முகப்பொலிவு பெற இந்த மூன்று பொருட்கள் போதும்… பத்தே நொடியில் முகமானது பொலிவு பெறும்…- Mugam polivu pera
![Mugam polivu pera](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/05/image-24.png)
Mugam polivu pera-அனைவரும் பொலிவான முகத்தையே விரும்புகின்றனர். அதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டும் பயன் இல்லாமல் அவதிப்படுகின்றனர். வெயிலில் அலைவதாலும், முகப்பருக்களின் வடுக்களாலும் முகமானது தனது பொலிவை இழக்கிறது.
முகமானது பொலிவைப் பெற இந்த மூன்று பொருட்கள் போதும்… பத்தே நொடியில் முகமானது பொலிவைப் பெறும்.
முகப்பொலிவு பெற
தேவையான பொருட்கள்
மஞ்சள் தூள் -இரண்டு தேக்கரண்டி
பால்- ஒரு தேக்கரண்டி
தேன்-ஒரு தேக்கரண்டி
செய்முறை
![Mugam polivu pera](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/05/image-25.png)
ஒரு காய்ந்த பாத்திரத்தில் மஞ்சள் தூளை இரண்டு தேக்கரண்டி கொட்டிக்கொள்ளவும். மஞ்சள் தூளை நன்றாக பொன்னிறமாக வரும் வரை வறுத்துக்கொள்ளவும். மஞ்சள் தூளை வறுத்தப்பிறகு, அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டிக்கொள்ளவும்.
வறுத்த மஞ்சள் தூளுடன் ஒரு தேக்கரண்டி பாலை ஊற்றி, நன்றாக கலக்கவும். பின்னர், ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவிக்கொள்ளவும். நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முகத்தை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
முகத்தில் உள்ள கருமை முழுவதுமாக நீங்கி, முகமானது பொலிவைப் பெறும். இந்த கலவையில் உள்ள மஞ்சள் தூளானது முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். பாலானது, சருமத்திற்கு மென்மையைத் தரும். மேலும், தேனானது முகத்திற்கு பொலிவைத் தரும். இந்த கலவையை வாரம் இரண்டு முறை முகத்திற்குத் தேய்த்து வந்தால், முகமானது பொலிவைப் பெறும்.
இதையும் படிக்கலாமே-
தோஷங்களை நிவர்த்தி செய்ய செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள்…Dosham nivarthi aga
Pingback: தோஷங்களை நிவர்த்தி செய்ய செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள்…Dosham nivarthi aga