பெருமாள் அருளால் செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்கள் போதும்…

செல்வம் பெருக

செல்வ செழிப்போடு மங்கலமாக வாழ வேண்டும் என கடினமாக உழைக்கும் மக்களே….ஏழுமலையானை மனம் உருகி வழிபட்டு வந்தால் பெருமாள் இல்லம் தேடி வருவார். வீட்டில் செல்வ செழிப்பு மேலோங்கும்.

துளசி

வீட்டின் முன் துளசி செடியை நிச்சயமாக  வளர்க்க வேண்டும். துளசி செடியை வீட்டில் வளர்த்து வந்தால் செல்வம் பெருகும். அதிஷ்டம் உங்கள் இல்லம் தேடி வரும். தெய்வத்  தன்மையான இந்த செடி பெருமாளுக்கு உகந்தது ஆகும். துளசி செடியை தினமும் வணங்கி வர வேண்டும். குளிக்காமல் துளசி இலையைப் பறிக்கவோ, சாப்பிடவோ கூடாது.

ஏகாதசி

ஏகாதசி அன்று பெருமாள் பாதம் வரைந்து ,  அர்ச்சனை செய்து வழிபட்டால் செல்வம் பெருகும். தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்டால் சகல ஜஸ்வர்யமும் இல்லம் தேடி வரும்.

பச்சை வளையல்

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவலில் தாயாருக்கு ஆராதனை செய்து, பச்சை வளையலைத் தாயாருக்கு அணிவித்து வந்தால் பணம் பெருகும்.

திருப்பதி

வருடத்திற்கு ஒருமுறையாவது திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்து வந்தால் லட்சாதிபதி ஆகலாம்.

தங்க நகை அணிவித்த திருப்பதி ஏழுமலையானை காலை எழுந்தவுடன் பார்த்து வந்தால் பணம் பெருகும்.

பிரசாதம்

பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தைப் பெற்று , தினமும் பெருமாளை வணங்கி வந்தால் செல்வம் பெருகும்.

பெருமாளுக்கு சூடிய சிவப்பு வண்ண ரோஜாவைக் காய வைத்து, பணம் வைக்கும் பெட்டியிலும், வீட்டின் பூஜை அறையிலும் வைத்தால் செல்வம் பெருகும்.

இதையும் படிக்கலாமே

பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top