மருத்துவம்

கர்ப்ப கால வாந்தி கட்டுப்படுத்த என்ன வழி? -How to control during pregnancy time vomit…

கர்ப்ப கால வாந்தி கட்டுப்படுத்த என்ன வழி?

கர்ப்ப கால வாந்தி

தாய்மை என்பது ஒரு பெண்ணை பெருமை அடையச் செய்யக்கூடிய ஒரு உணர்வாகும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடல் மற்றும் மன அளவில் பல வகையான மாறுபாடு ஏற்படும். வாந்தியானது சில பெண்களுக்கு 3 மாதம் வரைக்கும், சில பெண்களுக்கு 5மாதம் வரைக்கும் தொடரும். அத்தகைய வாந்தியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை பற்றி காணலாம்.

தண்ணீர்

கர்ப்பிணிகள் தண்ணீரை நிறைய குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய குடிப்பதால் வாந்தி உணர்வானது கட்டுக்குள் வரும்.

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும். உணவில் இஞ்சியைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாந்தி உணர்வு குறையும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சைப் பழத்தின் வாசனையை முகர்ந்து பார்த்து வந்தால் வாந்தி உணர்வு கட்டுக்குள் வரும். எலுமிச்சைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.

சோம்பு

சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.

கிவி பழம்

கிவி பழத்தை நன்றாக அரைத்து சாறு எடுத்து, அதனை பருகி வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.

கிராம்பு

கிராம்பை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.

சூப்

காய்கறிகளை நன்றாக அரிந்து, வேக வைத்து அத்துடன் பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்த்து கொதிக்கவிட்டு அதனை பருகி வந்தால் வாந்தி உணர்வு குறையும். மேலும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்-Pregnancy women food…

கர்ப்ப கால வாந்தி கட்டுப்படுத்த என்ன வழி? -How to control during pregnancy time vomit… Read More »

காய்ச்சல் சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்- Food for during fever…

காய்ச்சல் சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்- Food for during fever…

காய்ச்சல்

மனித உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது காய்ச்சலாக மாறுகிறது. காய்ச்சலின் போது சாப்பிட பிடிக்காது.  வாய் கசப்பாக இருப்பதால் உணவை உட்கொள்ள முடியாது. காய்ச்சலின் போது உணவைத் தவிர்த்தால், சோர்வு மற்றும் எடை இழப்பு ஏற்படும். எனவே, காய்ச்சலின் போது அவசியம் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சி

இஞ்சியைத் தோல் சீவி எடுத்துக்கொண்டு, சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்.  அத்துடன் ஏலக்காய், தேன், உலர் திராட்சை போட்டு கொதிக்கவிட்டு, பின்னர், வடிகட்டி குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.

பழச்சாறு

காய்ச்சலின் போது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழச்சாறைப் பருகி வந்தால், உடலுக்கு பலம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காய்கறிகள்

பீட்ரூட், பீன்ஸ், கேரட் ஆகிய காய்கறியைச் சிறிதாக நறுக்கி நன்றாக வேக வைத்து, அத்துடன் மிளகு மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

கஞ்சி

அரிசியை வேகவைத்து அத்துடன் மிளகு, சீரகம், புதினா, கொத்தமல்லி தழைகளைக் கலந்து குடித்தால் உடல் வலிமையாக இருக்கும்.

பிரெட்

காய்ச்சலின் போது பிரெட்டைச் சாப்பிடலாம். பிரெட்டைப் பாலில் தொட்டு சாப்பிடலாம். பிரெட்டைத் தொடர்ந்து மூன்று நாளுக்கு மேல் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, பழங்களை அவசியம் சாப்பிட வேண்டும். வெந்நீரைக் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள்-Pregnancy women food…

காய்ச்சல் சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்- Food for during fever… Read More »

இருமல் குணமாக இதை செய்யுங்கள் போதும்-Dry cough home remedies

இருமல் குணமாக இதை செய்யுங்கள் போதும்-Dry cough home remedies

இருமல்

தொண்டையின் உள்பகுதியில் தொற்று இருந்தால் இருமல் வந்து கொண்டே இருக்கும். தொண்டைப் பகுதியில் உள்ள தொற்றை நீக்குவதற்கான வழிமுறைகளைக் காண்போம்.

இஞ்சி

இஞ்சியைத் தோல் நீக்கி காய வைத்து, அதனை பொடியாக்கி அத்துடன் சீரகம் பொடி மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

துளசி

துளசி இலைகளைப் பறித்து சுத்தம்  செய்து அதை கொதிக்க வைத்து, அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், இருமல் குணமாகும்.

மஞ்சள் தூள்

பாலில் மஞ்சள் தூள் , மிளகு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.

தேன்

ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டால், தொண்டைக்கு இதமாக இருக்கும். தொண்டையில் இருக்கும் அரிப்பு மற்றும் புண் குணமாகும்.

உப்பு

உப்பை நீரில் போட்டு அந்த நீரால் வாயைக் கொப்பளித்தால், தொற்று குணமாகும்.

வெற்றிலை

வெற்றிலை காம்பை வாயில் போட்டு மென்றால் இருமல் குணமாகும்.

இதையும் படிக்கலாமே

காய்ச்சல் சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்- Food for during fever…

இருமல் குணமாக இதை செய்யுங்கள் போதும்-Dry cough home remedies Read More »

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஆவி பிடிப்பதன் வாயிலாக சளி,காய்ச்சலை விரட்டுவதோடு சரும பொலிவு மற்றும் இளமையான தோற்றத்தையும் பெற முடியும். ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் காணலாம்.

மூக்கில் உள்ள தொற்று

வெந்நீரில் எலுமிச்சை தழை, கற்பூரவல்லி , வேப்பிலை, துளசி ஆகியவற்றைப் போட்டு ஆவி பிடித்தால் மூக்கில் உள்ள தொற்றுகள் குறையும்.

தலைவலி

வெந்நீரில் தைல இலைகளைப் போட்டு, சிறிது நேரம் ஆவிப்பிடித்தால் தலைவலி குணமாகும்.

காய்ச்சல்

எலுமிச்சை பழத்தை இரண்டாக்கி அதை வெந்நீரில் போட்டு, அத்துடன் கற்பூரவல்லி இலைகளைப் போட்டு ஆவிப்பிடித்தால் காய்ச்சல் குணமாகும்.

முக பொலிவு

நன்றாக தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில், மஞ்சள், எலுமிச்சை சாறு கலந்து, வேது பிடித்தால் முகமானது பொலிவு பெறும். இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

முகப்பரு

வெந்நீரில் மஞ்சள் மற்றும் வேப்பிலை போட்டு வேது பிடித்தால், முகத்தில் உள்ள அழுக்கு வெளியேறும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். முதுமை தோற்றம் நீங்கும். முகப்பரு உடைந்து வெளியேறும்.

இதையும் படிக்கலாமே

இருமல் குணமாக இதை செய்யுங்கள் போதும்-Dry cough home remedies

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்… Read More »

எலும்பு முறிவை சரி செய்யக்கூடிய எளிய வைத்தியம்…   

எலும்பு முறிவை சரி செய்யக்கூடிய எளிய வைத்தியம்…   

எலும்பு முறிவு

ஒரு மனிதன் சுறுசுறுப்பாக ஓடி ஆடவும், வேலை செய்யவும் உறுதுணையாக இருப்பது நமது எலும்புகளே. எதிர்பராத விதத்தில் ஏற்படக்கூடிய எலும்பு முறிவை சரிசெய்யக்கூடிய மிக எளிமையான வீட்டு வைத்தியத்தைப் பற்றி காண்போம்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை அரைத்து வடிகட்டி, குடித்து வந்தால் எலும்பு முறிவால் ஏற்பட்ட வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும், கற்றாழை சாறானது எலும்பை வலிமையாக்கும்.

எள்

எள்ளை வறுத்து, தினமும் சாப்பிட்டு வர எலும்பு முறிவால் ஏற்பட்ட வலி மற்றும் வீக்கம் குறையும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் எலும்பு முறிவு விரைவில் குணமாகும்.

மஞ்சள்

பாலுடன் மஞ்சள் கலந்து குடித்து வந்தால், எலும்பு முறிவினால் ஏற்பட்ட காயம் குணமாகும். மேலும், எலும்பு வலிமையாக இருக்கும்.

விளக்கெண்ணெய்

ஒரு துணியை விளக்கெண்ணெயில் ஊற வைத்து, பிறகு அந்த துணியை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டினால் எலும்பு முறிவு குணமாகும்.

இதையும் படிக்கலாமே

மறந்தும் கூட மாலை நேரத்தில் இதை செய்யாதீங்க-Malai nerathil seya kudathavai

எலும்பு முறிவை சரி செய்யக்கூடிய எளிய வைத்தியம்…    Read More »

தசை பிடிப்பு குணமாக சில வீட்டு வைத்தியம்…

தசை பிடிப்பு குணமாக சில வீட்டு வைத்தியம்…

தசை பிடிப்பு

ஊட்டச்சத்து குறைப்பட்டால் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. தசைகளில் ஏற்படும் காயம், முதுகெலும்பில் ஏற்படும் நரம்பு சுருக்கம் ஆகியவற்றால் தசைபிடிப்பு ஏற்படுகிறது. தசைப்பிடிப்பைச் சரிசெய்யக்கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.

வெண்ணெய்

வெண்ணெயை உணவில் சேர்த்துக்கொண்டால் தசைப்பிடிப்பு குணமாகும். வெண்ணெயில் இருக்கக்கூடிய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தசைப்பிடிப்பைக் குணப்படுத்தும்.

சர்க்கரை வள்ளி

சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் தசைப்பிடிப்பு குணமாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, சி மற்றும் பொட்டாசியம் உள்ளது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தைக் காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால், தசைப்பிடிப்பு குணமாகும். வாழைப்பழத்தில் உடலுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளது.

பரங்கிக்காய்

பரங்கிக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் தசைப்பிடிப்பு சரியாகும். பரங்கிக்காயை கூட்டாக செய்து சாப்பிடுவதன் மூலம் தசைப்பிடிப்பு குணமாகும்.

ஆரஞ்சு

ஆரஞ்சைப் பழமாகவும், பழச்சாறாகவும் பருகி வந்தால் தசைப்பிடிப்பு பிரச்சனை நீங்கும். தினமும் ஆரஞ்சு பழத்தைச் சாப்பிட்டு வருதல் மூலம் தசைப்பிடிப்பு குணமாகும்.

இதையும் படிக்கலாமே

புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்-Cancer

தசை பிடிப்பு குணமாக சில வீட்டு வைத்தியம்… Read More »

தீக்காய எரிச்சல் குணமாக இதை செய்யுங்கள் போதும்…

தீக்காய எரிச்சல் குணமாக இதை செய்யுங்கள் போதும்…

தீக்காய எரிச்சல்

சமையலறையில் வேலை செய்யும் போதோ, சுடு தண்ணீரை எடுத்து செல்லும் போதோ, சட்டையை அயர்ன் செய்யும் போதோ எதிர்பராத விதமாக தீக்காயம் ஏற்பட வாய்ப்புண்டு. தீக்காயம் ஏற்பட்ட உடன் பதட்டத்தைப் போக்கி, காயத்தைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை

பின்னர், கற்றாழை ஜெல்லை எடுத்து தீக்காயத்தின் மீது தடவினால் தீக்காய எரிச்சலானது குறையும்.

செய்யக்கூடாதவை

சிலர் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய், ஐஸ் கட்டி, டூத் பேஸ்ட், முட்டையின் வெள்ளைக்கரு, வெண்ணெய் முதலியவற்றை வைப்பர். இதனால், காயம் பெரிதாக வாய்ப்புண்டு. எனவே, இவற்றை அவசியம் செய்யக்கூடாது.

தீ காயம் ஏற்பட்ட இடத்தைச் கதிரவன் வெளிச்சம் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தீக்காய எரிச்சல் குணமாக

களிம்பு

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் களிம்பை 5 முதல் 15 நிமிடத்திற்கு தடவினால் எரிச்சல் குறையும்.

ஆன்ட்டிபயாட்டிக் கிரீம்

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஆன்ட்டிபயாட்டிக் கிரீமைத் தடவி ஒரு துணியால் மூடி வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே

அரிப்பு முழுவதுமாக நீங்க செய்ய வேண்டியவை என்ன?-Itching remedies

தீக்காய எரிச்சல் குணமாக இதை செய்யுங்கள் போதும்… Read More »

தோல் சுருக்கம் நீங்க சில எளிமையான வழிகள்- Thol surukkam

தோல் சுருக்கம் நீங்க சில எளிமையான வழிகள்- Thol surukkam

தோல் சுருக்கம்

தோல் சுருக்கம் வரக் காரணம்

ஊட்டச்சத்து குறைப்பட்டாலும், புகை பிடிப்பதாலும், வெயிலில் அலைவதாலும், வயதான காரணத்தாலும் தோலில் சுருக்கம் ஏற்படுகிறது.

தோல் சுருக்கம் நீங்க

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். ஆரஞ்சு, சாத்துக்குடி,கொய்யாப்பழம், பப்பாளி ஆகிய பழங்களையும், குடைமிளகாய், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளையும் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

கேரட் பழச்சாறு, வெள்ளரிக்காய் பழச்சாறு, பீட்ரூட் பழச்சாறு அதிகளவு பருக வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தக்காளியைப் பிழிந்து சாறு எடுத்து  தோலின் மீது தடவி வந்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் நீக்கி அரைத்து தயிருடன் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் அரைத்த திராட்சை மற்றும் தேனைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி பாலுடன் கலந்து முகத்தில் தடவினால் முகச்சுருக்கம் நீங்கும்.

முட்டையை நன்றாக கலக்கிக்கொள்ளவும். அத்துடன், தேன், பால், ஆலிவ் எண்ணெய், பதாம் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் கலந்து உடம்பில் தேய்த்து, ஊற வைத்து பின்னர் சோப்புபோட்டு குளித்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்து உடம்பில் தேய்த்து ஊற வைக்கவும். பின்னர், கோதுமைத் தவிட்டால் ஒத்தடம் கொடுக்கவும். பின்னர், கடலை மாவைத் தடவி ஊற வைத்து, முகத்தைக் கழுவினால் முகச்சுருக்கம் நீங்கும்.

வெந்தயக் கீரை சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் நீங்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு, நெல்லிக்காய் இவற்றை சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் நீங்கும்

இதையும் படிக்கலாமே

முகப்பொலிவு பெற இந்த மூன்று பொருட்கள் போதும்… பத்தே நொடியில் முகமானது பொலிவு பெறும்…- Mugam polivu pera

தோல் சுருக்கம் நீங்க சில எளிமையான வழிகள்- Thol surukkam Read More »

உடல் சூடு குறைய இதை செய்தால் போதும்- How to control body heat…

உடல் சூடு குறைய இதை செய்தால் போதும்- How to control body heat…

உடல் சூடு குறைய இதை செய்தால் போதும்- How to control body heat...

வெயிலில் அலைவதாலும், நெடுந்தூரம் பயணம் மேற்கொள்வதாலும், போதிய அளவு தண்ணீர் குடிக்காத காரணத்தாலும் உடல் உஷ்ணம் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தால் தலை வலி, வயிற்று வலி, முடி உதிர்தல், தோல் வறட்சி, முகப்பரு போன்ற பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்புள்ளது.

தண்ணீர்

தண்ணீரை நிறைய குடிக்க வேண்டும். தண்ணீரை நன்றாக குடித்தாலே  உடல் உஷ்ணம் குறையும்.

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து, அரைத்து கொள்ளவும். பின்னர், தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் உஷ்ணம் குறையும்.

வெந்தயம்

வெந்தயத்தை நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர், வெந்தயத்தை அரைத்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், உடல் உஷ்ணம் குறையும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்து கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சீயக்காய் கொண்டு தலையை அலசினால் உடல் உஷ்ணம் குறையும்.

நல்லெண்ணெயில் பூண்டு மற்றும் மிளகைப் போட்டு, கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், எண்ணெயை வடிகட்டி கொள்ளவும். இந்த எண்ணெயைக் காலின் கட்டை விரலில் தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் உஷ்ணம் குறையும்.

இதையும் படிக்கலாமே

தோல் சுருக்கம் நீங்க சில எளிமையான வழிகள்- Thol surukkam

உடல் சூடு குறைய இதை செய்தால் போதும்- How to control body heat… Read More »

உடல் துர்நாற்றம் இரண்டே நாளில் சரியாக…

உடல் துர்நாற்றம் இரண்டே நாளில் சரியாக…

உடல் துர்நாற்றம்

உடல் துர்நாற்றம் வரக்காரணம்

தினமும் குளித்தாலும் பாக்டீரியாக்களில் வளர்ச்சியின் காரணமாக உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதுவும் வெயில் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. உடல் துர்நாற்றம் வீசினால், பக்கத்தில் யாரும் வரமாட்டார்கள்.

குளித்த பின்னர் உடலை நன்றாக துடைக்க வேண்டும். உடல் துர்நாற்றத்தைப் போக்கக்கூடிய சில வழிகளைக் காணலாம்.

உடல் துர்நாற்றம் நீங்க

தக்காளி சாறைப் பருகி வந்தால் உடல் துர்நாற்றம் குறையும். தக்காளி சாறு பருகுவதன் காரணமாக உடல் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அதனால், வியர்வையும், உடல் துர்நாற்றமும் வரக்கூடிய வாய்ப்பு குறைகிறது.

குளிக்கின்ற தண்ணீரில் வெட்டி வேரைப் போட்டு குளித்தால் உடல் துர்நாற்றம் குறையும்.

வேப்பிலையை அரைத்து, அதனை அக்குள் பகுதியில் தடவி ஊற வைத்து, பின்னர் குளித்தால் வியர்வை துர்நாற்றம் குறையும்.

எலுமிச்சை சாறை எடுத்து அதனை அக்குள் பகுதியில் தடவி ஊற வைத்து, பின்னர் குளித்தால் வியர்வை துர்நாற்றம் குறையும்.

குளிக்கும் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு கரைய வைத்து, குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் குறையும்.

தண்ணீரை அதிகமாக குடிக்கும் போது உடல் வெப்பம் குறையும். அதனால் , வியர்வைச் சுரப்பது கட்டுக்குள் வரும்.

இதையும் படிக்கலாமே

உடல் சூடு குறைய இதை செய்தால் போதும்- How to control body heat…

உடல் துர்நாற்றம் இரண்டே நாளில் சரியாக… Read More »

இனி வயிறு உப்பசம் பிரச்சனை வரவே வராது…

இனி வயிறு உப்பசம் பிரச்சனை வரவே வராது…

வயிறு உப்பசம்

வயிறு உப்பசம் அறிகுறி

வயிறானது கனமாகவும், பாரமாகவும் இருப்பது வயிறு உப்பசத்தின் அறிகுறியாகும். வயிறு உப்பசத்தால் வயிற்றில் கடுமையான வலி ஏற்படும். வயிறு உப்பசத்தைப் போக்கக்கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.

வயிறு உப்பசம் குணமாக

பெருங்காயம்

தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.அதில் பெருங்காயம் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வயிறு உப்பசம் குணமாகும்.

மோர்

மோரில் இஞ்சி, பெருங்காயம் கலந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து பின்னர், குடித்து வர வயிறு உப்பசம் குணமாகும்.

புதினா இலை

புதினா இலையைக் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் ஏலக்காய்ச் சேர்த்து வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர், அதனை அருந்தி வந்தால், வயிறு உப்பசம் குணமாகும்.  புதினாவைத் துவையலாகவும், தோசையாகவும், சாதமாகவும் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

சீரகம்

தேங்காயை நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். அத்துடன், சீரகம் மற்றும் பெருங்காயம் கலந்து வாயில் போட்டு விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிறு உப்பசம் நீங்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை நன்றாக நறுக்கி கொள்ள வேண்டும். அத்துடன் பெருங்காயம் கலந்து உருண்டையாக்கி வாயில் போட்டு விழுங்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்தால் வயிறு உப்பசம் நீங்கும்.

இதையும் படிக்கலாமே

மாலைக்கண் நோய் வராமல் இருக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்-Malai kan

இனி வயிறு உப்பசம் பிரச்சனை வரவே வராது… Read More »

வயிறு வலி குணமாக நாம் செய்ய வேண்டியது-Stomach pain

வயிறு வலி குணமாக நாம் செய்ய வேண்டியது-Stomach pain

வயிறு வலி

வயிறு வலி வரக் காரணம்

உடல் உஷ்ணத்தாலும், சரியாக சாப்பிடாத காரணத்தாலும், காரமான உணவைச் சாப்பிடுவதாலும் வயிற்றில் வலி உண்டாகும். வயிற்று வலியைக் குறைக்கக்கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.

வயிறு வலி குணமாக

வயிறு வலியைக் குணப்படுத்தக்கூடிய மிக எளிமையான வீட்டு வைத்தியத்தைக் காண்போம்.

புதினா

புதினா இலையைக் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் ஏலக்காய்ச் சேர்த்து வடிகட்டி அருந்த வேண்டும். இவ்வாறு செய்தால், வயிற்றுவலி குணமாகும்.  புதினாவைத் துவையலாகவும், தோசையாகவும், சாதமாகவும் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

பழைய சோறு

முந்தைய நாள் மித்த சாதத்தில் நீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் பெருங்காயம் கலந்து குடிக்க வேண்டும். வந்தால் வயிற்று வலி குணமாகும்.

கற்றாழை

கற்றாழைச் சாறைப் பருகி வந்தால், உடல் உஷ்ணம் குறையும். உடல் குளிர்ச்சி பெறும். வயிற்று வலி குணமாகும்.

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைச் சாறை நீரில் கலந்து, குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.

வெந்தயம்

வெந்தயத்தை ஊற வைத்து, அரைத்து வடிகட்டி அதனுடன் உப்பு சேர்த்து  குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.

ஓமம்

வெந்நீரில் ஓமத்தைக் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.

சீரகம்

சிறிது சக்கரை மற்றும் சீரகத்தை வாயில் போட்டு மென்றால் வயிற்று வலி குணமாகும்.

இதையும் படிக்கலாமே

கால் வெடிப்பு குணமாக -பித்த வெடிப்பு சரியாக-பாத வெடிப்பு Cream – Patha Vedippu kunamaga

வயிறு வலி குணமாக நாம் செய்ய வேண்டியது-Stomach pain Read More »

இரண்டே நாளில் வயிறு புண் சரியாக இதை பண்ணுங்க…

இரண்டே நாளில் வயிறு புண் சரியாக இதை பண்ணுங்க…

வயிறு  புண்

வயிறு புண் வர காரணம்

காலை உணவைத் தவிர்த்தல், தாமதமாக உணவு உண்ணல், காரம், புளிப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல் ஆகிய காரணங்களால் வயிற்றுப்புண் வருகிறது. வயிற்றில் வலி மற்றும் எரிச்சல் ஆகியவை வயிற்றுப்புண்ணின் அறிகுறியாகும்.

வயிறு புண் குணமாக

அதிமதுரம்

அரிசி வடித்த கஞ்சியில் அதிமதுரத்தைக் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

அதிமதுரம், சுக்கு, ஓமம் ஆகியவற்றை அரைத்து பொடியாக்கி நீரில் போட்டு  குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

தேங்காய்ப்பால்

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

கரும்பு சாறு

கரும்பு சாறில் சுக்கு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.

மாதுளை

மாதுளைப் பழச்சாறை தினமும் பருகி வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.

கீரை

மணத்தக்காளி கீரை மற்றும் மணத்தக்காளி வற்றலைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

அகத்தி கீரையைக் கூட்டாகவும், குழம்பாகவும் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.

மோர்

மோர் மற்றும் தயிரை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

மோரில் சீரகம், மிளகு, கறிவேப்பிலை, மஞ்சள் கலந்து குடித்தால்வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.

அருகம்புல் சாறு

அருகம் புல்லை அரைத்து, சாறு எடுத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.

நார்ச்சத்து

நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.

அதிகளவு நீரைப் பருகி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

இதையும் படிக்கலாமே

பயணத்தின் போது ஏற்படக்கூடிய வாந்தி கட்டுக்குள் வர இத செய்யுங்க போதும்-How to control vomit during travel

இரண்டே நாளில் வயிறு புண் சரியாக இதை பண்ணுங்க… Read More »

இனி வாயு பிரச்சனை வரவே வராது…

இனி வாயு பிரச்சனை வரவே வராது…

வாயு பிரச்சனை

வாயு வரக் காரணம்

உடலில் அதிகளவு வாயு சேர்வதால், மூட்டு வலி, மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, புளியேப்பம் என பல தொந்தரவுகள் வரக்கூடும். வாயு பிரச்சனையைச் சரிசெய்யக் கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.

வாயு குணமாக

தேங்காயை நன்றாக துருவிக்கொள்ளவும். அத்துடன், சீரகம் மற்றும் பெருங்காயம் கலந்து வாயில் போட்டு விழுங்கினால், வாயு தொல்லை நீங்கும்.

வாழைப்பழத்தை நறுக்கி அத்துடன் பெருங்காயம் கலந்து உருண்டையாக்கி வாயில் போட்டு விழுங்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்தால் வாயு நீங்கும்.

வேப்பம் பூவைக் காய வைத்து, வெந்நீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வாயு நீங்கும்.

ஓம விதைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், வாயு கோளாறு நீங்கும்.

திரிபுலா பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி குடித்தால் வாயு தொல்லை நீங்கும்.

எலுமிச்சை சாறில் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் வாயு தொல்லை நீங்கும்.

வெந்நீரில் பெருங்காயத்தை கலந்து குடித்து வந்தால் வாயு சார்ந்த பிரச்சனை நீங்கும்.

தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், எளிதில் செரிமானம் ஆகும். வாயுத் தொல்லை நீங்கும்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைப் பருகி வந்தால் வாயு நீங்கும்.

இதையும் படிக்கலாமே

சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமா? இந்த ஐந்து பொருட்கள் போதும்-Kidney stone karaiya

இனி வாயு பிரச்சனை வரவே வராது… Read More »

வேர்க்குருவா இனி வரவே வராது…Verkuru

வேர்க்குருவா இனி வரவே வராது…Verkuru

வேர்க்குரு

வெயில் காலம் வந்தாலே பலரும் வேர்க்குருவால் அவதிப்படுவர். வேர்க்குருவிலிருந்து தப்பிக்கக்கூடிய  எளிமையான வழியைக் காண்போம்.

வேப்பிலை

வேப்பிலையை நன்றாக அரைத்து, அதனை வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி, ஊறிய பின்னர் குளித்தால் வேர்க்குருவில் உள்ள கிருமிகள் அழியும். வேர்க்குருவும் குணமாகும்.

அருகம்புல்

அருகம்புல்லை நன்றாக அரைத்து, அதனுடன் மஞ்சள் கலந்து வேர்க்குரு உள்ள இடத்தில் பூசினால் வேர்க்குரு குணமாகும்.

சந்தனப்பொடி

சந்தனப்பொடியை ரோஸ் வாட்டருடன் கலந்து, வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால், வேர்க்குரு குணமாகும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி, அதனை வேர்க்குரு உள்ள இடத்தில் தடவினால் வேர்க்குரு குணமாகும்.

கொத்தமல்லி

கொத்தமல்லியை நன்றாக அரைத்து, அதனுடன் சந்தனம் மற்றும் ரோஸ்வாட்டர் கலந்து வேர்க்குருவின் மீது தடவினால் வேர்க்குரு குணமாகும்.

இதையும் படிக்கலாமே

வயிறு வலி குணமாக நாம் செய்ய வேண்டியது-Stomach pain

வேர்க்குருவா இனி வரவே வராது…Verkuru Read More »

Scroll to Top