அன்றாட வாழ்க்கை

அன்றாட வாழ்க்கை

கண் எரிச்சல் குணமாக – kan Erichal Nattu Maruthuvam

கண் எரிச்சல் குணமாக – kan Erichal Nattu Maruthuvam

கண் எரிச்சல் குணமாக

கண் எரிச்சல் குணமாக – kan Erichal Nattu Maruthuvam -உடல் சூட்டினால் கண் எரிச்சலானது ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர செல்போன் மற்றும் கணினியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் கண்ணில் வறட்சி ஏற்பட்டு அதனாலும் கண் எரிய வாய்ப்புண்டு. கண் எரிச்சலைக் குணப்படுத்தும் வழிகளைக் காணலாம்.

கண் எரிச்சல் குணமாக – Eye Problems in Tamil

வெங்காயம்

வெங்காயத்தை அரைத்துக்கொள்ளவும். மேலும், புளிய மரத்தின் இலைகளை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இவற்றை நல்லெண்ணயில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். அதன் மூலம் கண் எரிச்சலானது குணமாகும்.

நல்லெண்ணய்

நல்லெண்ணயைத் தலைக்குத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்து வந்தால், உடல் சூடு குறையும். அதன் மூலம் கண் எரிச்சலானது குணமாகும்.

முள்ளங்கி

கண் எரிச்சல் குணமாக

முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அத்துடன் சம அளவு தக்காளி சாறு மற்றும் வெள்ளரி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சீரகப் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இருமுறை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை ஆகியவை குணமாகும்.

வெந்தயம்

வெந்தயத்தை ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதனை, நன்றாக அரைத்து தலைக்குக் குளித்து வந்தால், உடல் சூடு குறையும். அதன் மூலம் கண் எரிச்சலானது குணமாகும்.

கண் எரிச்சல் குணமாக

நீண்ட நேரம் கணினி மற்றும் செல்போனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்களுக்கு சிறிது நேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும். உள்ளங்கையைத் தேய்த்து வெதுவெதுப்பாகி கண்ணில் ஒற்றி எடுக்க வேண்டும்.

இமைக்காமல் நீண்ட நேரம் கணினியைப் பார்ப்பதால் கண்கள் வறண்டு போகும். 20 நிமிடங்களில் 10 முறையாவது கண்களை இமைக்க வேண்டும். குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கணினி மற்றும் செல்போன் பிரைட்னஸ் அளவை உங்கள் கண்களுக்கு ஏற்றவாறு மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். அறையில் ஜன்னல் மற்றும் கணினி , லைட் இவ்வாறு வெளிச்சம் கூடுதலாக இருந்தால் அவற்றில் ஏதாவது ஒன்றைத் தவிர்க்க வேண்டும்.

பழச்சாறுகளை அவ்வப்போது குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் உஷ்ணம் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

குளிர்சாதன அறையில் நீண்ட நேரம் வேலை செய்வதாலும் கண்கள் வறண்டு போகும். எனவே, குளிர்சாதன அறையில் நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க் வேண்டும்.

இதையும் படிக்கலாமே –

1.இளநரை இனி வரவே வராது – Narai Mudi Karupaga

கண் எரிச்சல் குணமாக – kan Erichal Nattu Maruthuvam Read More »

கண்ணில் நீர் வடிதல் -கண் உறுத்தல் நீங்க பாட்டி வைத்தியம் – Kankatti Home Remedy

கண்ணில் நீர் வடிதல் -கண் உறுத்தல் நீங்க பாட்டி வைத்தியம் – Kankatti Home Remedy

கண்ணில் நீர் வடிதல்

கண்ணில் நீர் வடிதல் -கண் உறுத்தல் நீங்க பாட்டி வைத்தியம் – Kankatti Home Remedy – நீண்ட நேரம் கணினி மற்றும் செல்பேசி பார்ப்பதால், கண்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கண்களில் நீரானது வடியும்.

கண்ணில் நீர் வடியக் காரணம்

கண்ணில் சுரக்கும் நீரானது, இமைகளை மூடித் திறக்கும்போது கண்ணுக்கும் மூக்குக்கும் உள்ள குழாய் வழியாகத் தொண்டையில் இறங்கிவிடும். இந்த குழாயில் அடைப்பு ஏற்படும்போது கண்ணில் நிரம்பும் நீரானது கண்ணின் வழியாக வெளியே வழியத் தொடங்கிவிடும். 

கண் சிவத்தல்

கண்ணில் நீர் வடிதல்

அலர்ஜி காரணமாக கண்களில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதிகளவில் புகை அல்லது தூசியானது கண்களில் பட்டால்  கண்கள் சிவக்கும். மேலும், அரிப்பு உணர்வையும் உண்டாக்கும்.

கண்கட்டி Kankatti Home Remedy

கண்களில் பாக்டீரியா தொற்று காரணமாக கண்கட்டி உருவாகும். கண்ணுக்குள்ளே வரக்கூடிய கட்டிகளை இன்டர்னெல் ஹார்டியோலம் என்பர்.  கண் இமைக்கு மேலே கண்ணை ஒட்டி வெளியே வரக்கூடிய கட்டிகளை Stye என்பர் சிலருக்கு கண்ணுக்கு உள்ளே அதாவது கண் இமைகளில் உள்ளே சிறிய கட்டிகள் உருவாகும்.

கண் வீக்கம்

கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இது கண்களில் வீக்கத்தை மட்டுமே அதிகரிக்கும்.  கண் இமைகளை மூடி குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்களில் உள்ள வீக்கம் குறையும்.

கண் உறுத்தல் நீங்க பாட்டி வைத்தியம்

கண்ணில் நீர் வடிதல்

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் மற்றும் சீரக விதைகளை ஊறவைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் அந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், கண்ணில் உள்ள பாக்டீயா  தொற்று குறையும். கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.

பசும்பால்

பசும்பாலை சிறிதளவு கண்களில் விடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.

தயிர்

புளிக்காத பசு மாட்டு தயிரை கண்களில் விடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.

ரோஜா இதழ்

ரோஜா இதழை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் அந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், கண்ணில் உள்ள பாக்டீயா  தொற்று குறையும். கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.

திரிபலா பொடி

திரிபலா பொடியை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் அந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், கண்ணில் உள்ள பாக்டீயா  தொற்று குறையும். கண்ணில் நீர் வடிதல் குணமாகும். கண் சிவத்தல் முதலிய அனைத்து பிரச்சனையும் குணமாகும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லைக் கொண்டு கண்களை கழுவ பயன்படுத்தலாம். மஞ்சள் துாளை வெந்நீரில் கலந்துக்கொள்ள வேண்டும். ஒரு மெல்லிய துணியை அதில் நனைத்து, கண்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். அதனைக் கொண்டு கண்களில் பற்றுப் போட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.

இதையும் படிக்கலாமே –

  1. கண் எரிச்சல் குணமாக – kan Erichal Nattu Maruthuvam

கண்ணில் நீர் வடிதல் -கண் உறுத்தல் நீங்க பாட்டி வைத்தியம் – Kankatti Home Remedy Read More »

சுவையான தக்காளி ஊறுகாய் செய்யும் முறை -Tomato pickle

சுவையான தக்காளி ஊறுகாய் செய்யும் முறை -Tomato pickle

Tomato pickle

Tomato pickle- ஊறுகாய் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அதிலும் தக்காளி ஊறுகாய் என்றால், சொல்லவேத் தேவையில்லை. தக்காளியில் அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சத்து ஆகியவை உள்ளது.  மேலும், தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகளும் உள்ளது. மிக எளிதாக தக்காளி ஊறுகாய் செய்யும் முறையைப் பற்றி காணலாம்.

தேவையான பொருட்கள்

தக்காளி -2 கிலோ

மிளகாய்த்தூள்

உப்பு

நல்லெண்ணெய்

புளி- சிறிய எலுமிச்சை அளவு

கடுகு -ஒரு தேக்கரண்டி

பெருங்காயம்- ஒரு தேக்கரண்டி

தக்காளி ஊறுகாய் செய்யும் முறை -Tomato pickle

செய்முறை

நன்றாக பழுத்த தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர், அதனை மிக்ஸியில் போட்டுகொள்ள வேண்டும். அதனை நன்றாக அரைக்க வேண்டும். தக்காளி தோல் தென்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன், புளியையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்கவிட வேண்டும். பின்னர், மைய அரைத்து தக்காளி சாறை சேர்க்க வேண்டும்.

நன்றாக கிளறி பெருங்காயம், தனி மிளகாய்த்தூள, கல் உப்பு சேர்க்க வேண்டும்.
தக்காளியின் சாறு முழுவதும் வற்றி கெட்டிப்பதத்துக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். சாறு வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். உப்பு, காரம் தேவையெனில் மீண்டும் சேர்ந்துக்கொள்ள வேண்டும். நன்றாக கெட்டி பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆறவிட வேண்டும்.

காற்றுபுகாத கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும். தேவைப்படும் போது அதனை எடுத்து பயன்படுத்த வேண்டும். சாதத்தில் ஒரு டீஸ்பூன் தக்காளி ஊறுகாய் சேர்த்து குழந்தைகளுக்கு மதிய உணவு கலந்து கொடுத்தால் போதும் நன்றாக சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே-

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்-Peerkangai benefits

சுவையான தக்காளி ஊறுகாய் செய்யும் முறை -Tomato pickle Read More »

மணமணக்கும் பாசிப்பயிறு லட்டு செய்யும் முறை -Green gram ladoo

மணமணக்கும் பாசிப்பயிறு லட்டு செய்யும் முறை -Green gram ladoo

Green gram ladoo

Green gram ladoo-புரதச்சத்து மிகுந்த பாசிப்பயிறு லட்டை குழந்தைகளுக்குச் செய்து கொடுத்தால், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். பாசிப்பயிறு லட்டு செய்யும் முறையைக் காணலாம்.

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு – இரண்டு கிண்ணம்

சர்க்கரை –  தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

ஏலக்காய் – 5

முந்திரி உடைத்தது – 40 கிராம்

பாசிப்பயிறு லட்டு செய்யும் முறை

செய்முறை:

ஒரு வாணலில் நெய்யை ஊற்றிக்கொள்ளவும். பின்னர், அதில் முந்திரியைப் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலில் பாசிப் பருப்பை போட்டு வாசனை வரும் வரை  வறுத்துக்கொள்ளவும். பின்னர்,  ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும். 

அரைத்த மாவை நன்றாக சலித்து கொள்ளவும். மிக்சியில் சர்க்கரையை போட்டு நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு தட்டில் அரைத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் , வறுத்த முந்திரி அனைத்தையும் போட்டுக்கொள்ளவும்.  நன்றாக கலந்து வைக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி நன்றாக உருக்கவும். நெய் கருகாமல் சூடானவுடன் அதை மாவின் மேல் ஊற்ற வேண்டும். மாவை வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் நன்றாக  லட்டு பிடித்து ஆற விடவும். அவ்வளவுதான் சுவையான பாசிப்பயிறு லட்டு தயார்.

இதையும் படிக்கலாமே –

சுவையான தக்காளி ஊறுகாய் செய்யும் முறை -Tomato pickle

மணமணக்கும் பாசிப்பயிறு லட்டு செய்யும் முறை -Green gram ladoo Read More »

நீங்கள் உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறீர்களா! …உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் பாதாம் பிசின், எலுமிச்சை பழச்சாறு -Badam Pisin

நீங்கள் உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறீர்களா! …உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் பாதாம் பிசின், எலுமிச்சை பழச்சாறு -Badam Pisin

badam pisin

Badam pisin-உடல் உஷ்ணத்தால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதுவும், இந்த கோடைக்காலம் என்றால் சொல்லவேத் தேவையில்லை. உடல் உஷ்ணத்தைக் குறைக்கக்கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.

தேவையான பொருட்கள்

badam pisin

எலுமிச்சைப் பழம் -1

பாதாம் பிசின் -1

தேன் – ஒரு தேக்கரண்டி

பாதாம் பிசின் செய்முறை

நாட்டு மருந்து கடைகளில் பாதாம் பிசினானது கிடைக்கும். பாதாம் பிசினை வாங்கி ஒரு துண்டை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் இரவு முழுக்க அதை அப்படியே வைக்க வேண்டும்.

மாறுநாள் காலையில் பாதாம் பிசின் ஜெல்லியைப்போல் இருக்கும்.  பாதாம் பிசின் ஜெல்லி உடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊாற்றி நன்றாக கலக்கவும்.

பின்னர், இதில் எலுமிச்சை சாறைப் பிழிந்துவிடவும். பின்னர், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து நன்றாக கலக்கவும்.

பாதாம் பிசின் நன்மைகள்

இதனை பருகி வந்தால் உடல் உஷ்ணமானது உடனடியாக குறையும். இதனை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே-

அர்ச்சனையாக செய்யப்படும் மலர்கள்…அவற்றின் பயன்கள் -Archanai malargal

நீங்கள் உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறீர்களா! …உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் பாதாம் பிசின், எலுமிச்சை பழச்சாறு -Badam Pisin Read More »

அபிஷேகமாக பொருட்களும் …அவற்றின் பயன்களும்….-அபிஷேக பொருட்கள் பலன்கள்

அபிஷேகமாக பொருட்களும் …அவற்றின் பயன்களும்….-அபிஷேக பொருட்கள் பலன்கள்

அபிஷேக பொருட்கள் பலன்கள்

அபிஷேக பொருட்கள் பலன்கள்-கோவிலுக்குச் சென்றாலே, மனமானது அமைதி பெறும். மனதில் உள்ள பாரங்கள் மற்றும் குழப்பங்கள் எல்லாம் இறைவனைக் கண்டவுடனே விலகிவிடும். பக்திக்கு அந்த அளவிற்குச் சிறப்பு உண்டு. இறைவனுக்குப் பலவகையான பொருட்களால், அபிஷேகம் செய்வது மரபு. அத்தகைய அபிஷேகப் பொருட்களின் வகைகளையும், அவற்றின் பயன்களையும் அறிவோம் வாருங்கள்.

அபிஷேக பொருட்களும், அவற்றின் பயன்களும்…

அபிஷேக பொருட்கள் பலன்கள்

நன்னீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், உள்ளத்தில் தெளிவு, அறிவில் தெளிவு, பேச்சில் தெளிவு ஏற்படும். பேரும், புகழும் கிடைக்கும்.

நல்லெண்ணெயால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், எடுத்த காரியம் கைகூடும். காரியத்தடை நீங்கும்.  தொழிலில் லாபம் பெருகும்.

பச்சரிசி மாவால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், பணப்புழுக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். தொழிலில் லாபம் பெருகும்.

திருமஞ்சனத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், நல்ல நட்பு கிடைக்கும். உயர்ந்த பதவி உள்ளவரிடமிருந்து உதவி கிடைக்கும்.

பசும்பாலால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், நீண்ட ஆயுள் பெருகும். உடலானது ஆரோக்கியமாகவும், நோய் நொடி இன்றியும் இருக்கும்.

பசுந்தயிரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உள்ளத்தில் அமைதி நிலவும். வெளியுலகில் பேரும், புகழும் கிடைக்கும்.

பஞ்சாமிர்த்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், உடலிலும், மனதிலும் பலம் பெருகும். செயலில் வெற்றி கிடைக்கும்.

தேனால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், இன்பமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெருகும்.

நெய்யால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், முக்தி பேறு கிடைக்கும். மனத்தெளிவு கிடைக்கும்.

சர்க்கரையால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், எதிரியை வெல்லக்கூடிய ஆற்றல் கிடைக்கும். பலம் அதிகரிக்கும்.

இளநீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால், பிள்ளைகளால் மகிழ்ச்சியும், புகழும் கிடைக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி அடைவார்கள்.

இதையும் படிக்கலாமே-

தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளும், அவற்றின் சிறப்பும்-Danam kodukka vendiya porutkal

அபிஷேகமாக பொருட்களும் …அவற்றின் பயன்களும்….-அபிஷேக பொருட்கள் பலன்கள் Read More »

மகிழ்ச்சியையும், மங்கலத்தையும் பெருக்கக்கூடிய வளையல்… வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா-Valaiyal

மகிழ்ச்சியையும், மங்கலத்தையும் பெருக்கக்கூடிய வளையல்… வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா-Valaiyal

valaiyal

valaiyal-சிறிய குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரும் விரும்பி அணியக்கூடிய ஒரு அணிகலன் வளையல். என்னந்தான் விலையுயர்ந்த தங்க வளையலை அணிந்தாலும், கைகளுக்குக் கூடுதல் அழகையும், மனதிற்கு மகிழ்ச்சியையும், காதுக்கு இனிய ஓசைகளையும் தரக்கூடியது கண்ணாடி வளையல்தான். கண்ணாடி வளையலின் சிறப்புகளைக் காண்போம்.

மன அமைதியைக் கொடுக்கும் வளையல்…

கண்ணாடி வளையலைக் கைநிறைய அணியும் போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வளையல்கள் ஒன்றோன்று உரசும் போது ஏற்படக்கூடிய ஓசை மன அமைதியைக் கொடுக்கும். வளையலை அணிபவருக்கு மட்டும் இன்றி உடன் இருப்பவர்களுக்கும் அது நேர்மறை எண்ணங்களை வளர்க்கும். மனதில் மகிழ்ச்சியைப் பெருக்கும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும் வளையல்…

கண்ணாடி வளையல் அணியும் போது மனமானது மிக லேசாக இருக்கும். மன அழுத்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் பறந்தோடும். வீண்வாக்குவாதம் குறைந்து வளமான வாழ்க்கை அமையும்.

 சுப நிகழ்ச்சிகள்

சுப நிகழ்ச்சிகளில் நிச்சயமாக கண்ணாடி வளையல் இடம்பெறும். கண்ணாடி வளையலானது மங்கலம் நிறைந்த ஒரு பொருளாகக் கருதப்படுகிறது. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் பெண்களு்கு கண்ணாடி வளையல் நிச்சயம் வழங்கப்படும்.

வளைகாப்பு

valaiyal

பெண்கள் கருவுற்றிருக்கும் போது வளைகாப்பு நடத்தப்படுவது மரபு. வளைகாப்பானது பிரசவத்தின் போது தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். அத்தகைய நிகழ்ச்சியில் கருவுற்றப் பெண்ணுக்கு கைநிறைய கண்ணாடி வளையல் அணிவது உண்டு.

கண்ணாடி வளையல் அவர்கள் அணியும்போது  அந்த வளையலின் ஓசையைக் குழந்தைகள் கேட்கும். மேலும், குழந்தையின் கவன திறன் அதிகரிக்கும். புத்திக்கூர்மை, காது கேட்கும் திறன் , கவனிக்கும் திறன் என அனைத்துமே அதிகரிக்கும். வளையலின் ஓசை கேட்கும் போதெல்லாம், மிகுந்த பாதுகாப்போடு குழந்தை வயிற்றில் மகிழ்ச்சியாக இருக்கும்.

செல்வம் பெருகும்

பெண்கள் கண்ணாடி வளையல் அணிவதன் மூலம் வீட்டில் செல்வ வளமானது பெருகும். மகா லட்சுமி தேவி மகிழ்ந்து வீட்டில் நிலைத்திருப்பார். பணக்கஷ்டம் முழுவதும் நீங்கும்.

கோவில்

கோவில்களில் அம்மனுக்கு கண்ணாடி வளையலை வாங்கிக்கொடுப்பதன் மூலம் வீட்டில் மங்கலம் பெருகும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அம்மன் அணிந்த வளையலை, தானமாகப் பெற்று அணிவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

தீய சக்தி

வீடு முழுக்க வளையல் ஓசை கேட்பதால், அந்த வீட்டில் கடவுளின் ஆசியும், நம் முன்னோர்களின் ஆசியும் என்றும் நிலைத்திருக்கும். எனவே, அங்கு தீய சக்திகள் அண்டவே அண்டாது. தீய சக்திகள் பறந்தோடும்.

இதையும் படிக்கலாமே –

நீங்கள் உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறீர்களா! …உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் பாதாம் பிசின், எலுமிச்சை பழச்சாறு -Badam pisin

மகிழ்ச்சியையும், மங்கலத்தையும் பெருக்கக்கூடிய வளையல்… வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா-Valaiyal Read More »

மணமணக்கும் புதினா துவையல் செய்யும் முறை-pudina thuvayal

மணமணக்கும் புதினா துவையல் செய்யும் முறை-pudina thuvayal

pudina thuvayal

புதினா துவையல் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பதார்த்தம் ஆகும். காலை சிற்றுண்டிகளுக்கும், மதிய உணவிற்கும் பதார்த்தமாக இந்த புதினா துவையல் இருக்கும். சத்து நிறைந்த இந்த புதினா துவையலைச் செய்யும் முறையைக் காணலாம்.

புதினா துவையல்

தேவையான பொருட்கள்

pudina thuvayal

புதினா இலைகள் – ஒரு கிண்ணம்

உளுத்தம் பருப்பு –2 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் – 10

புளி – ஒரு சிறிய உருண்டை அளவு

வெல்லம்  – 1 சிறிய துண்டு

தேங்காய்– 2 தேக்கரண்டி

உப்பு – 1/2

புதினா துவையல் செய்யும் முறை

ஒரு வாணலில் உளுத்தம் பருப்புகளையும், சிவப்பு மிளகாய்களையும் போட்டுக்கொள்ளவும். பொன்னிறமாக வரும் வரை அவற்றை வறுக்க வேண்டும்.

பிறகு , அதில் புளியைப் போட்டுக்கொள்ளவும்.  பின்னர், சுத்தம் செய்த புதினா இலைகளைப் போட்டுக்கொள்ளவும்.   புதினா இலைகள் வதங்கும் வரை மிதமான வெப்பத்தில் வதக்க வேண்டும்.

பின்பு , அடுப்பிலிருந்து புதினா வாணலை இறக்கி அதை ஆற விடவும். பின்னர், தேங்காய் ,வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.  இந்த முறையில் புதினா துவையலை செய்யும் போது, துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.

இதில் மிளகாய், புளி மற்றும் உப்பு ஆகிய மூன்றையும் சரியான விதத்தில் சேர்க்கும் போது துவையல் மிகவும் நன்றாக இருக்கும். தேங்காய் மற்றும் வெல்லத்தை சேர்ப்பதால் புதினா துவையல் சுவையாக இருக்கும்.

மணமணக்கும் இந்த புதினா துவையலைச் சாப்பிட்டு வந்தால், வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.

இதையும் படிக்கலாமே –

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்யும் முறை…-thakkali sadam seivathu eppadi

மணமணக்கும் புதினா துவையல் செய்யும் முறை-pudina thuvayal Read More »

உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் புதினாடீ செய்யும் முறை…-Pudina tea

உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் புதினாடீ செய்யும் முறை…-Pudina tea

Pudina tea

Pudina tea-புதினாடீ குடிப்பதன் மூலம் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். புதினா டீயில் பல மருத்துவக்குணங்கள் உள்ளது. புதினா டீயைக் குடிப்பதன் மூலம் உடல் எடையானது குறையும். புதினா டீ குடித்து வந்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும். புதினா டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து  வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. புதினா டீயைச் செய்யும் முறையைக் காணலாம்.

புதினாடீ

தேவையான பொருட்கள்:

புதினா இலை

தேயிலை

தேன் அல்லது பனங்கற்கண்டு

புதினாடீ செய்யும் முறை

Pudina tea

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவும். பின்னர்,  புதினா இலைகளை போடவும். பிறகு தேயிலை சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் சுண்டியதும் வடிகட்டிக்கொள்ளவும். பின்னர் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகவும்.

இந்த புதினா டீயைப் பருகுவதன் மூலம் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் பறந்தோடும்.

இதையும் படிக்கலாமே-

சுவையான புதினா சாதம் செய்யும் முறை…-Pudina rice

உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் புதினாடீ செய்யும் முறை…-Pudina tea Read More »

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்யும் முறை…-thakkali sadam seivathu eppadi

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்யும் முறை…-thakkali sadam seivathu eppadi

thakkali sadam seivathu eppadi

தக்காளி சாதம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். குக்கரில் தக்காளி சாதம் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும். எல்லோரும் மிகவும் விரும்பி சாப்பிட்டு மகிழ்வர். தக்காளி சாதம் செய்யும் முறையைப் பற்றி காணலாம்.

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:

thakkali sadam seivathu eppadi

பெரிய தக்காளி – 5

பச்சை மிளகாய் – 3

மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா – கால் தேக்கரண்டி

பட்டை, கிராம்பு –  1

நெய் – ஒரு தேக்கரண்டி

அரிசி – 2 கப்

சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

புதினா தழை – ஒரு கைப்பிடி

மல்லித் தழை – ஒரு கைப்பிடி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி

தக்காளி சாதம் செய்யும் முறை

சாப்பாட்டு அரிசியை நன்கு சுத்தம் செய்து அலசி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் அரிசியை ஊற வேண்டும். பின்னர், தக்காளி பழங்களை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர்,பச்சை மிளகாய்களை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். புதினா, கொத்தமல்லி தழைகளை நன்கு தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும். குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் தேவையான அளவிற்கு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் காய்ந்தப்பிறகு அதில் பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு, பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள புதினா தழை மற்றும் மல்லித்தழை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். 2 கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்தல் வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு குக்கர் மூடியை போட்டு மூட வேண்டும். இரண்டு விசில் வரும் வரை காத்திருக்க வேண்டும். இரண்டே விசிலில் சுவையான அற்புதமான தக்காளி சாதம் தயார். பிரியாணி சுவையில் தக்காளி சாதம் 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

இதையும் படிக்கலாமே-

சுவையான புதினா சட்னி செய்யும் முறை…-pudina chutney in tamil

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்யும் முறை…-thakkali sadam seivathu eppadi Read More »

சுவையான புதினா சாதம் செய்யும் முறை…-Pudina rice

சுவையான புதினா சாதம் செய்யும் முறை…-Pudina rice

Pudina rice

புதினா சாதம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.புதினா சாதத்தில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. வயிறு சார்ந்த பிரச்சகளை அனைத்தையும் இந்த புதினா சாதம் விரட்டியடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய புதினா சாதத்தைச் செய்யும் முறையைக் காணலாம்.

புதினா சாதம்

தேவையான பொருட்கள்

புதினா – ஒரு கிண்ணம்

புளி சிறிதளவு

பச்சைமிளகாய் -2

இஞ்சி -இரண்டு துண்டு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் -ஒரு தேக்கரண்டி

கடுகு- ஒரு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு-ஒரு தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் -2

முந்திரி பருப்பு -10

உப்பு தேவையான அளவு

புதினா சாதம் செய்யும் முறை

Pudina rice

ஒரு மிக்சியில்  புதினாவைச் சேர்க்கவும் .அதனுடன் சிறிதளவு புளி சேர்க்கவும். பிறகு, இரண்டு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும். பின்னர், ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணைய் சேர்க்கவும். எண்ணைய் காய்ந்தப்பிறகு ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

பிறகு அதனுடன் முந்திரியை சேர்த்து வறுக்கவும். பின்பு அதனுடன் அரைத்த புதினா விழுதை சேர்த்து வதக்கவும். வதக்கிய பிறகு அதனுடன் வேகவைத்த சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக  கிளறவும். சுவையான புதினா சாதம் தயார்.

இதையும் படிக்கலாமே-

சுவையான புதினா சட்னி செய்யும் முறை…-pudina chutney in tamil

சுவையான புதினா சாதம் செய்யும் முறை…-Pudina rice Read More »

pudina chutney in tamil

சுவையான புதினா சட்னி செய்யும் முறை…-pudina chutney in tamil

சுவையான புதினா சட்னி செய்யும் முறை…-pudina chutney in tamil

pudina chutney in tamil

புதினா சட்னி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சட்னியாகும்.  மிகவும் சுவையான இந்த சட்னியில் சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. புதினா சட்னி செய்யும் முறையைக் காணலாம்.

புதினா சட்னி – pudina chutney in tamil

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு –ஒரு தேக்கரண்டி,

சின்ன வெங்காயம் – 15

பூண்டு பற்கள் – 4

இஞ்சி – 2 துண்டு

பச்சை மிளகாய் – 5

காய்ந்த மிளகாய் – மூன்று

புதினா – இரண்டு கைப்பிடி

மல்லி – ஒரு கைப்பிடி

தேங்காய் துருவல் – ஒரு கிண்ணம்

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

கட்டி பெருங்காயம் – ஒரு துண்டு

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – அரை தேக்கரண்டி

உளுந்து – அரை தேக்கரண்டி

வர மிளகாய் – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

புதினா சட்னி செய்யும் முறை

ஒரு வாணலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டு கட்டி பெருங்காயத்தை சேர்த்து பொரிக்க வேண்டும். பொரிந்த பெருங்காயத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டி அளவிற்கு உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

புதினா சட்னிக்கு உளுத்தம் பருப்பு அதிகம் சுவையாக இருக்கும். உளுந்து பொன்னிறமாக மாறியதும தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் சேர்க்கும் பொழுது புதினா சட்னி ருசி தரும்.

இதனுடன் பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு நன்கு வதங்கிய பிறகு , இரண்டு துண்டு அளவிற்கு இஞ்சியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வறுபட்டதும் நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதே அளவிற்கு ஒரு கைப்பிடி மல்லி தழைகளை சேர்க்க வேண்டும். இவை நன்றாக வதக்க வேண்டும். பிறகு ஒரு கப் அளவிற்கு தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் நன்கு வறுபட்டதும் அடுப்பை அணைத்து ஆற வைக்க வேண்டும். இவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில், அவற்றை போட்டுக்கொள்ள வேண்டும்.

தேவையான அளவிற்கு உப்பு போட்டுக்கொள்ள வேண்டும். சிறிய அளவு புளியை அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொரித்து வைத்துள்ள கட்டி பெருங்காயம் மற்றும் உளுந்தம் பருப்பையும் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

 தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை தாளித்து புதினா சட்னியுடன் சேர்த்துக்கொள்ளவும்.  சுவையான புதினா சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே-

உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் புதினாடீ செய்யும் முறை…-Pudina tea

சுவையான புதினா சட்னி செய்யும் முறை…-pudina chutney in tamil Read More »

முகப்பொலிவு பெற இந்த மூன்று பொருட்கள் போதும்… பத்தே நொடியில் முகமானது பொலிவு பெறும்…- Mugam polivu pera

முகப்பொலிவு பெற இந்த மூன்று பொருட்கள் போதும்… பத்தே நொடியில் முகமானது பொலிவு பெறும்…- Mugam polivu pera

Mugam polivu pera

Mugam polivu pera-அனைவரும் பொலிவான முகத்தையே விரும்புகின்றனர். அதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டும் பயன் இல்லாமல் அவதிப்படுகின்றனர். வெயிலில் அலைவதாலும், முகப்பருக்களின் வடுக்களாலும் முகமானது தனது பொலிவை இழக்கிறது.

முகமானது பொலிவைப் பெற இந்த மூன்று பொருட்கள் போதும்… பத்தே நொடியில் முகமானது  பொலிவைப் பெறும்.

முகப்பொலிவு பெற

தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள் -இரண்டு தேக்கரண்டி

பால்- ஒரு தேக்கரண்டி

தேன்-ஒரு தேக்கரண்டி

செய்முறை

Mugam polivu pera

ஒரு காய்ந்த பாத்திரத்தில் மஞ்சள் தூளை இரண்டு தேக்கரண்டி கொட்டிக்கொள்ளவும். மஞ்சள் தூளை நன்றாக பொன்னிறமாக வரும் வரை வறுத்துக்கொள்ளவும். மஞ்சள் தூளை வறுத்தப்பிறகு, அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டிக்கொள்ளவும்.

வறுத்த மஞ்சள் தூளுடன் ஒரு தேக்கரண்டி பாலை ஊற்றி, நன்றாக கலக்கவும். பின்னர், ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவிக்கொள்ளவும். நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் முகத்தை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

முகத்தில் உள்ள கருமை முழுவதுமாக நீங்கி, முகமானது பொலிவைப் பெறும். இந்த கலவையில் உள்ள மஞ்சள் தூளானது முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். பாலானது, சருமத்திற்கு மென்மையைத் தரும். மேலும், தேனானது முகத்திற்கு பொலிவைத் தரும். இந்த கலவையை வாரம் இரண்டு முறை முகத்திற்குத் தேய்த்து வந்தால், முகமானது பொலிவைப் பெறும்.

இதையும் படிக்கலாமே-

தோஷங்களை நிவர்த்தி செய்ய செல்ல வேண்டிய பரிகாரத் தலங்கள்…Dosham nivarthi aga

முகப்பொலிவு பெற இந்த மூன்று பொருட்கள் போதும்… பத்தே நொடியில் முகமானது பொலிவு பெறும்…- Mugam polivu pera Read More »

தொப்பையைக் கரைக்கும் ஆப்பிள் டீ செய்யும் முறை…-Apple tea

தொப்பையைக் கரைக்கும் ஆப்பிள் டீ செய்யும் முறை…-Apple tea

Apple tea

Apple tea-ஆப்பிள் டீயில் பல நன்மைகள் உள்ளது. ஆப்பிள் டீயைக் குடித்து வந்தால் தொப்பை கரையும். ஆப்பிள் டீயைக் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். மேலும், வயிறு சார்ந்த உபாதைகள், மலச்சிக்கல், வாயு என அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். அத்தகைய ஆப்பிள் டீயைச் செய்யும் முறையைப் பற்றிக் காணலாம்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள்

டீ பேக்

எலுமிச்சை சாறு

இலவங்கப்பட்டை

ஆப்பிள் டீ செய்யும் முறை

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதில் டீ பேக்கைப் போடவும். சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறை அதில் பிழிந்துவிடவும். இந்த பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். மற்றொரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள ஆப்பிள் துண்டுகளைப் போட்டுக்கொள்ளவும். அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

 தண்ணீர் கொதித்தப்பிறகு, அதில் இலவங்கப்பட்டையைச் சேர்க்கவும். இந்த தண்ணீரை எலுமிச்சை சாறு கலந்த தண்ணீருடன் கலந்துக்கொள்ளவும். பின்னர், வடிகட்டிக்கொள்ளவும். இந்த ஆப்பிள் டீயை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். தொப்பையானது குறையும். மேலும், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

இதையும் படிக்கலாமே –

உடலை ஆரோக்கியமாக வைக்கும் சங்குப்பூ டீ செய்யும் முறை…sangu poo benefits in tamil

தொப்பையைக் கரைக்கும் ஆப்பிள் டீ செய்யும் முறை…-Apple tea Read More »

உடலை ஆரோக்கியமாக வைக்கும் சங்குப்பூ டீ செய்யும் முறை…sangu poo benefits in tamil

உடலை ஆரோக்கியமாக வைக்கும் சங்குப்பூ டீ செய்யும் முறை…sangu poo benefits in tamil

sangu poo benefits in tamil

sangu poo benefits in tamil-மிக எளிதாக கிடைக்கும் சங்குப்பூவில் பல மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளது. சங்குப்பூ டீ செய்து குடிப்பதன் மூலம், உடலானது ஆரோக்கியமாக இருக்கும். காக்காட்டான் என அழைக்கப்படும் சங்குப்பூவில் டீ செய்வது எவ்வாறு என்பதைப் பற்றிக் காணலாம்.

தேவையான பொருட்கள்

சங்குப்பூ

கருப்பட்டி

எலுமிச்சை சாறு

சங்குப்பூ டீ செய்யும் முறை

sangu poo benefits in tamil

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் சேகரித்து, வைத்துள்ள சங்குப்பூவை அதில் போட்டுக்கொள்ளவும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் தண்ணீர் நீல நிறமாக மாறியதைக் காண முடியும்.

 பின்னர், எலுமிச்சை சாறை கலந்துக்கொள்ளவும். பிறகு, கருப்பட்டி சேர்த்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

இந்த சங்குப்பூ டீயைக் குடித்து வந்தால், தோல் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும். ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த சங்குப்பூ டீயைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

இதையும் படிக்கலாமே-

தொப்பையைக் கரைக்கும் ஆப்பிள் டீ செய்யும் முறை…-Apple tea

உடலை ஆரோக்கியமாக வைக்கும் சங்குப்பூ டீ செய்யும் முறை…sangu poo benefits in tamil Read More »

Scroll to Top