவி வணங்கினால் நாம் நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எடுத்த காரியம் கைகூடும்.
வீட்டின் தரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
வீட்டின் தரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். காரியசித்தி உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.
வீட்டின் மேற்கூரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
வீட்டின் மேற்கூரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் பயணம் மேற்கொள்ள வாய்ப்புண்டு. காரியத்தடை உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.
பல்லி சொல்லும் பலன் அட்டவணை…
கிழக்கு திசை
ஞாயிற்றுக்கிழமை
பயம்
திங்கள்கிழமை
தன லாபம்
செவ்வாய்கிழமை
சம்பத்து
புதன்கிழமை
சந்தோஷம்
வியாழன்கிழமை
கெட்ட சகுனம்
வெள்ளிக்கிழமை
சுப செய்தி
சனிக்கிழமை
நற்செய்தி
தென் கிழக்கு திசை
ஞாயிற்றுக்கிழமை
தீமை
திங்கள்கிழமை
கலகம்
செவ்வாய்கிழமை
லாபம்
புதன்கிழமை
தனலாபம்
வியாழன்கிழமை
புகழ்
வெள்ளிக்கிழமை
லட்சுமி கடாட்சம்
சனிக்கிழமை
பொருட்கள்
தெற்கு திசை
ஞாயிற்றுக்கிழமை
சுகம்
திங்கள்கிழமை
பகை
செவ்வாய்கிழமை
விசனம்
புதன்கிழமை
துன்பம்
வியாழன்கிழமை
தனலாபம்
வெள்ளிக்கிழமை
வரவு
சனிக்கிழமை
பதவி உயர்வு
தென்மேற்கு திசை
ஞாயிற்றுக்கிழமை
வரவு
திங்கள்கிழமை
விரோதம்
செவ்வாய்கிழமை
எதிரிகள்
புதன்கிழமை
கஷ்டம்
வியாழன்கிழமை
காரியச்சித்தி
வெள்ளிக்கிழமை
பணவரவு
சனிக்கிழமை
ரோகம்
மேற்கு திசை
ஞாயிற்றுக்கிழமை
சண்டை
திங்கள்கிழமை
ராஜ தரிசனம்
செவ்வாய்கிழமை
அனுகூலம்
புதன்கிழமை
பயணம்
வியாழன்கிழமை
நஷ்டம்
வெள்ளிக்கிழமை
சந்தோஷம்
சனிக்கிழமை
ரோகம்
வடமேற்கு திசை
ஞாயிற்றுக்கிழமை
வஸ்திரம்
திங்கள்கிழமை
கெட்ட சகுனம்
செவ்வாய்கிழமை
பயணம்
புதன்கிழமை
பொருட்கள் பழுது
வியாழன்கிழமை
நற்செய்தி
வெள்ளிக்கிழமை
கலகம்
சனிக்கிழமை
ஸ்திரி
வடக்கு திசை
ஞாயிற்றுக்கிழமை
திரவியம்
திங்கள்கிழமை
வஸ்திரம்
செவ்வாய்கிழமை
சத்ரு பயம்
புதன்கிழமை
கலகம்
வியாழன்கிழமை
காரியச்சித்தி
வெள்ளிக்கிழமை
கலகம்
சனிக்கிழமை
பணவரவு
வடகிழக்கு திசை
ஞாயிற்றுக்கிழமை
லாபம்
திங்கள்கிழமை
கல்யாணம்
செவ்வாய்கிழமை
வாகனம்
புதன்கிழமை
தோல்வி
வியாழன்கிழமை
போஜனம்
வெள்ளிக்கிழமை
சத்ரு பயம்
சனிக்கிழமை
திருடர் பயம்
பல்லி சொல்லும் பலன் உண்மையா?
பல்லி சொல்லக்கூடிய பலன் உண்மையாகும். பண்டையகாலத்தில் கௌளி சாஸ்திரம் என்ற நூலே இருந்துள்ளது. அந்த புத்தகத்தில் பல்லி சொல்லும் பலன்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அது மக்கள் வாழ்வியலில் நடக்கக்கூடிய நன்மை, தீமைகளை முன்கூட்டியே கூறுவதாக அமைந்துள்ளது.
இரவில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?
செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை நாட்களின் இரவில் பல்லி கத்தினால், நமக்கு வெற்றி உணடாகும் என்ற அர்த்தமாகும். மற்ற நாட்களில் பல்லி கத்தினால் நமக்கு மிகுந்த கவனம் தேவை. எந்தவொரு செயலையும் பன்முறை யோசித்து செய்ய வேண்டும்.
கோவிலில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?
கோவிலில் இறைவனை வணங்கும்போது பல்லிகள் சத்தமிட்டால் நமது வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பிக்கை உண்டு. கடவுளின் செய்தியாளன், கடவுளின் தூதுவனான பல்லியின் மூலம் கடவுள் நம்மிடம் பேச விரும்புவார். நமது வேண்டுதல் நிறைவேறும் என்றும், நாம் தொடங்விருக்கும் செயல் வெற்றி அடையும் என்றும் பல்லிகள் கோவிலில் பலன் சொல்லும்.
பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?
வீட்டின் பூஜை அறையில் பல்லி இருந்தால் நம் வீட்டில் செல்வம் செழிப்பு அதிகமாகும். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் லாபமானது பெருகும்.
தலைக்கு மேல் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?
மிகவும் சந்தோஷமான தருணம் ஏற்பட போகிறது என்று அர்த்தம் ஆகும்.
பல்லி வீட்டில் இறந்தால் பலன் என்ன தெரியுமா?
இறந்த பல்லியைப் பார்ப்பது நல்லதல்ல. அப்படி பார்க்க நேர்ந்தால் குலதெய்வத்தை வழிபடுதல் வேண்டும். பிரசாதம் வழங்குதல் போன்ற பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இறந்த பல்லியைப் பார்க்க மற்றவர்களை ஒருபோதும் அழைக்க கூடாது. இறந்த பல்லியை உடனடியாக அகற்ற வேண்டும்.
வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் என்ன தெரியுமா?
நமக்கு நடவிருக்கும் நன்மை, தீமைகளை உணர்த்தும் அறிகுறியாகும். வீட்டில் பல்லி கத்துவது என்பது கடவுள் நம்மிடம் உரையாட விரும்புகிறார் என்ற அர்த்தமாகும்.